Thursday, September 25, 2008

Question and Answer - AMR- This week Kumudam Jothidam

திரு...................
பெருந்துறை.

கேள்வி : எனக்கு வயது 57. என் மனைவிக்கு வயது 50. எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். எனது மூத்த மகள் 2003-ல் எங்களுக்குத் தெரியாமல் ஒரு கிறிஸ்தவப் பையனைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டு விட்டாள். இந்தச் சம்பவத்தால் எங்களது பெற்றோர், உடன்பிறந்தோர், நண்பர்கள் என அனைவரும் எங்களை விட்டு விலகி விட்டனர். எனது தாய் காலமானபோது, அந்திமக்கிரியைகூட நான் செய்யக்கூடாது என்று எனது தந்தையும், சகோதரிகளும் ஊரார் முன் தடுத்து நிறுத்தி அவமானப்படுத்தினார்கள்.

கிறிஸ்தவப் பையனைக் காதல் திருமணம் செய்துகொண்ட எனது மூத்த மகள் மூன்றாவது மாதத்திலேயே கர்ப்பிணியாகி எங்களிடமே திரும்பி வந்துவிட்டாள். 2004-ல் அவளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அவள் காதலித்துக் கைப்பிடித்த அந்தக் கிறிஸ்தவ கணவனோ அல்லது அவனைச் சார்ந்தவர்களோ குழந்தையைக்கூட வந்து பார்க்கவில்லை. காவல்துறையிடம் அவர்களுக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, அவளது கணவன் வீட்டார் நீதிமன்றத்தில் விவாகரத்து பெறுவதற்கான ஒப்பந்தம் தயார் செய்து என் மகளை ஒதுக்கி வைத்துவிட்டனர். எங்களுக்குப் பணபலமோ அல்லது ஆள்பலமோ இல்லாததால் விதி விட்ட வழி என்று வாழ்ந்து வந்தோம். இக்காலகட்டத்தில் எனது மகள், தான் செய்த தவறை நினைத்து தற்கொலைக்கு முயன்றாள். தக்க தருணத்தில் அவளைக் காப்பாற்றி விட்டோம்.

2006-ல் என் மகள், நான் எவ்வளவோ புத்திமதி கூறியும் கேட்காமல், மீண்டும் அவளது கிறிஸ்தவக் கணவனுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தாள். குழந்தையை மட்டும் நாங்கள் வளர்த்து வந்தோம். பேரனைக் கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்வதற்காக என் மகளை அடித்துத் துன்புறுத்தி, எங்களிடம் இருந்த பேரனை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டனர்.

எங்களுக்கு ஆறுதல் கூற ஒரு ஜீவனும் இல்லாத நிலையில் தங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன். எங்கள் பேரன் எங்களிடம் திரும்பி வருவானா? எனது கடன் தொல்லைகள் எப்போது தீரும்? முதல் மகள் ஒரு கிறிஸ்தவப் பையனை மணந்ததால் தடைபட்டுள்ள எனது இரண்டாவது மகளின் திருமணம் எப்போது நடைபெறும்?

பதில் :மதமாற்றம் என்ற தீயில் கருகித் துடிக்கும் இந்துக் குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாம் ஏற்கெனவே பலமுறை ஆதாரபூர்வமான புள்ளிவிவரங்களுடன் விவரித்துள்ளபடி மதமாற்ற முயற்சிகளில் ஒன்றுதான், இந்துப் பெண்களைக் காதலிக்கும்படியும், அதன்மூலம் அப்பெண்களை மதமாற்றம் செய்யும்படியும் அவர்களது வாரப் பிரார்த்தனைக் கூட்டங்களில் வற்புறுத்தி வருவதும் அனைவருக்கும் தெரியும். இது மிகப் பெரிய சமூகப் பிரச்சினையாக ஏராளமான இந்துக் குடும்பங்களில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் விளைவுதான், இதுவரை மதமாற்றம் எனும் திட்டமிட்ட அட்டூழியத்தைப் பொறுத்துவந்த இந்துக்கள், இனி பொறுக்க இயலாத மனநிலையில் இப்போது உள்ளனர்.

`மதமாற்றத்தின் மூலம் இந்து சமூகத்தை அழிப்பதற்கு எங்களுக்குப் பாதுகாப்பு தரவேண்டும்' என்றல்லவா மற்ற சமூகத்தினர் கேட்கிறார்கள்! இது எவ்விதத்தில் நியாயமாகும்? எத்தனை காலம்தான் இந்த அநீதியை மக்கள் பொறுத்துக்கொள்வார்கள்? ஒருவர் விருப்பப்பட்டால் எந்த மதத்திற்கு வேண்டுமானாலும் மாறட்டும். ஆனால் வெளிநாடுகளிலிருந்து பணத்தைக் கொண்டுவந்து குவித்து, உலகின் ஒப்பற்ற இந்து மதத்தைப் பற்றித் தரக்குறைவாகப் பேசி ஏதோ தங்கள் மதம் ஒன்றுதான் மதம் என்றும், அதுமட்டும்தான் சொர்க்கத்தைத் தரும் என்றும் பிரசாரம் செய்து வரும் ஆணவத்தை இனியும் மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுமென்று சுயநலம் பிடித்த நம் அரசியல்வாதிகள் எதிர்பார்த்தால் அது நடக்காது. இதுவரை மதமாற்றம் செய்திருப்பதோடு திருப்தி அடையட்டும். இனி வேண்டாம்.

இவர்களுக்குத் துணிவிருந்தால் சவுதி அரேபியாவிலோ அல்லது எகிப்திலோ அல்லது ஈரானிலோ அல்லது துருக்கியிலோ மதம் மாற்றம் செய்து பார்க்கட்டுமே! செய்வார்களா? முயற்சி செய்தால் இவர்கள் தலை இவர்கள் கழுத்திலிருக்காது என்பது இவர்களுக்குத் தெரியும். இந்தியர்கள்தான் இளிச்சவாயர்கள்! இங்குள்ள அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கமுடியும் என்ற ஆணவத்தினால்தான் மதமாற்ற முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

நிற்க, ஏமாற்றத்திற்குள்ளான உங்கள் மகளை நினைத்து நாங்கள் மிகவும் மனம் வருந்துகிறோம். அக்கிரமத்தை உடனுக்குடன் அழித்து தர்மத்தை நிலை நாட்டுபவர் ஸ்ரீயோக நரசிம்மன்! அவரைப் பூஜித்து வாருங்கள். விரைவில் நல்வழிகாட்டுவார். 2009 சித்திரை முடிவதற்குள் தங்கள் இரண்டாவது மகளுக்கு திருமணம் நடந்துவிடும். கவலைப்படாதீர்கள்.

No comments: