Thursday, September 25, 2008

Question and Answer - AMR- This week Kumudam Jothidam

திரு...................
பெருந்துறை.

கேள்வி : எனக்கு வயது 57. என் மனைவிக்கு வயது 50. எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். எனது மூத்த மகள் 2003-ல் எங்களுக்குத் தெரியாமல் ஒரு கிறிஸ்தவப் பையனைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டு விட்டாள். இந்தச் சம்பவத்தால் எங்களது பெற்றோர், உடன்பிறந்தோர், நண்பர்கள் என அனைவரும் எங்களை விட்டு விலகி விட்டனர். எனது தாய் காலமானபோது, அந்திமக்கிரியைகூட நான் செய்யக்கூடாது என்று எனது தந்தையும், சகோதரிகளும் ஊரார் முன் தடுத்து நிறுத்தி அவமானப்படுத்தினார்கள்.

கிறிஸ்தவப் பையனைக் காதல் திருமணம் செய்துகொண்ட எனது மூத்த மகள் மூன்றாவது மாதத்திலேயே கர்ப்பிணியாகி எங்களிடமே திரும்பி வந்துவிட்டாள். 2004-ல் அவளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அவள் காதலித்துக் கைப்பிடித்த அந்தக் கிறிஸ்தவ கணவனோ அல்லது அவனைச் சார்ந்தவர்களோ குழந்தையைக்கூட வந்து பார்க்கவில்லை. காவல்துறையிடம் அவர்களுக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, அவளது கணவன் வீட்டார் நீதிமன்றத்தில் விவாகரத்து பெறுவதற்கான ஒப்பந்தம் தயார் செய்து என் மகளை ஒதுக்கி வைத்துவிட்டனர். எங்களுக்குப் பணபலமோ அல்லது ஆள்பலமோ இல்லாததால் விதி விட்ட வழி என்று வாழ்ந்து வந்தோம். இக்காலகட்டத்தில் எனது மகள், தான் செய்த தவறை நினைத்து தற்கொலைக்கு முயன்றாள். தக்க தருணத்தில் அவளைக் காப்பாற்றி விட்டோம்.

2006-ல் என் மகள், நான் எவ்வளவோ புத்திமதி கூறியும் கேட்காமல், மீண்டும் அவளது கிறிஸ்தவக் கணவனுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தாள். குழந்தையை மட்டும் நாங்கள் வளர்த்து வந்தோம். பேரனைக் கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்வதற்காக என் மகளை அடித்துத் துன்புறுத்தி, எங்களிடம் இருந்த பேரனை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டனர்.

எங்களுக்கு ஆறுதல் கூற ஒரு ஜீவனும் இல்லாத நிலையில் தங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன். எங்கள் பேரன் எங்களிடம் திரும்பி வருவானா? எனது கடன் தொல்லைகள் எப்போது தீரும்? முதல் மகள் ஒரு கிறிஸ்தவப் பையனை மணந்ததால் தடைபட்டுள்ள எனது இரண்டாவது மகளின் திருமணம் எப்போது நடைபெறும்?

பதில் :மதமாற்றம் என்ற தீயில் கருகித் துடிக்கும் இந்துக் குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாம் ஏற்கெனவே பலமுறை ஆதாரபூர்வமான புள்ளிவிவரங்களுடன் விவரித்துள்ளபடி மதமாற்ற முயற்சிகளில் ஒன்றுதான், இந்துப் பெண்களைக் காதலிக்கும்படியும், அதன்மூலம் அப்பெண்களை மதமாற்றம் செய்யும்படியும் அவர்களது வாரப் பிரார்த்தனைக் கூட்டங்களில் வற்புறுத்தி வருவதும் அனைவருக்கும் தெரியும். இது மிகப் பெரிய சமூகப் பிரச்சினையாக ஏராளமான இந்துக் குடும்பங்களில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் விளைவுதான், இதுவரை மதமாற்றம் எனும் திட்டமிட்ட அட்டூழியத்தைப் பொறுத்துவந்த இந்துக்கள், இனி பொறுக்க இயலாத மனநிலையில் இப்போது உள்ளனர்.

`மதமாற்றத்தின் மூலம் இந்து சமூகத்தை அழிப்பதற்கு எங்களுக்குப் பாதுகாப்பு தரவேண்டும்' என்றல்லவா மற்ற சமூகத்தினர் கேட்கிறார்கள்! இது எவ்விதத்தில் நியாயமாகும்? எத்தனை காலம்தான் இந்த அநீதியை மக்கள் பொறுத்துக்கொள்வார்கள்? ஒருவர் விருப்பப்பட்டால் எந்த மதத்திற்கு வேண்டுமானாலும் மாறட்டும். ஆனால் வெளிநாடுகளிலிருந்து பணத்தைக் கொண்டுவந்து குவித்து, உலகின் ஒப்பற்ற இந்து மதத்தைப் பற்றித் தரக்குறைவாகப் பேசி ஏதோ தங்கள் மதம் ஒன்றுதான் மதம் என்றும், அதுமட்டும்தான் சொர்க்கத்தைத் தரும் என்றும் பிரசாரம் செய்து வரும் ஆணவத்தை இனியும் மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுமென்று சுயநலம் பிடித்த நம் அரசியல்வாதிகள் எதிர்பார்த்தால் அது நடக்காது. இதுவரை மதமாற்றம் செய்திருப்பதோடு திருப்தி அடையட்டும். இனி வேண்டாம்.

இவர்களுக்குத் துணிவிருந்தால் சவுதி அரேபியாவிலோ அல்லது எகிப்திலோ அல்லது ஈரானிலோ அல்லது துருக்கியிலோ மதம் மாற்றம் செய்து பார்க்கட்டுமே! செய்வார்களா? முயற்சி செய்தால் இவர்கள் தலை இவர்கள் கழுத்திலிருக்காது என்பது இவர்களுக்குத் தெரியும். இந்தியர்கள்தான் இளிச்சவாயர்கள்! இங்குள்ள அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கமுடியும் என்ற ஆணவத்தினால்தான் மதமாற்ற முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

நிற்க, ஏமாற்றத்திற்குள்ளான உங்கள் மகளை நினைத்து நாங்கள் மிகவும் மனம் வருந்துகிறோம். அக்கிரமத்தை உடனுக்குடன் அழித்து தர்மத்தை நிலை நாட்டுபவர் ஸ்ரீயோக நரசிம்மன்! அவரைப் பூஜித்து வாருங்கள். விரைவில் நல்வழிகாட்டுவார். 2009 சித்திரை முடிவதற்குள் தங்கள் இரண்டாவது மகளுக்கு திருமணம் நடந்துவிடும். கவலைப்படாதீர்கள்.

Conversion

இந்திய அரசாங்கம் கடைப்பிடித்து வரும் ஒருதலைப்பட்சமான கொள்கைகளினால், எதிர்காலத்தில் நம் நாடு எப்படி இருக்கப்போகிறது என்பதை எடுத்துக்காட்டி, எச்சரிக்கை செய்யும் நிகழ்ச்சிகள்தான், தற்போது ஒரிசா, பெங்களூரு, தவணகரே, மங்களூரு, உடுப்பி மற்றும் கேரளத்தின் காஸர்கோடு ஆகிய இடங்களில் நிகழ்ந்துவருபவை!

`மதச்சார்பின்மை நாடு' என்று பேச்சளவில் கூறிக்கொண்டு, குறிப்பிட்ட சில மதத்தினர்களுக்கு மட்டும் ஏராளமான சலுகைகளை நம் இந்திய அரசாங்கம் வாரி வழங்கி வருகிறது. அதுவும் வெளிப்படையாகவே செய்து வருகிறது. `மதச்சார்பின்மை' என்ற உபதேசம் இந்துக்களுக்கு மட்டும்தான். இதனை எவரும் மறுக்கமுடியாது.

இத்தகைய அநீதியைப் பயன்படுத்திக்கொண்டு, அன்னிய மதத்தினர் தீவிர மதமாற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குடும்பம், குடும்பமாக, கிராமம், கிராமமாக மதமாற்றம் செய்து வருகின்றனர். இதற்காக, வெளிநாடுகளிலிருந்து ஏராளமான பணம் வந்து குவிந்து கொண்டிருக்கிறது.

தற்போது, இந்துக்களின் நிலை ‘survival’ என்ற நிலைக்கு வந்துவிட்டது. மதமாற்றம் என்னும் புற்றுநோய், இந்து சமூகத்தை அடியோடு நிர்மூலமாக்கி வருகிறது. பெரும்பாலான பத்திரிகைகள்கூட, செய்திகளை நியாயமாக வெளியிடாமல், அரசாங்கத்தைத் திருப்திபடுத்துவதற்காகவும், `இதர காரணங்களுக்காகவும்' ஒருதலைப் பட்சமாக செய்திகளை வெளியிட்டும், தலையங்கங்கள் எழுதியும் வருகின்றன.

இன்று, இந்து சமூகம் தனது தாய்நாட்டிலேயே அனாதையாகி நிற்கிறது!

மற்ற மதத்தினர் இன்று மதமாற்றத்தின் மூலம், பாரத புண்ணியபூமியைத் தங்களுக்குள் பங்கு போட்டுக்கொண்டு வருகின்றனர். இவ்விதம் திட்டமிட்டுச் செய்ததன் விளைவுதான் பாகிஸ்தானை உருவாக்கிய அக்கிரமம்.

எத்தனை காலத்திற்குத்தான் பொறுமையாக இருப்பது? டில்லி மாநகரமே வெடிகுண்டுகளுக்கு இலக்காகி, ஒரு பாவமும் அறியாத பலர் உயிரிழந்தபோது, `மத நல்லிணக்கம் அவசியம்' என்று பேசியிருக்கிறார் நமது உள்துறை அமைச்சர்!

இந்தப் போலி, சுயநல நாடகம் இனி போதும். `தீவிரவாதம், மதமாற்றம் ஆகிய புற்றுநோய்களைக் குணப்படுத்துங்கள்' என அரசியல் பிரமுகர்களை வேண்டிக் கொள்கிறோம். இனியாவது தாய்நாட்டைப் பற்றி நினையுங்கள். நோயைக் குணப்படுத்துவதை விட்டுவிட்டு நோயாளியைக் குறை கூறுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை.

மதமாற்றத்திற்கு அவசியம் என்ன?

நாம் பலமுறை சுட்டிக்காட்டியபடி,உலகில் மற்ற மதங்கள் தோன்றுவதற்கு முன்பிலிருந்தே இந்து மதம் தழைத்தோங்கி வந்துள்ளது.

மற்ற மதங்கள் பிற்காலத்தில் வந்தவைதான். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதங்களின் பிரசாரகர்கள், ஏதோ இந்துக்கள் காட்டுமிராண்டிகள் போல வாழ்ந்து வந்தது போலவும், இவர்கள்தான் கல்வியைக் கொடுத்து நாகரிக மக்களாக மாற்றியதைப் போலவும் ஆணவம் பிடித்துப் பிரசாரம் செய்து வருகிறார்கள். இவர்களின் மதம் ஒன்றின் மூலம் மட்டும்தான் மோட்சம் கிடைக்கும் என்றும், மற்றவர்கள் நரகத்திற்குத்தான் போவார்கள் என்றும் ஒலிபெருக்கிகள் மூலம் பிரசாரம் செய்துவருவது நகைப்பிற்கு இடமாகும்.

முதன்முதலில் சுமார் 116 ஆண்டுகளுக்கு முன்பு, தேவாரம், திருவாசகம் போன்ற தெய்வீக நூல்களின் சில வாசகங்களைச் சிறிது மாற்றி, தங்கள் மதப் பாடல்களைப் போல் தந்திரமாக மாற்றியவர், கிறிஸ்துவ மதபோதகரான Rev. Fr. Finlay என்பவர். இவர் மன்னார்குடியில் Finlay கல்லூரியை ஆரம்பித்து, அதன்மூலம் ஏராளமான மதமாற்றங்களைச் செய்தவர். அவருக்கு முன்பு, 1835-ம் ஆண்டு, w.o. சிம்ப்ஸன் என்பவர் `வெஸ்லி மிஷன்' என்ற மதமாற்ற நிறுவனத்தை நாகையில் தொடங்கி, Rev. Fr. Eliaiah Hoole என்பவர் மூலம் தஞ்சை ஜில்லாவில் பெரிய அளவில் மதமாற்றம் செய்தார். அன்று Fr. Finlay காட்டிய வழியைப் பின்பற்றி, பல இந்துமத நூல்கள் அவர்கள் மத நூல்கள் போல் மாற்றி எழுதப்பட்டன பிற்காலத்தில்! இந்துக்களின் குத்துவிளக்கு, ஆராதனை மணி போன்றவற்றில் உள்ள நந்தி, அனுமன், சங்கு, சக்கரம், மதச்சின்னங்கள் ஆகியவற்றை மாற்றி, அவர்களது மதச்சின்னங்களை அமைத்து வருவதும் அனைவருக்கும் தெரியும்.

பிற மதத்தினரைத் தரக்குறைவாகப் பேசினால் சட்டப்படி அது குற்றமாகும். ஆனால் இந்துக்களைப் பற்றியும், இந்து தெய்வங்களைப் பற்றியும், இந்து தெய்வீக நூல்களைப் பற்றியும் எவர் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் தரக்குறைவாகப் பேசலாம்.

அன்னியர்களின் படையெடுப்புகளின்போது இந்துக்கள் பட்ட கஷ்டங்கள், கொடூரமான அனுபவங்கள் ஆகியவற்றிற்குச் சரித்திரத்தில் ஏராளமான சான்றுகள் உள்ளன. ஆனால் இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்த பிறகு இந்துக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. அவர்களுக்கு நீதி கிடையாது. இந்து சமூகத்தை அடியோடு மதமாற்றம் செய்து, அப்படி ஒரு சமூகமே கிடையாது என்ற நிலையை ஏற்படுத்த மற்ற மதத்தினர் திட்டமிட்டு, பண பலத்தினாலும், பல அரசியல் கட்சிகளின் மறைமுக மற்றும் நேரடி ஆதரவுடனும் செயல்பட்டு வருகின்றனர். இந்து மதத்தில் இல்லாத என்ன சிறப்பு இவர்கள் மதத்தில் உள்ளது? அப்பாவிகளான கோடிக்கணக்கான வயோதிகர்கள், பெண்கள், கைக்குழந்தைகள் ஆகியோருடன் ஹிரோஷிமா நகரை ஒரே விநாடியில் அழித்தது அந்த மதத்தைச் சார்ந்த நாடான அமெரிக்காதான். இத்தகைய கொடூரமான படுகொலையை என்றாவது பாரதம் செய்திருக்குமா?

அரசாங்கத்தின் இன்றைய பாரபட்சமான கொள்கையும், அநீதியும் நீடித்தால் வெகு விரைவில் தற்போது அவர்கள் பிற மதத்தினருக்குச் சலுகைகள் வழங்குவதற்காக `சிறுபான்மையினர்' என்ற முத்திரையினைப் பதித்து வருகிறார்களே! அந்நிலை மாறி இந்துக்கள் அவர்கள் நாட்டிலேயே சிறுபான்மையினராக மாறிவிடும் நாள் அதிக தூரத்தில் இல்லை. அவ்வளவு ஏன்? தற்போது நடைபெற்று வரும் வேகத்தில் மதமாற்றம் நீடித்தால் சிறுபான்மையினர் என்ற அளவிற்குக்கூட இந்து சமூகம் இருக்காது.

ஆதலால்தான், முழுமையாகத் தங்களை மற்ற மதத்தினர் அழித்து விடுவதற்கு முன்பு, தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக (survival) இந்து சமூகம் போராடி வருகிறது. அது தவறா?

நீதிக்கு மன்றாடும்,
ஏ.எம்.ஆர்.

Wednesday, September 24, 2008

Adhi Sankarar's Answers to common Question.

ஸ்தோத்திரங்கள், உரை நூல்கள், வேதாந்த விளக்கங்கள் என்று பல்வேறு நூல்களை அருளிய ஆதி சங்கரர், நம் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பல கருத்துகளை பாமரரும் புரிந்துகொள்ளும் வண்ணம் கேள்வி - பதில் பாணியில் அற்புதமாகத் தந்துள்ளார். அதன் பெயர் பிரச்னோத்ர ரத்னமாலிகா (வினா-விடை மணிமாலை). எவ்வளவு பெரிய விஷயங்களை எத்தனை எளிமையாகச் சொல்கிறார் ஆசார்யாள்! எல்லாம் சர்க்கரைப் பந்தல்.

சமஸ்கிருதத்தில் சங்கரர் அருளிய அந்த பிரச்னோத்ர ரத்னமாலிகாவைப் பலர் தமிழாக்கம் செய்திருந்தாலும் இலக்கியச் செம்மல் பேராசிரியர் கே.எஸ்.நாகராஜன் (முன்னாள் முதல்வர், டி.பி.ஜெயின் கல்லூரி), அற்புதமாக அந்தப் பணியைச் செய்திருக்கிறார். (யோக கே்ஷமா டிரஸ்ட் வெளியீடு)

மெத்தப் படித்தவர்களுக்குப் புரியும்படிதானே ஆசார்யாள் பெரிய பெரிய விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்? பாமர ஜனங்களுக்குப் புரியும்படி எதுவும் சொல்லவில்லையே? என்று ஏங்குபவர்களுக்கு விடைதான், இந்த பிரச்னோத்ர ரத்னமாலிகா.

இந்தக் கேள்வி-பதில்களைப் படித்து, மனனம் செய்து, அதன்படி நடக்கிறவர்கள் சாதுக்களிடையே சிறந்து விளங்கி ரத்னங்கள் போல உலகில் திகழ்வார்கள் என்று கூறுபவர் யார் தெரியுமா? ஜகத்குரு ஆதிசங்கரர்தான்.

இதோ அந்த அபூர்வமான பிரச்னோத்ர ரத்னமாலிகா.

கேள்வி: ஐயா, பெரியவரே, ஏற்றுக்கொள்ளத் தக்கது எது?

பதில்: குருவின் சொல்.

கேள்வி: செய்யத்தகாத காரியம் எது?

பதில்: பலராலும் நிந்திக்கத் தக்க செயல்.

கேள்வி: குரு என்பவர் யார்?

பதில்: தத்துவத்தை அறிந்து, சீடனின் நன்மையிலேயே எப்போதும் நாட்டம் கொண்டவரே குரு ஆவார்.

கேள்வி: நல்ல வித்வானாக உள்ளவன் விரைந்து செய்ய வேண்டியது எது?

பதில்: பிறப்பு_இறப்பு என்னும் பந்தம் தொடராமல் அறுத்துவிடுவது.

கேள்வி: மோட்சமாகிய மரத்துக்கு விதை எது?

பதில்: கர்மாக்களால் உண்டான நல்ல உண்மையான அறிவு.

கேள்வி: உலகில் ஆத்மாவுக்கு மிகவும் நல்லது எது?

பதில்: தர்மம்.

கேள்வி: இவ்வுலகில் புனிதமானவன் யார்?

பதில்: மனம் தூய்மையாக உள்ளவன்.

கேள்வி: எவன் உண்மையான (புலவன்) பண்டிதன்?

பதில்: நல்லது, கெட்டது என்று பிரித்தறியும் விவேகம் உடையவன்.

கேள்வி: எது விஷம் போன்றது?

பதில்: தனது குருவினிடத்தில் காட்டும் அவமரியாதை.

கேள்வி: இவ்வுலகில் சாரமானது எது? மனிதர் அனைவராலும் விரும்பத்தக்கது எது?

பதில்: தனக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்வதில் நாட்டம் கொண்ட பிறவியே.

கேள்வி: கள்ளைப்போல் மனத்துக்கு ஆசையை உண்டாக்குவது எது?

பதில்: நட்பு.

கேள்வி: திருடர்கள் யார்?

பதில்: சிற்றின்ப சுகங்கள்.

கேள்வி: ஸம்ஸாரத்தில் நம்மை சிக்க வைக்கும் கொடி எது?

பதில்: ஆசை.

கேள்வி: நம்முடைய உண்மையான பகைவன் யார்?

பதில்: முயற்சியின்மை.

கேள்வி: நமக்கு பயத்தை அளிக்கக் கூடியது எது?

பதில்: மரணம்.

கேள்வி: குருடனுக்குச் சமமானவன் யார்?

பதில்: ஆசை அதிகம் கொண்டவன்.

கேள்வி: எவன் உண்மை வீரன்?

பதில்: பெண்களின் கடைக்கண் பார்வைகளால் தாக்கப்படாதவன்.

கேள்வி: அமுதம்போல், காதுகளால் விரும்பிப் பருகக் கூடியது எது?

பதில்: சாதுக்களுடைய உபதேசம்.

கேள்வி: கௌரவம் பெற வழி எது?

பதில்: பிறரிடம் சென்று உதவி கோராமல் இருத்தலே.

கேள்வி: புரிந்துகொள்ள முடியாதது எது?

பதில்: பெண் மனம்.

கேள்வி: எவன் புத்திசாலி?

பதில்: பெண்களின் நடத்தையினால் பாதிக்கப்படாதவன்.

கேள்வி: எது மிக்க துயரத்தைத் தரும்?

பதில்: போதுமென்ற மனம் இல்லாமை.

கேள்வி: எது அற்பமான செயல்?

பதில்: கீழ்குணமுடையவனிடம் உதவி கோருதல்.

கேள்வி: எது உண்மையான வாழ்வு?

பதில்: குற்றமற்ற வாழ்க்கை.

கேள்வி: ஜடப்பொருளின் தன்மை எது?

பதில்: படித்துவிட்டு, அதைப் பயிற்சி செய்யாமல் இருத்தல்.

கேள்வி: விழிப்புடன் இருப்பவன் யார்?

பதில்: விவேகம் உடையவன்.

கேள்வி: மனிதர்களுக்குத் தூக்கம் என்பது எது?

பதில்: மடமை, மூடத்தனம்.

கேள்வி: தாமரை இலைமேல் நீர்போல் நிலையற்றது எது?

பதில்: இளமை, செல்வம், ஆயுள் ஆகிய மூன்றும்.

கேள்வி: சந்திரனின் நிழல் போல் குளிர்ந்து இருப்பவர் யார்?

பதில்: சாதுக்கள்.

கேள்வி: நரகம் என்பது எது?

பதில்: அடிமைத்தனம்.

கேள்வி: எது உண்மையான சுகத்தைத் தரவல்லது?

பதில்: எல்லாவிதமான தொடர்புகளையும் துண்டித்துக் கொள்ளுதல்.

கேள்வி: எது ஸத்யம், உண்மை?

பதில்: உயிர்களிடத்து அன்பு.

கேள்வி: உலகில் உயிரினங்களுக்கு மிகப் பிரியமானது எது?

பதில்: அவ்வவற்றின் உயிரே.

கேள்வி: துன்பத்தை விளைவிக்கக் கூடியது எது?

பதில்: சினம் (கோபம்).

கேள்வி: இன்பத்தைத் தரவல்லது எது?

பதில்: சான்றோர் நட்பு.

கேள்வி: எல்லா துன்பங்களையும் போக்க வல்லவன் யார்?

பதில்: அனைத்தையும் துறந்தவன்.

கேள்வி: விலைமதிக்க முடியாதது எது?

பதில்: காலத்தாற் செய்த உதவி.

கேள்வி: இறக்கும்வரை ஓயாமல் துன்பம் தரவல்லது எது?

பதில்: நாம் செய்துவிட்டு மறைத்து வைத்திருக்கும் பாவச் செயல்.

கேள்வி: எந்தச் செயல்களில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்?

பதில்: கல்வி கற்பதிலும், மருந்து உண்பதிலும், தானம் கொடுப்பதிலும்.

கேள்வி: எவற்றில் நாம் கவனம் செலுத்தாமல் இருக்க வேண்டும்?

பதில்: தீயவர், அயல் பெண்கள், பிறர் சொத்து ஆகியவற்றில்.

கேள்வி: இரவும் பகலும் நாம் சிந்திக்க வேண்டியது எதை?

பதில்: உலகின் நிலையற்ற தன்மையை.

கேள்வி: நாம் அன்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டியவை எவை?

பதில்: ஏழை எளியவர்களிடம் கருணை, சாதுக்களின் நட்பு.

கேள்வி: யார் யாருடைய ஆத்மாக்களை இறக்குந் தருணத்திலும் தூய்மைப்படுத்த முடியாது?

பதில்: மூடன், சந்தேகப் பிராணி, நிம்மதியற்றவன், செய்நன்றி கொன்றவன் ஆகியோருடைய ஆத்மாக்களை.

கேள்வி: சாது என்பவன் யார்?

பதில்: நன்னடத்தை உடையவன்.

கேள்வி: எவனைத் தாழ்ந்தவன் என்கிறோம்?

பதில்: கெட்ட நடத்தை கொண்டவனை.

கேள்வி: இவ்வுலகை வென்றவன் யார்?

பதில்: சத்யமும் பொறுமையும் கொண்டவன்.

கேள்வி: தேவர்களும் வணங்கும் தகுதி பெற்றவன் யார்?

பதில்: கருணை உள்ளம் படைத்தவன்.

கேள்வி: மனிதனுக்கு எதனால் உண்மையான விழிப்பு உண்டாகும்?

பதில்: ஸம்ஸாரமாகிய பெரிய காட்டைப் பார்த்த பிறகு.

கேள்வி: உயிரினங்களை எவன் எளிதாகத் தன் வசப்படுத்த முடியும்?

பதில்: உண்மை பேசுபவனாகவும், அன்பும், நல்லடக்கமும் உடையவனாகவும் இருப்பவன்
.
கேள்வி: எவ்வழியை நாம் பின்பற்ற வேண்டும்?

பதில்: இம்மை_மறுமை இரண்டிலும் நீடித்த சுகத்தை அளிக்கும் நேர்மை வழியை.

கேள்வி: குருடன் யார்?

பதில்: தகாத செயல்களில் ஈடுபடுபவன்.

கேள்வி: செவிடன் யார்?

பதில்: நல்லவற்றைக் கேளாதவன்.

கேள்வி: ஊமை யார்?

பதில்: தக்க தருணத்தில் இனிமையாகப் பேசத் தெரியாதவன்.

கேள்வி: தானம் என்பது எது?

பதில்: பெற்றுக்கொள்பவன் கேளாமலும், பிரதிபலன் எதிர்பாராமலும் கொடுப்பது.

கேள்வி: உண்மையான நண்பன் யார்?

பதில்: பாவச் செயல்களிலிருந்து நம்மை விலக்குபவன்.

கேள்வி: மனிதனுக்கு அணிகலன் யாது?

பதில்: அவனுடைய குணம்.

கேள்வி: சொல்லுக்கு அணி செய்வது எது?

பதில்: வாய்மை.

கேள்வி: மின்னல் ஒளிபோல் தோன்றி கணத்தில் மறைவது எது?

பதில்: தீயோர் நட்பு.

கேள்வி: குலத்தையும் குணத்தையும் காப்பவர் யார்?

பதில்: சாதுக்களே.

கேள்வி: இவ்வுலகில் சிந்தாமணியைப்போல் கிடைத்தற்கரியது எது?

பதில்: ஞானிகள் நான்கு பொருட்களைச் சிந்தாமணி போன்றவை என்பர்.

கேள்வி: அவை யாவை?

பதில்: அன்புடன் அளிக்கப்பட்ட தானம், ஆணவம் இல்லாத அறிவு, அமைதி பொருந்திய வீரம், தியாக உள்ளம் படைத்தோர் செல்வம்.

கேள்வி: வருந்தத்தக்க குணம் எது?

பதில்: செல்வம் இருந்தும் கொடுக்க மனம் இல்லாமை.

கேள்வி: சிறந்த குணம் எது?

பதில்: வள்ளல் தன்மை.

கேள்வி: நல்ல புலவர்களால் எவன் மதிக்கப்படுவான்?

பதில்: இயற்கையாகவே தன்னடக்கம் உடையவன்.

கேள்வி: குலத்தின் பெருமையை உயர்த்துபவன் யார்?

பதில்: எல்லா நற்குணங்களும் நிறைந்திருந்தும், தன்னடக்கத்துடன் திகழ்பவன்.

கேள்வி: இவ்வுலகம் யாருக்கு வயப்படுகிறது?

பதில்: இனிய, நன்மை பயக்கக்கூடிய சொற்களை உடையவனாய், எப்போதும் அறவழியில் செல்பவனுக்கு.

கேள்வி: நல்ல புலவரின் மனத்தைக் கவர்பவை எவை?

பதில்: நல்ல கவிதையும், அறிவு நிரம்பிய பெண்ணும்.

கேள்வி: விபத்துகள் யாரை நெருங்குவதில்லை?

பதில்: முதியோர் சொற்படி நடக்கும் அறிவாளியை.

கேள்வி: செல்வத்தின் கடவுளான லட்சுமி யாரை விரும்புகிறாள்?

பதில்: சோம்பலின்றி உழைப்பவனையும், நேர்மையான நெறியில் நடப்பவனையும்.

கேள்வி: லட்சுமி யாரை விட்டு திடீரென்று விலகுகிறாள்?

பதில்: குரு, தேவர்கள் ஆகியோரை நிந்திப்பவனையும், சோம்பல் குணம் உள்ளவனையும்.

கேள்வி: நாம் எங்கு வசிக்க வேண்டும்?

பதில்: சாதுக்கள் மத்தியில் அல்லது காசியில்.

கேள்வி: எந்த இடங்களை நாம் விலக்க வேண்டும்?

பதில்: கஞ்சர்கள் வாழும் இடத்தையும், பேராசை கொண்ட அரசனின் நாட்டையும்.

கேள்வி: துன்பத்திலிருந்து ஒருவனைக் காப்பாற்றக் கூடியவை எவை?

பதில்: கடமையுணர்ச்சி கொண்ட மனைவியும், தைரியமும்.

கேள்வி: பரிதாபத்துக்கு உரியவன் யார்?

பதில்: வசதி இருந்தும் பிறருக்குக் கொடுக்க மனம் இல்லாதவன்.

கேள்வி: ஒருவன் அற்பனாக ஆவதற்குக் காரணம் என்ன?

பதில்: தகுதி அற்றவர்களிடம் யாசிப்பதுதான்.

கேள்வி: ராமபிரானைவிட சூரன் யார்?

பதில்: காமனுடைய அம்புக்கு இலக்கு ஆகாதவன்.

கேள்வி: இரவும் பகலும் நம் சிந்தனைக்கு உரியது எது?

பதில்: இறைவனின் திருவடி.

கேள்வி: கண்கள் இருந்தும் குருடர்கள் யார்?

பதில்: நாஸ்திகர்கள்.

கேள்வி: எவனை நாம் முடவன் என்று கூறலாம்?

பதில்: முதுமையில் தீர்த்த யாத்திரை செல்பவனை.

கேள்வி: எந்தத் தீர்த்தத்தை முக்கியமானதாகக் கருதலாம்?

பதில்: மனத்து அழுக்கை நீக்கி அதைத் தூய்மைப்படுத்துவதே சிறந்த தீர்த்தம்.

கேள்வி: மக்கள் எப்போதும் நினைக்க வேண்டியது எதை?

பதில்: விஷ்ணுவின் நாமாவை.

கேள்வி: புத்திசாலியான ஒருவன் எவற்றைச் சொல்லக்கூடாது?

பதில்: பிறர் குற்றங்களையும் பொய்யையும்.

கேள்வி: மனிதர்கள் தேடிப் பெறவேண்டியவை யாவை?

பதில்: கல்வி, பணம், வலிமை, புகழ், புண்ணியம்.

கேள்வி: மனிதனின் நல்ல குணங்கள் யாவற்றையும் அழிக்க வல்லது எது?

பதில்: பேராசை.

கேள்வி: நமது பலமான பகை எது?

பதில்: காமம், ஆசை.

கேள்வி: எந்த அரச சபையை நாம் விலக்க வேண்டும்?

பதில்: அனுபவமும் முதிர்ந்த வயதுமுடைய அமைச்சர்கள் இல்லாத சபையை.

கேள்வி: இவ்வுலகில் மனிதன் எந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்?

பதில்: அரசாங்க ஊழியத்தில்.

கேள்வி: உயிரைக்காட்டிலும் அதிகமாக விரும்பத்தக்கவை எவை?

பதில்: குலதர்மமும், சாதுக்களின் சகவாசமும்.

கேள்வி: கவனமாக காப்பாற்றப்பட வேண்டியவை யாவை?

பதில்: புகழ், பதிவிரதையான மனைவி, சுய புத்தி.

கேள்வி: கற்பகத் தரு போன்றது எது?

பதில்: நல்ல மாணவனுக்குக் கற்பிக்கப்படுகிற கல்வி.

கேள்வி: அழியாத ஆலமரம் போன்றது எது?

பதில்: முறைப்படி, பாத்திரம் அறிந்து, அளிக்கப்பட்ட உதவி.

கேள்வி: அனைவருக்கும் ஆயுதம் போன்றது எது?

பதில்: யுக்தி, சமயோசித புத்தி.

கேள்வி: தாய் எனக் கருதத்தக்கது எது?

பதில்: பசு.

கேள்வி: மனிதனுக்கு வலிமை எது?

பதில்: தைரியம்.

கேள்வி: மரணம் என்பது எது?

பதில்: கவனக்குறைவு.

கேள்வி: விஷம் எங்கு உள்ளது?

பதில்: தீயவர்களிடத்தில்.

கேள்வி: தீண்டத்தகாதது அல்லது தவிர்க்க வேண்டியது எது?

பதில்: கடன்.

கேள்வி: மனிதன் எப்பாடுபட்டேனும் பெற வேண்டியது எது?

பதில்: ஹரிபக்தி.

கேள்வி: மகாபாதகச் செயல் எது?

பதில்: மற்றவர்களைத் துன்புறுத்துதல்.

கேள்வி: எவன் கடவுளுக்குப் பிரியமானவன்?

பதில்: தானும் கோபப்படாமல், பிறருக்கும் கோபம் ஊட்டாமல் இருப்பவன்.

கேள்வி: காரிய சித்தி எதனால் உண்டாகும்?

பதில்: தவத்தினால்.

கேள்வி: புத்தி எவரிடத்தில் உள்ளது?

பதில்: அறவோர் இடத்தில்.

கேள்வி: புத்தி எப்படிக் கிடைக்கும்?

பதில்: முதியோர்களை உபசரித்துப் பணிவிடை செய்வதால்.

கேள்வி: முதியவர் யார்?

பதில்: தர்மத்தின் தத்துவத்தை முற்றிலும் உணர்ந்தவர்கள்.

கேள்வி: மரணத்தைக் காட்டிலும் துயரம் தருவது எது?

பதில்: கெட்ட பெயர்.

கேள்வி: எவன் சுகமாக வாழ்கிறான்?

பதில்: செல்வம் உடையவன்.

கேள்வி: செல்வம் என்பது யாது?

பதில்: எது நமக்குப் பிரியமானதோ, அதுவே நமக்குச் செல்வம்.

கேள்வி: உலகில் எல்லா இன்ப, சுகங்களுக்கும் காரணம் எது?

பதில்: புண்ணியச் செயல்கள்.

கேள்வி: துன்பத்துக்குக் காரணம் எது?

பதில்: பாவச் செயல்கள்.

கேள்வி: எல்லாவிதச் செல்வங்களும் யாருக்குக் கிடைக்கும்?

பதில்: பக்தியுடன் பகவான் சங்கரனை பூஜிப்பவருக்கு.

கேள்வி: எவன் மேன்மேலும் வளர்ச்சியுறுகிறான்?

பதில்: அடக்கம் உடையவன்.

கேள்வி: எவன் வளர்ச்சி குன்றி வருந்துகிறான்?

பதில்: திமிர் அல்லது அகங்காரம் கொண்டவன்.

கேள்வி: எவன் நம்பத் தகாதவன்?

பதில்: அடிக்கடி பொய் பேசுகிறவன்.

கேள்வி: எந்த சூழ்நிலையில் பொய் பேசுவது பாவச் செயல் ஆகாது?

பதில்: தர்மத்தைக் காக்கச் சொல்லப்படும் பொய்.

கேள்வி: எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட தர்மம் எது?

பதில்: அவரவர் குலத்தில் தோன்றிய முன்னோர்களும் ஆசார சீலர்களும் கடைப்பிடித்த தர்மமே.

கேள்வி: சாதுக்களுக்கு பலம் எது?

பதில்: தெய்வம்.

கேள்வி: சாது என்பவன் யார்?

பதில்: எதிலும் எப்போதும் திருப்தியோடு உள்ளவன்.

கேள்வி: தெய்வம் என்பது யாது?

பதில்: ஒருவனால் செய்யப்பட்ட நல்ல செயல்கள்.

கேள்வி: ஸுக்ருதி என்பவன் யார்?

பதில்: நல்லவர்களால் போற்றப்படுபவன்.

கேள்வி: இல்லறத்தில் உள்ளவனுக்கு உண்மை நண்பன் யார்?

பதில்: அவனுடைய மனைவி.

கேள்வி: இல்லறத்தான் யார்?

பதில்: யாகங்கள் செய்கிறவன்.

கேள்வி: யாகங்கள் யாவை?

பதில்: வேதங்களில் சொல்லப்பட்டவையும் மனித சமூகத்துக்கு நன்மை அளிப்பவையுமான செயல்கள்.

கேள்வி: யாருடைய செயல்கள் பயனுள்ளவை?

பதில்: நல்ல அனுஷ்டானங்களை உடையவனும், வேதத்தில் கூறப்பட்டபடி நடப்பவனும்.

கேள்வி: அவனுக்கு பிரமாணம், வழிகாட்டி எது?

பதில்: வேதமே ஆகும்.

கேள்வி: அனைவராலும் தாழ்த்தப்படுபவன் யார்?

பதில்: வேதநெறிப்படி செயல் ஆற்றாதவன்.

கேள்வி: எவன் உண்மையிலேயே பாக்யசாலி?

பதில்: முற்றும் துறந்தவன்.

கேள்வி: எவன் மதிக்கத்தக்கவன்?

பதில்: புலமையும் சாதுத் தன்மையும் ஒருங்கே கொண்டவன்.

கேள்வி: எவனுக்கு நாம் பணிவிடை செய்யலாம்?

பதில்: தானம் கொடுக்கும் தாராளமனம் படைத்தவனுக்கு.

கேள்வி: கொடைக்குணம் படைத்தவன் என்பவன் யார்?

பதில்: உதவி நாடி வருபவனை திருப்திபடுத்துகிறவன்.

கேள்வி: உடலைப் பெற்றவர்களுக்குச் சிறந்த பாக்கியம் எது?

பதில்: உடல் நலம்.

கேள்வி: உழைப்பின் பலனை முழுமையாகப் பெறுபவன் யார்?

பதில்: பயிர்த் தொழில் செய்பவன்.

கேள்வி: யாரை பாவங்கள் அணுகுவதில்லை?

பதில்: ஜபம் செய்கிறவனை.

கேள்வி: முழுமையான மனிதன் என்று யாரைச் சொல்லலாம்?

பதில்: மக்கட் பேறு பெற்றவனை.

கேள்வி: செயற்கரிய செயல் எது?

பதில்: மனத்தை அடக்கி நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது.

கேள்வி: பிரும்மசரியம் உடையவன் என்று யாரைக் கூறமுடியும்?

பதில்: தன்னுடைய வீரியத்தை வீணாக்காமல் கட்டுப்படுத்தி தியானத்தின் மூலம் அதை நல்ல முறையில் பயன்படுத்துபவனை.

கேள்வி: பரதேவதை என்று யாரைக் கூறலாம்?

பதில்: சத், சித், ஆனந்தம் என்பவற்றில் சித்சக்தியை.

கேள்வி: உலகுக்குத் தலைவன் யார்?

பதில்: சூரியன்.

கேள்வி: அனைவருக்கும் வாழ்வைக் கொடுப்பது எது?

பதில்: மழை.

கேள்வி: சூரன் என்று யாரைக் கூறலாம்?

பதில்: பயந்தவனைக் காப்பவனை அல்லது பயத்திலிருந்து மற்றவர்களைக் காப்பவனை.

கேள்வி: நம்மைக் காப்பவர் யார்?

பதில்: நம்முடைய குரு.

கேள்வி: ஜகத்குரு என்று யாரைக் கூறலாம்?

பதில்: பரமசிவனை.

கேள்வி: ஞானம் யாரிடமிருந்து கிடைக்கும்?

பதில்: பரமசிவனிடமிருந்து.

கேள்வி: எவ்வாறு நாம் மோட்சத்தைப் பெறலாம்?

பதில்: முகுந்தனிடம் பக்தி செய்வதன் மூலம்.

கேள்வி: முகுந்தன் என்பவன் யார்?

பதில்: உலக மாயை அல்லது அவித்யையில் இருந்து நம்மை விடுவிக்கிறவன்.

கேள்வி: அவித்யை என்பது யாது?

பதில்: ஆத்மாவைப் பற்றிய அறிவு அல்லது நினைப்பு இல்லாமை.

கேள்வி: யாருக்குத் துயரம் வராது?

பதில்: கோபம் கொள்ளாதவனுக்கு.

கேள்வி: சுகம் என்பது எது?

பதில்: மன நிறைவு.

கேள்வி: அரசன் என்பவன் யார்?

பதில்: மக்களை மகிழ்விப்பவன்.

கேள்வி: யாரை நாய்க்கு ஒப்பிடலாம்?

பதில்: நீசர்களை அண்டி, அவர்களுக்குச் சேவகம் செய்பவனை.

கேள்வி: மாயாவி என்பவன் யார்?

பதில்: பரமேஸ்வரன்.

கேள்வி: இந்திரஜாலம் போல் தோற்றம் அளிப்பது எது?

பதில்: இந்தப் பிரபஞ்சம்.

கேள்வி: கனவுத் தோற்றத்துக்கு நிகரானது எது?

பதில்: விழித்திருக்கும்போது நடைபெறும் நிகழ்ச்சிகள்.

கேள்வி: ஸத்யமானது, உண்மையானது எது?

பதில்: பிரும்மம்.

கேள்வி: பொய்யான தோற்றம் எது?

பதில்: உண்மை அறிவால் போக்கக் கூடிய தவறான எண்ணம்.

கேள்வி: பயனற்றது எது?

பதில்: முயலுக்குக் கொம்பு உண்டா என்பது போன்ற வீண் சர்ச்சைகள்.

கேள்வி: விவரித்துச் சொல்ல முடியாதது எது?

பதில்: மாயை (பொய்த் தோற்றம்).

கேள்வி: நாமாக நினைத்துக் கொண்டிருப்பது எது?

பதில்: ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு என்ற எண்ணம்.

கேள்வி: பாரமார்த்திகம் அல்லது முற்றும் உண்மையானது எது?

பதில்: அத்வைதம், ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்ற அறிவு.

கேள்வி: அறியாமை எப்போது உண்டாயிற்று?

பதில்: அது அனாதியாய் உள்ளது; தோன்றிய காலம் தெரியாது.

கேள்வி: உடலைக் காப்பது எது?

பதில்: அவரவர் செய்த நல்வினை, தீவினைகள். நாம் ஜென்ம ஜென்மாந்திரத்தில் செய்த பாவச் செயல்தான் அன்னத்தையும் கொடுத்து
ஆயுளையும் வளர்க்கச் செய்கிறது.

கேள்வி: வழிபாட்டுக்கு உரியவர் யார்?

பதில்: காயத்ரி மந்திரம், சூரியன், அக்னி மூன்றிலும் அடங்கியுள்ள பரமேச்வரனே.

கேள்வி: காயத்ரி, சூரியன், அக்னி ஆகியவற்றில் அடங்கி நிற்பது எது?

பதில்: பெற்ற தாய்.

கேள்வி: நம் பூஜைக்குரியவர் யார்?

பதில்: தந்தை.

கேள்வி: எல்லா தெய்வங்களையும் உள்ளடக்கி இருப்பவன் யார்?

பதில்: கல்வியும் கர்மானுஷ்டானங்களும் நிறைந்தவர்கள்.

கேள்வி: குல நாசத்துக்குக் காரணம் யாது?

பதில்: சாதுக்கள் மனம் வருந்தும்படி செய்யும் செயல்.

கேள்வி: யாருடைய சொற்கள் பொய்க்காதவை?

பதில்: சத்யம், மௌனவிரதம், சாந்தி ஆகியவற்றை விரதமாக மேற்கொண்டவர்களின் சொற்கள்.

கேள்வி: பிறவிக்குக் காரணம் யாது?

பதில்: சிற்றின்பத்தில் ஏற்படும் பற்று.

கேள்வி: நமது மேல் பிறப்பு என்பது எது?

பதில்: பிள்ளையாகப் பிறத்தல்.

கேள்வி: தவிர்க்க முடியாதது எது?

பதில்: மரணம்.

கேள்வி: எப்படிக் காலடி எடுத்து வைக்க வேண்டும்?

பதில்: நன்றாகப் பார்த்து, கவனித்து, சுத்தமான இடமென்று தெரிந்து கொண்டு.

கேள்வி: அன்னதானம் பெறத் தகுந்தவன் யார்?

பதில்: நல்ல பசியோடு இருப்பவன்.

கேள்வி: உலகில் யாரை நாம் பூஜிக்க வேண்டும்?

பதில்: பகவானின் அவதாரங்களை; அவதார வடிவங்களில் உள்ள மூர்த்தங்களை.

கேள்வி: பகவான் யார்?

பதில்: சங்கரனாகவும், நாராயணனாகவும் உள்ள பரம்பொருள்.

கேள்வி: பகவானிடத்தில் செலுத்தும் பக்திக்குப் பயன் என்ன?

பதில்: மாறாத, கலப்பற்ற ஆனந்தம்.

கேள்வி: மோட்சம் என்பது என்ன?

பதில்: அவித்யை நீங்குதல்.

கேள்வி: எல்லா வேதங்களுக்கும் உற்பத்தி இடம் எது?

பதில்: ஓம் என்னும் பிரணவம்.

இந்த ப்ரச்னோத்ர ரத்ன மாலிகாவை யார் மனப்பாடம் செய்து, அதன்படி நடக்கிறார்களோ, அவர்கள் சாதுக்களிடையே சிறந்து விளங்கி, ரத்னங்கள் போல் உலகில் திகழ்வார்கள்.