Monday, December 1, 2008

(புனர்பூசம் 4-ம் பாதம் முதல், பூசம்,
ஆயில்யம் வரை)

குடும்பம் : இதுவரை குருபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு 6-ம் இடமாகிய தனுர் ராசியில் சஞ்சரித்து வந்ததை நீங்கள் அறிவீர்கள். குருபகவான் 6-ம் இடத்திற்கு அதிபதியாக இருந்து, கோள்சாரத்தில் ருண, ரோக, சத்ரு ஸ்தானமாகிய தனுசு ராசியில் சஞ்சரிக்கும்போது எத்தனை வருமானம் வந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகளால் பணம் விரயமாகிவிடும் என்பதை மிகப் புராதனமான ஜோதிட நூல்கள் விவரித்துள்ளன. ஆதலால் சென்ற ஒரு வருடகாலமாகக் கட்டுக்கடங்காத செலவுகளாலும் கடன் உபாதைகளாலும் கடக ராசி அன்பர்கள் மிகவும் கஷ்டப்பட்டிருப்பார்கள். அந்நிலை குருபகவானின் மகர ராசி சஞ்சார காலத்தில் அடியோடு மாறிவிடும். வருமானம் உயரும். கட்டுக்கடங்காமல் இருந்துவந்த வீண் செலவுகள் இனி இராது. கடன் தொல்லைகள் குறையும். உங்கள் ராசிக்கு மகரம் சப்தம ஸ்தானமாக இருப்பதால் குடும்பத்தில் ஒற்றுமையும், அன்னியோன்யமும் அதிகரிக்கும். இதுவரை ஏற்பட்டுவந்த ஒற்றுமைக் குறைவு நீங்கும். கடன் தொல்லைகள் குறைவதை அனுபவத்தில் பார்க்கலாம். ராகுவின் மகர ராசி நிலையினால் பாதிக்கப்பட்டிருந்த உங்கள் மனைவியின் உடல்நிலையில் இனி சிறந்த முன்னேற்றத்தைக் காண்பீர்கள். மகரம் குருவிற்கு நீச்ச வீடாக இருந்தாலும்கூட கடக ராசி அன்பர்களுக்கு அடுத்து வரும் ஒரு வருட காலத்திற்கு குருபகவான் நன்மையைத்தான் செய்வார். ஆனால் அந்த நன்மை அளவோடு இருக்கும் என்பதைத்தான் குருவின் நீச்சத்துவம் குறிப்பிடுகிறது.

பொருளாதாரம் : மேலே கூறியுள்ளபடி பொருளாதாரத்தில் மிகச் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். பழைய கடன்களை ஓரளவு தீர்ப்பதற்குக் கிரகநிலைகள் அனுகூலமாக இருப்பதால் உங்கள் நிதிநிலைமையைச் சீர்படுத்திக்கொள்ள தக்க தருணம் இது.

ஆரோக்கியம் : கடக ராசிக்கு தனுர் ராசி ரோக ஸ்தானமும்கூட. ஆதலால் குருவின் தனுர் ராசி சஞ்சார காலத்தில் அடிக்கடி ஏதாவது ஓர் உடல் உபாதை அல்லது ஆரோக்கியக் குறைவு உங்களுக்கு ஏற்பட்டுக்கொண்டே இருந்திருக்கும். இந்நிலை இப்போது மாறி உடல்நலனில் நல்ல அபிவிருத்தி ஏற்படும். நிரந்தர நோய்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் அன்பர்களுக்குச் சிறந்த நிவாரணம் ஏற்படுவது உறுதி.

உத்தியோகம் : உங்கள் ஜென்ம ராசிக்கு குருபகவானின் சுபப்பார்வை கிடைப்பதால் பலருக்குப் பதவி உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்பு உள்ளதைக் கிரகங்கள் எடுத்துக்காட்டுகின்றன. சிலருக்குப் பதவி உயர்வுடன் இடமாற்றமும் ஏற்படக்கூடும். வெளிநாடு சென்று வேலை பார்க்கவேண்டும் என்ற ஆர்வமிருப்பின் அதற்கான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ளலாம். தாற்காலிக ஊழியர்கள் பணியில் நிரந்தரம் செய்யப்படுவார்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்யும் கடக ராசியினருக்கு நல்ல வேலை கிடைக்குமென பாக்கிய, தொழில், லாப ஸ்தானங்கள் எடுத்துக்காட்டுகின்றன. தசா, புக்திகள் அடிப்படையில் ஒரு சிலருக்கு வெளிநாடு சென்றுவரும் யோகமும் அமைந்துள்ளது.

தொழில் : கடக ராசியில் பிறந்துள்ள தொழில்துறை அதிபர்களுக்குத் தற்போது நிகழும் குருபகவானின் ராசி மாற்றம் சிறந்த பலன்களைத் தரவுள்ளது. படிப்படியாக உற்பத்தியை அதிகரிப்பதற்குக் கிரகநிலைகள் அனுகூலமாக உள்ளன. அரசாங்க அதிகாரிகளின் தொல்லைகள் இனி இராது. ஏற்றுமதி, இறக்குமதித் துறைகளில் உள்ளவர்களுக்கு மிகவும் உதவிகரமாக முக்கியக் கிரகங்கள் சஞ்சரிப்பதால் குருபகவானின் இந்த ராசி மாற்றம் உங்களுக்குப் பல நன்மைகளை அளிக்கவுள்ளது.

வியாபாரம் : விற்பனை அதிகரிக்கும். லாபம் பெருகும். நியாயமில்லாத போட்டிகள் இனி படிப்படியாகக் குறையும். நிதிநிறுவனங்கள் தக்க தருணங்களில் முன்வந்து உதவி செய்யும்.

கலைத்துறையினர் : புதிய வாய்ப்புகள் எளிதில் கிடைக்கும். அதனால் வருமானம் பெருகும். புகழ் ஓங்கும். சென்ற காலத்தில் நடித்து, முடித்துக்கொடுத்த படங்களுக்காக இதுவரை வசூலாகாத பாக்கிப் பணம் சிறிது முயற்சியினால் இப்போது தவறாது கிடைக்கும். உங்கள் ஜென்ம ராசிக்கு மகரம் சப்தம ஸ்தானமாக இருப்பதால் இதுவரை திருமணமாகாமல் இருந்த நடிக நடிகையருக்கு இப்போது திருமணம் நடைபெறும்.

அரசியல் துறையினர் : உங்கள் ராசியை குருபகவான் தனது சுபப்பார்வையால் (7-ம் பார்வை) பலப்படுத்துவதால் மனஅமைதியும், ஒற்றுமையும் அளிப்பார் குரு. மேலிடத் தலைவர்களின் ஆதரவு பெருகும். கட்சித் தொண்டர்கள் ஒத்துழைப்பார்கள். சிறிது முயற்சி செய்தீர்களானால்போதும். தேர்தலில் நிற்பதற்கு `டிக்கெட்' கிடைக்கும். இது ஓர் அதிர்ஷ்டகரமான சந்தர்ப்பம் என்பதையே குருபகவானின் தற்போதைய மகர ராசி மாறுதல் எடுத்துக்காட்டுகிறது.

மாணவமணிகள் : வித்யா ஸ்தானம் மற்றும் வித்யாகாரகரின் நிலை, குருபகவானின் நிலை ஆகிய மூன்றும் சுபபலனை அளிக்கக்கூடிய நிலையில் சஞ்சரிப்பதால் மாணவமணிகளுக்குப் படிப்பில் உற்சாகமும், ஆர்வமும் மேலிடும். கிரகிப்பு சக்தியும், ஞாபகத்திறனும் ஓங்கும். கல்வி மட்டுமின்றி, விளையாட்டுகள், பேச்சுப் போட்டிகள் ஆகியவற்றிலும் நீங்கள் முன்னிலையில் நிற்பீர்கள். அடுத்த ஆண்டு உங்கள் விருப்பத்திற்கேற்ப இடம் கிடைக்கும்.

விவசாயத்துறையினர் : பயிர்கள் செழித்து வளர்ந்து அமோகமான விளைச்சலைக் குறைவில்லாமல் உங்களுக்கு வரும் ஒரு வருட காலத்திற்கு அளிக்கப்போகிறது என்பதைத்தான் தற்போதைய கிரகநிலைகள் தெளிவாகவும், உறுதியாகவும் எடுத்துக்காட்டுகின்றன. இதுவரை படாதபாடு படுத்திவிட்ட கடன் தொல்லைகள் படிப்படியாக நிச்சயமாகக் குறையும். அரசின் ஆதரவை நீங்கள் எதிர்பார்க்கலாம். ஜெனனகால கிரகநிலைகளும், தற்போதைய தசா, புக்திகளும் அனுகூலமாக இருந்தால் அத்தகைய கடக ராசி அன்பர்களுக்குப் புதிய விவசாய நிலம் வாங்குவதற்கும் யோகம் அமைந்துள்ளது. ஏனெனில் கடக ராசியினருக்கு குரு பாக்கியாதிபதியுமாகிறார்.

பெண்மணிகள் : குருபகவானின் இந்த மகர ராசி மாறுதல், குறிப்பாக பெண்மணிகளுக்குப் பல நன்மைகளை அளிக்கவுள்ளது என உறுதியாகக் கூறமுடியும். பெண்மணிகளுக்குப் பணவசதி அதிகரிப்பதால் குடும்பச் செலவுகளைக் கவலைப்படாமல் சமாளித்துவிட முடியும். முயன்றால் சேமிப்பிற்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் இதுவரை உங்கள் நலன்களைப் பாதித்து வந்த ராகுவினால் ஏற்பட்ட கெடு பலன்கள் குருபகவானின் சேர்க்கையால் பெருமளவில் குறையும். இதுவரை குருபகவான் அனுகூலமில்லாத கோள்சார நிலையில் சஞ்சரித்து வந்ததால் கணவருடன் ஏற்பட்டுவந்த (கணவர் கடக ராசியானால் மனைவிக்கும், மனைவி கடக ராசியானால் கணவருக்கும்) ஒற்றுமைக்குறைவு அடியோடு நீங்கிவிடும். சில கடக ராசிப் பெண்களுக்குக் குழந்தைப் பாக்கியம் ஏற்படுவதற்கும் கிரகநிலைகள் அனுகூலமாக உள்ளன. வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் சிறந்த நற்பலன்களை எதிர்பார்க்கலாம்.

அறிவுரை

ராகுவைத் தவிர மற்ற கிரகநிலைகள் சுபத்துவமான பாதையில் சஞ்சரிப்பதால் வரும் ஒரு வருட காலத்திற்கு நற்பலன்களே அதிகமாக இருக்கும். மனதில் நிம்மதி ஏற்படும். சில பரிகாரங்களினால் இத்தகைய நன்மைகளை அதிகரித்துக்கொள்ளலாம்.

பரிகாரம்

கோள்சார விதிகளின்படி கடக ராசிக்கு சப்தம ஸ்தானமாகிய மகரத்தில் குருபகவான் சஞ்சரிப்பது நன்மைகளை அளிக்கக்கூடிய சஞ்சாரம்தான். இருப்பினும் மகரம் குருவுக்கு நீச்ச ராசியாக இருப்பதால் குருவினால் ஏற்படும் நன்மைகள் சற்று குறைவாகவே ஏற்படக்கூடும். இதனை சரிசெய்வதற்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் தவறாது நெய்தீபம் ஏற்றி வந்தால் அந்த நீச்சத்துவம் கண்டிப்பாகக் குறையும்.

மேலும் புண்ணிய நதிகளில் நீராடுவது, அருளாளர்கள் தரிசனம், ஏழைகள், வறியவர்கள் ஆகியோருக்கு அளிக்கும் தானம் ஆகிய புண்ணியச் செயல்களால் குருபகவானின் பலவீனத்தைப் போக்கிக்கொள்ள முடியும். இதுதவிர தினமும் ஒரு சர்க்கம் சுந்தரகாண்டம் படிப்பதாலும் குருபகவான் திருவுள்ளம் மகிழ்ந்து நற்பலன்களை முழுமையாக அளித்தருள்வார்.

(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)

குடும்பம் : ஏழரைச் சனிக்காலத்தில் ஜென்மச்சனி நடைபெறும்போது குருபகவான் உங்கள் ராசிக்கு ருண, ரோக, சத்ரு ஸ்தானமாகிய மகரத்திற்கு மாறுகிறார். கோள்சார விதிகளின்படி 6_மிடத்தில் குருபகவான் சஞ்சரிப்பது நற்பலன்களைத் தராது. சிம்ம ராசியினருக்கு குரு பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியாக இருப்பதாலும், குருவுக்கு அஷ்டமாதிபத்ய தோஷம் கிடையாது என்பதாலும், குருபகவானின் மகர ராசி சஞ்சார காலத்தில் சிம்ம ராசியினருக்கு இதுவரை அவரால் ஏற்பட்டுவந்த நன்மைகள் குறையுமே தவிர, மற்றபடி சிரமங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்பதே மிகப் புராதனமான ஜோதிட நூல்கள் வலியுறுத்தியுள்ள உண்மையாகும். திருமண முயற்சிகளில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு, அதன்பின்பே வெற்றி ஏற்படும். நெருங்கிய உறவினர்களின் தேவையற்ற தலையீடுகளினால் குடும்பத்தில் பிரச்சினைகளும், ஒற்றுமைக்குறைவும் உண்டாகும்.

குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்கள் ஆகியோரால் பண விஷயங்களில் ஏமாற்றப்படுவதற்கு வாய்ப்புள்ளதால், அடுத்துவரும் ஓராண்டு காலத்திற்கு கொடுக்கல்-வாங்கலில் கண்டிப்பாக இருத்தல் அவசியமாகும்.

பொருளாதாரம் : எதிர்பாராத செலவுகளினால் பணப் பிரச்சினைகள் ஏற்படுவதற்குச் சாத்தியக்கூறு உள்ளது. கூடியவரையில் திட்டமிட்டுச் செலவு செய்வது நல்லது. அடுத்துவரும் ஓராண்டு காலத்திற்கு சிம்ம ராசி அன்பர்கள் கடன் கொடுப்பது, கடன் வாங்குவது ஆகிய இரண்டையும் தவிர்ப்பது மிக மிக அவசியமாகும். தொழிலதிபர்கள், வர்த்தகத் துறையினர் ஆகியோர் கூடியவரையில் கடன் வாங்காமலிருப்பது நல்லது. ராசிக்கு அல்லது லக்கினத்திற்கு 6-மிடத்தில் குரு சஞ்சரிக்கும்போது ஏற்படக்கூடிய கடன் பிற்காலத்தில் அடைபடுவது மிகவும் கடினம் எனப் பண்டைய நூல்களில் நம் மகரிஷிகள் அருளியுள்ளனர்.

ஆரோக்கியம் : ஜென்ம ராசியில் சனிபகவான் சஞ்சரிப்பதை சிம்ம ராசியினர் நினைவில் கொள்ளவேண்டும். அதே தருணத்தில் குருபகவானும் உங்கள் ராசிக்கு யோக ஸ்தானமாகிய மகரத்திற்கு மாறியிருக்கிறார். கடின உழைப்பினாலும், அலைச்சலினாலும் உடல் தளர்ச்சியும், பொறுப்புகளில் சோர்வும், மனதில் வெறுப்பும் உண்டாகும். உடல் ஓய்வுக்கு ஏங்கும். மனதிலும் காரணமில்லாத குழப்பமும், கவலையும் ஏற்படும். பெரிய அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை.

உத்தியோகம் : பொறுப்புகள் பல மடங்கு அதிகரிக்கும். முன்னேற்றம் தடைபடாது. இருப்பினும் அளவிற்கு மீறிய உழைப்பினால் பணிகளில் உற்சாகம் குறையக்கூடும். புதிய சந்தர்ப்பங்கள், புதிய பொறுப்புகள் ஆகியவை உங்கள் திறமையைக் காட்டுவதற்கு மிகச் சிறந்த வாய்ப்புகளை அளிக்கும். எதிர்கால முன்னேற்றத்திற்கு இவை மிகவும் உதவப் போகின்றன. மகரம், சிம்ம ராசிக்கு 6-மிடமாக அமைந்திருப்பதால், குருபகவானுக்கு ஏற்படும் நீச்சம் ஓரளவுக்கு பங்கமாகி விடுகிறது. ஆதலால் உழைப்பும், அலைச்சலும் கடுமையாக இருந்தாலும், அதற்கேற்ற வருமான உயர்வும், சம்பள சலுகைகள் அதிகரித்தலும் மனதில் உற்சாகத்தை அளிக்கும்.

தொழில் : உற்பத்தி அதிகரிக்கும். லாபம் உயரும். வெளிநாட்டு ஆர்டர்கள் அதிகரிக்கும். நிதிநிறுவனங்களினால் அவ்வப்போது சிரமங்கள் ஏற்படக்கூடும். கூடியவரையில் புதிய துறைகளில் முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும். விஸ்தரிப்புத் திட்டங்களை ஒரு வருட காலத்திற்குத் தள்ளிப்போடுவது நல்லது. சூரியபகவானின் ராசியான சிம்மத்தில், தொழில்காரகரான சனி சஞ்சரிப்பதால் அரசாங்க அதிகாரிகளினால் தொல்லைகள் ஏற்படுவதற்குச் சாத்தியக்கூறு உள்ளது. எந்தச் சூழ்நிலையிலும் `டென்ஷன்' ஆகாமல் சாதுர்யமாக நடந்துகொள்வது வீண் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு உதவிகரமாக இருக்கும்.

வியாபாரம் : தொடர்ந்து நல்லபடி நடக்கும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். லாபம் குறையாது. சக கூட்டாளிகளினால் பிரச்சினைகள் ஏற்பட்டு, பின்பு சமரசத்தில் முடியும். 2009 ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஏதாவது ஒரு காரணத்தினால் நீதிமன்றம் செல்லவேண்டிய சாத்தியக்கூறு ஏற்படக்கூடும். புதிய வியாபாரங்களில் அடுத்துவரும் ஓராண்டிற்கு இறங்காமலிருப்பது நல்லது.

கலைத்துறையினர் : வாய்ப்புகள் குறையாது. வருமானமும் திருப்திகரமாகவே இருக்கும். இருப்பினும் பலர் ஓய்வில்லாமல் உழைக்க நேரிடும். வருமானம் நல்லபடி இருப்பினும் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டதைவிட அதிக செலவு செய்தே தங்கள் தயாரிப்புகளை முடிக்கமுடியும். சக நடிகர்கள், நடிகைகள் ஆகியோரால் பிரச்சினைகள் ஏற்படும். தயாரிப்பாளர்கள் அளவோடு முதலீடு செய்து புதிய படங்களைத் தயாரிப்பது நல்லது. புதிய வாகனம் வாங்குதல், சொந்த வீடு வாங்குவது, பங்குச் சந்தையில் முதலீடு செய்வது, பண விஷயங்களில் பிறருக்கு வாக்களிப்பது ஆகியவற்றை சிம்ம ராசி அன்பர்கள் அடுத்துவரும் ஓராண்டுக்குக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

அரசியல் துறையினர் : சிம்ம ராசியில் ஜெனித்துள்ள அரசியல் பிரமுகர்கள் அடுத்துவரும் ஓராண்டு காலத்திற்கு பேச்சிலும், செயலிலும்,ஆரோக்கியத்திலும் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது மிக மிக அவசியமாகும். கூடியவரையில் கட்சித் தலைவரிடம் நெருங்கிப் பழகாமலிருப்பது மிகவும் அவசியமாகும். தேர்தல் கூட்டணி வகுப்பதில் நிதானமும், விவேகமும் மிகவும் அவசியம். சிம்ம ராசியினர் மற்ற சில ராசியினரைப் போல அதிகமாகத் தவறு செய்யமாட்டார்கள். இருப்பினும், அவர்கள் ஒன்று அல்லது இரண்டு தவறுகள் எப்போதாவது செய்யும்போது அவற்றின் முடிவு மிகவும் விபரீதமாக இருக்கும்.

மாணவமணிகள் : ஜென்ம ராசியில் சனியும், 6-மிடத்தில் குருபகவான் நீச்ச ராசியில் சஞ்சரிப்பதாலும் கல்விக்கு அதிபதியான புதன் மிகவும் அனுகூலமாகச் சஞ்சரிப்பதாலும் மாணவமணிகளுக்கு படிப்பில் சிறந்த முன்னேற்றம் நீடிக்கிறது.

விவசாயத்துறையினர் : வயல் பணிகளில் கடுமையான உழைப்பு இருக்கப் போவதை இந்த குரு மாற்றம் எடுத்துக்காட்டுகிறது. மற்றபடி விைளச்சலும், வருமானமும் மிகவும் திருப்திகரமாக இருக்கும்.

பெண்மணிகள் : குடும்பப் பொறுப்புகள் அதிகரிப்பதால் உழைப்பு கடுமையாக இருக்கும். அதனால் அடிக்கடி உடலில் சோர்வும், சிறுசிறு உபாதைகளும் தோன்றும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகள் அதிக உழைப்பினால் தங்கள் வேலையில் தவறுகள் செய்வதற்கு வாய்ப்புள்ளது. ஆதலால் கடமைகளில் சற்று விழிப்புடன் செயல்படுவது நல்லது.

அறிவுரை

அடுத்துவரும் ஓராண்டு காலத்திற்கு சிம்ம ராசி அன்பர்கள் சமயம் கிடைக்கும்போதெல்லாம் ஓய்வு எடுத்துக்கொள்வது, தினமும் சரியான நேரத்திற்குச் சாப்பிடுவது, உறங்கச் செல்வது ஆகியவற்றைக் கடைப்பிடிப்பது ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக்கொள்ள உதவும். மேலும் பண விஜயங்களில் கண்டிப்பு மிகவும் அவசியம். மேலதிகாரிகளுடன் அலுவலக விஜயங்களைப் பற்றி விவாதிக்கும்போது பொறுமையும், பேச்சில் நிதானமும் அவசியம்.

பரிகாரம்

சிம்ம ராசியில் பிறந்துள்ள ஆண்கள் சூரிய நமஸ்காரம் செய்வதும்,ஸ்ரீ ஆதித்ய ஹிருதயம் தினந்தோறும் படிப்பதும், குறைந்தபட்சமாக காலை, நடுப்பகல், மாலைப்பொழுதில் 108 அல்லது 1008 தடவை ஸ்ரீ காயத்ரி மந்திரம் ஷெபிப்பது, வியாழக்கிழமைகளில் திருக்கோயில் ஒன்றில் தீபம் ஏற்றுவது ஆகியவை நன்மை அளிக்கும்.

பெண்மணிகள், சுந்தரகாண்டம் பாராயணம், கந்தர்சஷ்டிக் கவசம், தன்வந்திரி ஸ்லோகம், அபிராமி அந்தாதி ஆகியவற்றில் எவை முடிகிறதோ அவற்றைத் தினமும் படித்து வருவது மிகச் சிறந்த பரிகாரமாகும்.

(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை
2-ம் பாதம் வரை)

குடும்பம் : ஏழரைச் சனியில் முதல் பகுதியில் உள்ள கன்னி ராசி அன்பர்களுக்கு இதுவரை ராசிக்கு 4-ம் இடமாகிய தனுர் ராசியில் சஞ்சரித்து வந்த குரு தற்போது ராசிக்குப் பூர்வ புண்ணிய ஸ்தானமான மகரத்திற்கு மாறியிருப்பது நன்மை தரக்கூடிய கிரக அமைப்பாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை எதிர்பார்க்கலாம். திருமண முயற்சிகள் கைகூடும். சென்ற ஓராண்டு காலமாக மனஅமைதியை பாதித்துவந்த குடும்பப் பிரச்சினைகள் இப்போது தீரும். பொருளாதார நிலை சீர்படும். கணவன்-மனைவியரிடையே ஏற்பட்டு வந்த கருத்து வேற்றுமைகள், பரஸ்பர சந்தேகம், தேவையற்ற மனக்குழப்பங்கள், நெருங்கிய உறவினர்களின் மறைமுகச் சூழ்ச்சிகள் ஆகியவை நீங்கிவிடும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அபிவிருத்தி காண்பீர்கள். இதுவரை கட்டுக்கடங்காமல் இருந்த செலவினங்கள் இனி கட்டுப்படும். மகரத்தில் உலவிவரும் ராகுவினால் ஏற்பட்டுவந்த சிரமங்கள் இனி இராது. தசா, புக்திகள் அனுகூலமாக இருந்தால் திவ்ய தேச தரிசனம், அருளாளர்களின் ஆசி, கே்ஷத்திராடனம், புண்ணிய நதி ஸ்நான பாக்கியம் ஆகியவை கிட்டும்.

பொருளாதாரம் : எதிர்பாராத மிகப் பெரிய செலவுகளால் கலங்கியிருந்த உங்களுக்கு இந்த குருபகவானின் மகர ராசி மாறுதல் அதிக அளவில் உதவப் போகிறது என்பதை உறுதியாகக் கூறமுடியும். வீண் செலவுகள் குறையும்.

ஆரோக்கியம் : சிறுசிறு உடல் உபாதைகள் அவ்வப்போது ஏற்பட்டாலும் அடுத்துவரும் ஓராண்டு காலத்திற்குக் கவலை தரும் அளவிற்கு உடல் பிரச்சினை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. மேலும் கூறவேண்டுமானால், ஆரோக்கியத்தில் நல்ல அபிவிருத்தி ஏற்படும் எனக் கிரகநிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. நிரந்தர நோய்களுக்காக மருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களுக்குக்கூட இப்போது உபாதைகளின் கடுமை குறைவதைக் காணலாம்.

உத்தியோகம் : தொழில்காரகரான சனிபகவான் உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொறுப்பும், வேலைப்பளுவும் பலமடங்கு அதிகரிக்கும். இருப்பினும் மனதில் உற்சாகத்திற்குக் குறைவிராது. ஒரு சிலருக்குப் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் உண்டு. சிலருக்கு இடமாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. புதிய வேலைக்கு முயற்சி செய்துவரும் கன்னி ராசி அன்பர்களுக்கு அடுத்துவரும் மூன்று மாதங்களில் நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு செல்லவேண்டும் என்ற ஆர்வம் இருப்பின் அதற்கான முயற்சிகளை இப்போது மேற்கொள்ளலாம். ஏற்கெனவேயே வெளிநாடுகளில் வேலை பார்த்துவரும் கன்னி ராசியினருக்கு நிறுவன மாற்றமும், அதனால் சில நன்மைகளும் ஏற்படுவதை அனுபவத்தில் பார்க்கலாம்.

தொழில் : தொழில்துறையினருக்கு குருபகவானின் மகர ராசி மாற்றம் மிகச் சிறந்த மாற்றமாகும். பொருளாதார நிலை சீர்படும். தொழில் அபிவிருத்தி அடையும். புதிய துறைகளில் முதலீடு செய்வதற்கு தக்க தருணம் இது. புதிய தொழில்துறைகளில் நுழையவேண்டும் என்ற ஆர்வம்இருப்பின் அதற்கான சாத்தியக்கூறுகளை இப்போது ஆராயலாம். ஏனெனில், அதற்கான நிதிஉதவிகள் எளிதில் கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். நிதிநிறுவனங்கள் ஒத்துழைக்கும்.

வியாபாரம் : வியாபாரத்துறையினருக்கு குருபகவானின் மகர ராசி மாறுதலினால் பல நன்மைகள் கிடைக்கப்போவதைக் கிரகநிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. ஏழரைச் சனியின் பாதிப்பு அதிகமாக இராது. இதற்கு முக்கியக் காரணம், குருவின் மகர ராசி சஞ்சாரம், உங்கள் ராசிக்குப் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஏற்பட்டதுடன் உங்கள் ராசிக்கு குருபகவானின் சுபப்பார்வை கிடைப்பதுமாகும். `குரு பார்க்க கோடி தோஷம் விலகும்!' என்பது ஆன்றோர் அருளியுள்ள வாக்காகும். குருபகவானின் சுபப்பார்வையால் வரும் ஓராண்டிற்கு கன்னி ராசி வியாபாரிகள் குறைவில்லாத பல நன்மைகளை அடையப்போவதைக் கிரகநிலைகள் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. சக கூட்டாளிகள், தொழிலாளர்கள் ஆகியோருடன் ஏற்பட்டுவந்த கருத்து வேற்றுமை, ஒற்றுமைக்குறைவு ஆகியவை நீங்கும்.

கலைத்துறையினர் : சிறந்த முன்னேற்றம் உங்களுக்கு வரும் ஓராண்டு காலத்திற்கு ஏற்படப் போவதை குருபகவானின் மகர ராசி மாறுதல் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. ஏழரைச்சனியின் நிலையினால் அலைச்சலும் உழைப்பும் அதிகமிருந்தாலும் அதற்கேற்ற வருமானம் கிடைப்பது நிச்சயம். புதிய வாய்ப்புகள் கைகொடுக்கும். தயாரிப்பாளர்களுக்குச் சாதாரணப் படங்கள்கூட நல்ல லாபத்தைப் பெற்றுத்தரும். புதிதாகக் கலை உலகில் அடியெடுத்து வைக்க நினைக்கும் இளைஞர்கள், பெண்கள் ஆகியோருக்கு வெற்றிப் பாதையை உறுதி செய்கிறது, குருபகவானின் மகரராசி மாறுதல். சிலருக்கு விவாக யோகமும் உண்டு.

அரசியல் துறையினர் : சம்பந்தப்பட்ட கிரகநிலைகள் அரசியல்துறையினருக்கு நன்மை தரும்படி அமைந்துள்ளன. குருபகவானின் மகர ராசி மாறுதல், மற்ற கிரகங்களினால் ஏற்படும் நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்படி அமைந்துள்ளது. சிலருக்குக் கட்சியில் முக்கியப் பதவி ஒன்று அளிக்கப்படக்கூடும். ஜெனனகால கிரகநிலைகள் மற்றும் தசா, புக்திகள் ஆகியவை சுபபலம் பெற்றிருப்பின் புதிய அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கும், அம்முயற்சி அமோக வெற்றி பெறுவதற்கும் சிறந்த வாய்ப்புள்ளது.

மாணவமணிகள் : படிப்பில் வரும் ஓராண்டு காலத்திற்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். மனம் பாடங்களில் பதியும். ஞாபகத்திறன் கூடும். படிப்பில் மட்டுமா முன்னேற்றம்? விளையாட்டுகள், போட்டிகள் ஆகியவற்றில்கூட அமோக வெற்றி பெற்று மிக எளிதில் பரிசுகளை தட்டிச் செல்வீர்கள். இருப்பினும் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். அடுத்த ஆண்டு கல்லூரி அட்மிஷனில் அதிகமாக கஷ்டப்படாமல் உங்கள்விருப்பப்படி இடம் கிடைக்கும்.

விவசாயத்துறையினர் : பயிர்கள் செழித்து வளரும். வருமானம் உயரும். வயல் பணிகளில் உழைப்பு கடினமாக இருந்தாலும் அதற்கேற்ற வருமானம் அதிகரிக்கும். ஒரு சிலருக்குப் புதிய நிலம், புதிய வீடு ஆகியவை வாங்கும் யோகமும் அமைந்துள்ளது.

பெண்மணிகள் : மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய ஓராண்டு உங்களுக்காகக் காத்துள்ளது. கவலைகள் நீங்கி மனதில் உற்சாகம் பிறக்கும். குழந்தைகளின் முன்னேற்றம் பெருமிதம் அளிக்கும். கணவரின் அன்பிற்குக் குறைவில்லை. ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருந்தால் போதும். மற்றபடி கன்னி ராசியில் பிறந்துள்ள சகோதரிகளுக்குக் கவலையில்லாத ஓராண்டு. தசா, புக்திகள் சிறந்த சுபபலம் பெற்றிருந்தால் மழலைப்பாக்கியம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது.

அறிவுரை

கன்னி ராசியினருக்கு இந்த குருபகவானின் இடப்பெயர்ச்சி மிகவும் நல்லது. சனிபகவானைத் தவிர மற்ற கிரகங்களும் நன்மை தரும்படியாகவே சஞ்சரிக்கின்றன. சனி மட்டும் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல் உபாதைகளும், அசதியும், சோர்வும், அடிக்கடி உற்சாகக் குறைவும், காரணமில்லாத மனச்சோர்வும் ஏற்படக்கூடும். எளிய பரிகாரத்தினால் சனிபகவானால் ஏற்படப்போகும் சிறு பிரச்சினைகள், ஆரோக்கியக் குறைவு, சில தருணங்களில் ஏற்படும் மனக்கலக்கம், குழப்பம் ஆகியவை கீழே கூறியுள்ள எளிய பரிகாரங்களால் குறைத்துக்கொள்வது மட்டுமல்ல முற்றிலும் தவிர்க்கவும் உதவும். வேண்டியது நம்பிக்கையும், சிரத்தையும் மட்டுமே.

பரிகாரம்

1. ஒருமுறை திருக்கொள்ளிக்காடு அல்லது திருநள்ளாறு அல்லது திருமோகூர் (ஸ்ரீ காளமேகப் பெருமாள்) சென்று முறையே நல்லெண்ணெய் மற்றும் பசு நெய்தீபம் ஏற்றி வைத்து தரிசித்துவிட்டு வரவும்.

2. சனிக்கிழமைகளில் மட்டும் ஒருபொழுது அல்லது பூரண உபவாசம் இருப்பது நல்லது. பால், பழம் மட்டும் சாப்பிடலாம்.

3. தினமும் உங்கள் கையினாலேயே மூன்று உருண்டை சாதத்தில் சிறிது எள் சேர்த்து காகத்திற்கு வைத்து வரவும்.

4. ஆசார அனுஷ்டானங்களில் சிறந்த முதியவர் ஒருவருக்கு வஸ்திரம், தீபம், சக்திக்கேற்ப தட்சணையை வெற்றிலைப்பாக்குப் பழத்துடன் சனிக்கிழமை அன்று நீராடியபின்பு கொடுத்து, நமஸ்கரித்து அவரது ஆசியைப் பெறவும். இந்த நான்கு பரிகாரங்களில் எவை முடிகிறதோ அவற்றை மட்டும் வசதிக்கேற்ப செய்தால் சனிபகவானின் ஏழரைச்சனி விளைவுகள் நீங்கும்.

Thursday, October 30, 2008

Good one

உங்களுக்குப் பிரச்சினையா?-இதை அவசியம் படியுங்கள்
பல வருடங்களுக்கு முன்பு ரீடர்ஸ் டைஜஸ்டில் ஒரு கட்டுரை படித்தேன். அமெரிக்க கப்பற்படையில் மிகப் பெரிய பதவி வகித்து ஓய்வு பெற்ற ஒருவர் "நான் படித்த மிகப்பெரிய பாடம்" என்ற தலைப்பில் அவர் வாழ்க்கையில் கற்ற பாடத்தைப் பற்றி எழுதி இருந்த கட்டுரை அது.

அவர் கப்பற்படையில் சிறிய பதவியில் இருந்த காலம் அது. நடுக்கடலில் இருந்த ஒரு கப்பலில் ஏதோ சிரமமான வேலை அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. வேலைப் பளு அதிகம் இருந்த ஒரு நாள் வேறு சில கூடுதல் பணியும் அவர் தலையில் விழ அவருக்கு கோபம் தாளவில்லை. நேராக தன் உயரதிகாரியான கப்பலின் கேப்டனிடம் சென்று கோபத்தில் கத்தினார். "முதலிலேயே என் பணிக்கு உதவியாளரை தரவில்லை. இப்போது இது போல் கூடுதல் வேலை வேறு தருகிறீர்கள். எனக்கு பிரச்சினைக்கு மேல் பிரச்சினை(problem) தருகிறீர்கள்." என்கிற ரீதியில் சுமார் கால் மணி நேரம் விடாமல் பொரிந்து தள்ளினார். அவர் பேசியதில் பிரச்சினை என்ற சொல் பல முறை உபயோகப்படுத்தப்பட்டது.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட கப்பலின் வயதான கேப்டன் அமைதியாகச் சொன்னார். "நீ பேசும் போது பிரச்சினை என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தினாய். பிரச்சினை (problem) என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா? உனக்கு முதுகுத் தண்டு முறிந்து போய் படுத்த படுக்கையாய் இருக்கிறாய். அது குணமாக வருடக்கணக்காகும் என்றால் அது பிரச்சினை. உன் வீடு எரிந்து போய் இருக்கின்ற எல்லாவற்றையும் இழந்து நீ நடுத்தெருவில் நின்றால் அது பிரச்சினை.... ஆண்டாண்டு காலம் முயன்றால் மட்டுமே சரி செய்ய முடியும் அல்லது சரி செய்யவே முடியாது என்கிற வகையில் வருவது மட்டுமே அது பிரச்சினை. இது போன்ற பிரச்சினைகள் மனிதனின் வாழ்க்கையில் ஓரிரண்டு வரலாம். வராமலும் இருக்கலாம்".

"மற்றபடி நீ பிரச்சினை என்ற பெயரில் சொல்கின்ற எல்லாமே அசௌகரியங்கள்(inconveniences). இது போன்ற அசௌகரியங்கள் வாழ்க்கையில் நிறைய வரும். அந்தந்த சமயத்தில் இவை பெரிதாகத் தோன்றும். ஆனால் மணிக் கணக்கிலோ நாட்கணக்கிலோ இவை சமாளிக்கப்பட்டு மறக்கப்படக் கூடியவை. பின்னாளில் யோசித்துப் பார்த்தால் அற்ப விஷயமாகத் தோன்றும். இப்போது ஆத்திரப்படும் உனக்கே ஆறு மாதம் கழித்து நினைத்துப் பார்க்கையில் இது அவ்வளவு பெரிய விஷயமாய் தோன்றாது."

"நான் சொல்வதை நன்றாக நினைவு வைத்துக் கொள். நமது வாழ்க்கை முழுவதும் எல்லாக் கட்டங்களிலும் இது போன்ற அசௌகரியங்கள் நிறையவே இருக்கும். இதற்கெல்லாம் பிரச்சினை என்ற பெயரிட்டு வாழ்க்கையைப் பார்த்தால் நீ என்றுமே மகிழ்ச்சியாய் இருக்க முடியாது"

அந்த வார்த்தைகளைக் கேட்ட பிறகு எல்லாவற்றையும் ஒரு புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கத் துவங்கியதாய் அந்த அதிகாரி அந்தக் கட்டுரையில் பின்னாளில் எழுதினார். "அவர் சொன்னது மிகப்பெரிய பாடமாக எனக்கு இருந்தது. அன்றிலிருந்து நான் எனக்கு சிக்கலை ஏற்படுத்தும் சூழ்நிலைகள் வரும் போதெல்லாம் அது உண்மையான பிரச்சினையா, இல்லை அப்போதைய அசௌகரியமா என்று என்னையே கேட்டுக் கொள்ள ஆரம்பித்தேன். நம் வாழ்க்கையில் அசௌகரியங்களைத் தான் அதிகம் சந்திக்கிறோம் என்றும் உண்மையில் அவை அவ்வளவு பெரிய விஷயங்கள் அல்ல என்றும் புரிய ஆரம்பித்தது. கோபம், வருத்தம் எல்லாம் குறைய ஆரம்பித்து பொறுமையும், அமைதியும் என்னில் பெருக ஆரம்பித்தது"

அந்தக் கட்டுரை எனக்கும் பெரிய விழிப்புணர்வை படித்த அன்று ஏற்படுத்தியது. அன்றிலிருந்து அசௌகரியமா, பிரச்சினையா என்று ஒவ்வொரு கஷ்டமான சூழ்நிலைகளில் நானும் என்னைக் கேட்டுக் கொள்ள ஆரம்பித்தேன். சரியான பெயரில் அணுகும் போதே அதை சமாளிப்பது எளிதாகிறது. அசௌகரியத்தின் சக்தி எல்லாம் அந்தந்த நேரத்திற்குத் தான். நிதானம் இழக்காமல் இருந்தால் தூசைத் தட்டுவது போல் அதைத் தட்டிக் களைய முடியும். அப்படி முடியாததை அந்த நேரத்தில் சற்றுப் பொறுமையாக தாக்குப் பிடித்தால் அந்தக் கட்டத்தை சுலபமாக கடக்க முடியும். அந்தக் கேப்டன் சொன்னது போல வாழ்க்கையில் நாம் பிரச்சினையாகக் கருதுவதில் பெரும்பாலானவை அசௌகரியங்களே.

நம்மில் எத்தனை பேர் அசௌகரியங்களை பூதக்கண்ணாடி மூலம் பார்த்து அதற்குப் பிரச்சினை என்று பெயரிட்டு தேவைக்கும் அதிகமாக கொந்தளித்து, நிஜமாகவே பிரச்சினை ஆக்கி, மற்றவர்கள் மன அமைதியையும், நம் மன அமைதியையும் இழந்து அல்லல் படுகிறோம். பல சமயங்களில் நாம் அப்படிப்பட்ட 'பிரச்சினை'யைக் கைவிடுவது எப்போதென்றால் அடுத்த 'பிரச்சினை' ஒன்று வரும் போது தான்.

நீங்களும் நிதானமாக யோசியுங்கள்- உங்கள் பிரச்சினை உண்மையில் பிரச்சினை தானா? இல்லை இப்போதைய அசௌகரியமா? இப்போதைய அசௌகரியம் என்றால் அப்படி உணரும் போதே மன உளைச்சல் தானாகக் குறையக் காண்பீர்கள். அதை சரி செய்யப் பாருங்கள். அல்லது அலட்சியப்படுத்துங்கள். அதை சிறிது காலம் தாக்குப் பிடியுங்கள். அப்படிச் செய்தால் அவை சீக்கிரமாகவே விலகுவதைக் காண்பீர்கள். அவற்றிற்கு நீங்கள் தரும் நேரமும், கவனமும், சக்தி விரயமும் குறையும் போது உண்மையான ஓரிரு பிரச்சினைகளுக்கோ, தாங்கள் செய்ய வேண்டிய முக்கிய காரியங்களுக்கோ அந்த நேரத்தையும், அந்த கவனத்தையும், அந்த சக்தியையும் நீங்கள் தர முடியும். பிரச்சினைகள் இருந்தால் தீர்க்கவும், சாதனைகள் புரியவும் இந்த சிறிய பாகுபாடும், பக்குவமும் நிறையவே உங்களுக்கு உதவி புரியும்.

Thursday, September 25, 2008

Question and Answer - AMR- This week Kumudam Jothidam

திரு...................
பெருந்துறை.

கேள்வி : எனக்கு வயது 57. என் மனைவிக்கு வயது 50. எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். எனது மூத்த மகள் 2003-ல் எங்களுக்குத் தெரியாமல் ஒரு கிறிஸ்தவப் பையனைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டு விட்டாள். இந்தச் சம்பவத்தால் எங்களது பெற்றோர், உடன்பிறந்தோர், நண்பர்கள் என அனைவரும் எங்களை விட்டு விலகி விட்டனர். எனது தாய் காலமானபோது, அந்திமக்கிரியைகூட நான் செய்யக்கூடாது என்று எனது தந்தையும், சகோதரிகளும் ஊரார் முன் தடுத்து நிறுத்தி அவமானப்படுத்தினார்கள்.

கிறிஸ்தவப் பையனைக் காதல் திருமணம் செய்துகொண்ட எனது மூத்த மகள் மூன்றாவது மாதத்திலேயே கர்ப்பிணியாகி எங்களிடமே திரும்பி வந்துவிட்டாள். 2004-ல் அவளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அவள் காதலித்துக் கைப்பிடித்த அந்தக் கிறிஸ்தவ கணவனோ அல்லது அவனைச் சார்ந்தவர்களோ குழந்தையைக்கூட வந்து பார்க்கவில்லை. காவல்துறையிடம் அவர்களுக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, அவளது கணவன் வீட்டார் நீதிமன்றத்தில் விவாகரத்து பெறுவதற்கான ஒப்பந்தம் தயார் செய்து என் மகளை ஒதுக்கி வைத்துவிட்டனர். எங்களுக்குப் பணபலமோ அல்லது ஆள்பலமோ இல்லாததால் விதி விட்ட வழி என்று வாழ்ந்து வந்தோம். இக்காலகட்டத்தில் எனது மகள், தான் செய்த தவறை நினைத்து தற்கொலைக்கு முயன்றாள். தக்க தருணத்தில் அவளைக் காப்பாற்றி விட்டோம்.

2006-ல் என் மகள், நான் எவ்வளவோ புத்திமதி கூறியும் கேட்காமல், மீண்டும் அவளது கிறிஸ்தவக் கணவனுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தாள். குழந்தையை மட்டும் நாங்கள் வளர்த்து வந்தோம். பேரனைக் கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்வதற்காக என் மகளை அடித்துத் துன்புறுத்தி, எங்களிடம் இருந்த பேரனை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டனர்.

எங்களுக்கு ஆறுதல் கூற ஒரு ஜீவனும் இல்லாத நிலையில் தங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன். எங்கள் பேரன் எங்களிடம் திரும்பி வருவானா? எனது கடன் தொல்லைகள் எப்போது தீரும்? முதல் மகள் ஒரு கிறிஸ்தவப் பையனை மணந்ததால் தடைபட்டுள்ள எனது இரண்டாவது மகளின் திருமணம் எப்போது நடைபெறும்?

பதில் :மதமாற்றம் என்ற தீயில் கருகித் துடிக்கும் இந்துக் குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாம் ஏற்கெனவே பலமுறை ஆதாரபூர்வமான புள்ளிவிவரங்களுடன் விவரித்துள்ளபடி மதமாற்ற முயற்சிகளில் ஒன்றுதான், இந்துப் பெண்களைக் காதலிக்கும்படியும், அதன்மூலம் அப்பெண்களை மதமாற்றம் செய்யும்படியும் அவர்களது வாரப் பிரார்த்தனைக் கூட்டங்களில் வற்புறுத்தி வருவதும் அனைவருக்கும் தெரியும். இது மிகப் பெரிய சமூகப் பிரச்சினையாக ஏராளமான இந்துக் குடும்பங்களில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் விளைவுதான், இதுவரை மதமாற்றம் எனும் திட்டமிட்ட அட்டூழியத்தைப் பொறுத்துவந்த இந்துக்கள், இனி பொறுக்க இயலாத மனநிலையில் இப்போது உள்ளனர்.

`மதமாற்றத்தின் மூலம் இந்து சமூகத்தை அழிப்பதற்கு எங்களுக்குப் பாதுகாப்பு தரவேண்டும்' என்றல்லவா மற்ற சமூகத்தினர் கேட்கிறார்கள்! இது எவ்விதத்தில் நியாயமாகும்? எத்தனை காலம்தான் இந்த அநீதியை மக்கள் பொறுத்துக்கொள்வார்கள்? ஒருவர் விருப்பப்பட்டால் எந்த மதத்திற்கு வேண்டுமானாலும் மாறட்டும். ஆனால் வெளிநாடுகளிலிருந்து பணத்தைக் கொண்டுவந்து குவித்து, உலகின் ஒப்பற்ற இந்து மதத்தைப் பற்றித் தரக்குறைவாகப் பேசி ஏதோ தங்கள் மதம் ஒன்றுதான் மதம் என்றும், அதுமட்டும்தான் சொர்க்கத்தைத் தரும் என்றும் பிரசாரம் செய்து வரும் ஆணவத்தை இனியும் மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுமென்று சுயநலம் பிடித்த நம் அரசியல்வாதிகள் எதிர்பார்த்தால் அது நடக்காது. இதுவரை மதமாற்றம் செய்திருப்பதோடு திருப்தி அடையட்டும். இனி வேண்டாம்.

இவர்களுக்குத் துணிவிருந்தால் சவுதி அரேபியாவிலோ அல்லது எகிப்திலோ அல்லது ஈரானிலோ அல்லது துருக்கியிலோ மதம் மாற்றம் செய்து பார்க்கட்டுமே! செய்வார்களா? முயற்சி செய்தால் இவர்கள் தலை இவர்கள் கழுத்திலிருக்காது என்பது இவர்களுக்குத் தெரியும். இந்தியர்கள்தான் இளிச்சவாயர்கள்! இங்குள்ள அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கமுடியும் என்ற ஆணவத்தினால்தான் மதமாற்ற முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

நிற்க, ஏமாற்றத்திற்குள்ளான உங்கள் மகளை நினைத்து நாங்கள் மிகவும் மனம் வருந்துகிறோம். அக்கிரமத்தை உடனுக்குடன் அழித்து தர்மத்தை நிலை நாட்டுபவர் ஸ்ரீயோக நரசிம்மன்! அவரைப் பூஜித்து வாருங்கள். விரைவில் நல்வழிகாட்டுவார். 2009 சித்திரை முடிவதற்குள் தங்கள் இரண்டாவது மகளுக்கு திருமணம் நடந்துவிடும். கவலைப்படாதீர்கள்.

Conversion

இந்திய அரசாங்கம் கடைப்பிடித்து வரும் ஒருதலைப்பட்சமான கொள்கைகளினால், எதிர்காலத்தில் நம் நாடு எப்படி இருக்கப்போகிறது என்பதை எடுத்துக்காட்டி, எச்சரிக்கை செய்யும் நிகழ்ச்சிகள்தான், தற்போது ஒரிசா, பெங்களூரு, தவணகரே, மங்களூரு, உடுப்பி மற்றும் கேரளத்தின் காஸர்கோடு ஆகிய இடங்களில் நிகழ்ந்துவருபவை!

`மதச்சார்பின்மை நாடு' என்று பேச்சளவில் கூறிக்கொண்டு, குறிப்பிட்ட சில மதத்தினர்களுக்கு மட்டும் ஏராளமான சலுகைகளை நம் இந்திய அரசாங்கம் வாரி வழங்கி வருகிறது. அதுவும் வெளிப்படையாகவே செய்து வருகிறது. `மதச்சார்பின்மை' என்ற உபதேசம் இந்துக்களுக்கு மட்டும்தான். இதனை எவரும் மறுக்கமுடியாது.

இத்தகைய அநீதியைப் பயன்படுத்திக்கொண்டு, அன்னிய மதத்தினர் தீவிர மதமாற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குடும்பம், குடும்பமாக, கிராமம், கிராமமாக மதமாற்றம் செய்து வருகின்றனர். இதற்காக, வெளிநாடுகளிலிருந்து ஏராளமான பணம் வந்து குவிந்து கொண்டிருக்கிறது.

தற்போது, இந்துக்களின் நிலை ‘survival’ என்ற நிலைக்கு வந்துவிட்டது. மதமாற்றம் என்னும் புற்றுநோய், இந்து சமூகத்தை அடியோடு நிர்மூலமாக்கி வருகிறது. பெரும்பாலான பத்திரிகைகள்கூட, செய்திகளை நியாயமாக வெளியிடாமல், அரசாங்கத்தைத் திருப்திபடுத்துவதற்காகவும், `இதர காரணங்களுக்காகவும்' ஒருதலைப் பட்சமாக செய்திகளை வெளியிட்டும், தலையங்கங்கள் எழுதியும் வருகின்றன.

இன்று, இந்து சமூகம் தனது தாய்நாட்டிலேயே அனாதையாகி நிற்கிறது!

மற்ற மதத்தினர் இன்று மதமாற்றத்தின் மூலம், பாரத புண்ணியபூமியைத் தங்களுக்குள் பங்கு போட்டுக்கொண்டு வருகின்றனர். இவ்விதம் திட்டமிட்டுச் செய்ததன் விளைவுதான் பாகிஸ்தானை உருவாக்கிய அக்கிரமம்.

எத்தனை காலத்திற்குத்தான் பொறுமையாக இருப்பது? டில்லி மாநகரமே வெடிகுண்டுகளுக்கு இலக்காகி, ஒரு பாவமும் அறியாத பலர் உயிரிழந்தபோது, `மத நல்லிணக்கம் அவசியம்' என்று பேசியிருக்கிறார் நமது உள்துறை அமைச்சர்!

இந்தப் போலி, சுயநல நாடகம் இனி போதும். `தீவிரவாதம், மதமாற்றம் ஆகிய புற்றுநோய்களைக் குணப்படுத்துங்கள்' என அரசியல் பிரமுகர்களை வேண்டிக் கொள்கிறோம். இனியாவது தாய்நாட்டைப் பற்றி நினையுங்கள். நோயைக் குணப்படுத்துவதை விட்டுவிட்டு நோயாளியைக் குறை கூறுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை.

மதமாற்றத்திற்கு அவசியம் என்ன?

நாம் பலமுறை சுட்டிக்காட்டியபடி,உலகில் மற்ற மதங்கள் தோன்றுவதற்கு முன்பிலிருந்தே இந்து மதம் தழைத்தோங்கி வந்துள்ளது.

மற்ற மதங்கள் பிற்காலத்தில் வந்தவைதான். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதங்களின் பிரசாரகர்கள், ஏதோ இந்துக்கள் காட்டுமிராண்டிகள் போல வாழ்ந்து வந்தது போலவும், இவர்கள்தான் கல்வியைக் கொடுத்து நாகரிக மக்களாக மாற்றியதைப் போலவும் ஆணவம் பிடித்துப் பிரசாரம் செய்து வருகிறார்கள். இவர்களின் மதம் ஒன்றின் மூலம் மட்டும்தான் மோட்சம் கிடைக்கும் என்றும், மற்றவர்கள் நரகத்திற்குத்தான் போவார்கள் என்றும் ஒலிபெருக்கிகள் மூலம் பிரசாரம் செய்துவருவது நகைப்பிற்கு இடமாகும்.

முதன்முதலில் சுமார் 116 ஆண்டுகளுக்கு முன்பு, தேவாரம், திருவாசகம் போன்ற தெய்வீக நூல்களின் சில வாசகங்களைச் சிறிது மாற்றி, தங்கள் மதப் பாடல்களைப் போல் தந்திரமாக மாற்றியவர், கிறிஸ்துவ மதபோதகரான Rev. Fr. Finlay என்பவர். இவர் மன்னார்குடியில் Finlay கல்லூரியை ஆரம்பித்து, அதன்மூலம் ஏராளமான மதமாற்றங்களைச் செய்தவர். அவருக்கு முன்பு, 1835-ம் ஆண்டு, w.o. சிம்ப்ஸன் என்பவர் `வெஸ்லி மிஷன்' என்ற மதமாற்ற நிறுவனத்தை நாகையில் தொடங்கி, Rev. Fr. Eliaiah Hoole என்பவர் மூலம் தஞ்சை ஜில்லாவில் பெரிய அளவில் மதமாற்றம் செய்தார். அன்று Fr. Finlay காட்டிய வழியைப் பின்பற்றி, பல இந்துமத நூல்கள் அவர்கள் மத நூல்கள் போல் மாற்றி எழுதப்பட்டன பிற்காலத்தில்! இந்துக்களின் குத்துவிளக்கு, ஆராதனை மணி போன்றவற்றில் உள்ள நந்தி, அனுமன், சங்கு, சக்கரம், மதச்சின்னங்கள் ஆகியவற்றை மாற்றி, அவர்களது மதச்சின்னங்களை அமைத்து வருவதும் அனைவருக்கும் தெரியும்.

பிற மதத்தினரைத் தரக்குறைவாகப் பேசினால் சட்டப்படி அது குற்றமாகும். ஆனால் இந்துக்களைப் பற்றியும், இந்து தெய்வங்களைப் பற்றியும், இந்து தெய்வீக நூல்களைப் பற்றியும் எவர் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் தரக்குறைவாகப் பேசலாம்.

அன்னியர்களின் படையெடுப்புகளின்போது இந்துக்கள் பட்ட கஷ்டங்கள், கொடூரமான அனுபவங்கள் ஆகியவற்றிற்குச் சரித்திரத்தில் ஏராளமான சான்றுகள் உள்ளன. ஆனால் இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்த பிறகு இந்துக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. அவர்களுக்கு நீதி கிடையாது. இந்து சமூகத்தை அடியோடு மதமாற்றம் செய்து, அப்படி ஒரு சமூகமே கிடையாது என்ற நிலையை ஏற்படுத்த மற்ற மதத்தினர் திட்டமிட்டு, பண பலத்தினாலும், பல அரசியல் கட்சிகளின் மறைமுக மற்றும் நேரடி ஆதரவுடனும் செயல்பட்டு வருகின்றனர். இந்து மதத்தில் இல்லாத என்ன சிறப்பு இவர்கள் மதத்தில் உள்ளது? அப்பாவிகளான கோடிக்கணக்கான வயோதிகர்கள், பெண்கள், கைக்குழந்தைகள் ஆகியோருடன் ஹிரோஷிமா நகரை ஒரே விநாடியில் அழித்தது அந்த மதத்தைச் சார்ந்த நாடான அமெரிக்காதான். இத்தகைய கொடூரமான படுகொலையை என்றாவது பாரதம் செய்திருக்குமா?

அரசாங்கத்தின் இன்றைய பாரபட்சமான கொள்கையும், அநீதியும் நீடித்தால் வெகு விரைவில் தற்போது அவர்கள் பிற மதத்தினருக்குச் சலுகைகள் வழங்குவதற்காக `சிறுபான்மையினர்' என்ற முத்திரையினைப் பதித்து வருகிறார்களே! அந்நிலை மாறி இந்துக்கள் அவர்கள் நாட்டிலேயே சிறுபான்மையினராக மாறிவிடும் நாள் அதிக தூரத்தில் இல்லை. அவ்வளவு ஏன்? தற்போது நடைபெற்று வரும் வேகத்தில் மதமாற்றம் நீடித்தால் சிறுபான்மையினர் என்ற அளவிற்குக்கூட இந்து சமூகம் இருக்காது.

ஆதலால்தான், முழுமையாகத் தங்களை மற்ற மதத்தினர் அழித்து விடுவதற்கு முன்பு, தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக (survival) இந்து சமூகம் போராடி வருகிறது. அது தவறா?

நீதிக்கு மன்றாடும்,
ஏ.எம்.ஆர்.

Wednesday, September 24, 2008

Adhi Sankarar's Answers to common Question.

ஸ்தோத்திரங்கள், உரை நூல்கள், வேதாந்த விளக்கங்கள் என்று பல்வேறு நூல்களை அருளிய ஆதி சங்கரர், நம் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பல கருத்துகளை பாமரரும் புரிந்துகொள்ளும் வண்ணம் கேள்வி - பதில் பாணியில் அற்புதமாகத் தந்துள்ளார். அதன் பெயர் பிரச்னோத்ர ரத்னமாலிகா (வினா-விடை மணிமாலை). எவ்வளவு பெரிய விஷயங்களை எத்தனை எளிமையாகச் சொல்கிறார் ஆசார்யாள்! எல்லாம் சர்க்கரைப் பந்தல்.

சமஸ்கிருதத்தில் சங்கரர் அருளிய அந்த பிரச்னோத்ர ரத்னமாலிகாவைப் பலர் தமிழாக்கம் செய்திருந்தாலும் இலக்கியச் செம்மல் பேராசிரியர் கே.எஸ்.நாகராஜன் (முன்னாள் முதல்வர், டி.பி.ஜெயின் கல்லூரி), அற்புதமாக அந்தப் பணியைச் செய்திருக்கிறார். (யோக கே்ஷமா டிரஸ்ட் வெளியீடு)

மெத்தப் படித்தவர்களுக்குப் புரியும்படிதானே ஆசார்யாள் பெரிய பெரிய விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்? பாமர ஜனங்களுக்குப் புரியும்படி எதுவும் சொல்லவில்லையே? என்று ஏங்குபவர்களுக்கு விடைதான், இந்த பிரச்னோத்ர ரத்னமாலிகா.

இந்தக் கேள்வி-பதில்களைப் படித்து, மனனம் செய்து, அதன்படி நடக்கிறவர்கள் சாதுக்களிடையே சிறந்து விளங்கி ரத்னங்கள் போல உலகில் திகழ்வார்கள் என்று கூறுபவர் யார் தெரியுமா? ஜகத்குரு ஆதிசங்கரர்தான்.

இதோ அந்த அபூர்வமான பிரச்னோத்ர ரத்னமாலிகா.

கேள்வி: ஐயா, பெரியவரே, ஏற்றுக்கொள்ளத் தக்கது எது?

பதில்: குருவின் சொல்.

கேள்வி: செய்யத்தகாத காரியம் எது?

பதில்: பலராலும் நிந்திக்கத் தக்க செயல்.

கேள்வி: குரு என்பவர் யார்?

பதில்: தத்துவத்தை அறிந்து, சீடனின் நன்மையிலேயே எப்போதும் நாட்டம் கொண்டவரே குரு ஆவார்.

கேள்வி: நல்ல வித்வானாக உள்ளவன் விரைந்து செய்ய வேண்டியது எது?

பதில்: பிறப்பு_இறப்பு என்னும் பந்தம் தொடராமல் அறுத்துவிடுவது.

கேள்வி: மோட்சமாகிய மரத்துக்கு விதை எது?

பதில்: கர்மாக்களால் உண்டான நல்ல உண்மையான அறிவு.

கேள்வி: உலகில் ஆத்மாவுக்கு மிகவும் நல்லது எது?

பதில்: தர்மம்.

கேள்வி: இவ்வுலகில் புனிதமானவன் யார்?

பதில்: மனம் தூய்மையாக உள்ளவன்.

கேள்வி: எவன் உண்மையான (புலவன்) பண்டிதன்?

பதில்: நல்லது, கெட்டது என்று பிரித்தறியும் விவேகம் உடையவன்.

கேள்வி: எது விஷம் போன்றது?

பதில்: தனது குருவினிடத்தில் காட்டும் அவமரியாதை.

கேள்வி: இவ்வுலகில் சாரமானது எது? மனிதர் அனைவராலும் விரும்பத்தக்கது எது?

பதில்: தனக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்வதில் நாட்டம் கொண்ட பிறவியே.

கேள்வி: கள்ளைப்போல் மனத்துக்கு ஆசையை உண்டாக்குவது எது?

பதில்: நட்பு.

கேள்வி: திருடர்கள் யார்?

பதில்: சிற்றின்ப சுகங்கள்.

கேள்வி: ஸம்ஸாரத்தில் நம்மை சிக்க வைக்கும் கொடி எது?

பதில்: ஆசை.

கேள்வி: நம்முடைய உண்மையான பகைவன் யார்?

பதில்: முயற்சியின்மை.

கேள்வி: நமக்கு பயத்தை அளிக்கக் கூடியது எது?

பதில்: மரணம்.

கேள்வி: குருடனுக்குச் சமமானவன் யார்?

பதில்: ஆசை அதிகம் கொண்டவன்.

கேள்வி: எவன் உண்மை வீரன்?

பதில்: பெண்களின் கடைக்கண் பார்வைகளால் தாக்கப்படாதவன்.

கேள்வி: அமுதம்போல், காதுகளால் விரும்பிப் பருகக் கூடியது எது?

பதில்: சாதுக்களுடைய உபதேசம்.

கேள்வி: கௌரவம் பெற வழி எது?

பதில்: பிறரிடம் சென்று உதவி கோராமல் இருத்தலே.

கேள்வி: புரிந்துகொள்ள முடியாதது எது?

பதில்: பெண் மனம்.

கேள்வி: எவன் புத்திசாலி?

பதில்: பெண்களின் நடத்தையினால் பாதிக்கப்படாதவன்.

கேள்வி: எது மிக்க துயரத்தைத் தரும்?

பதில்: போதுமென்ற மனம் இல்லாமை.

கேள்வி: எது அற்பமான செயல்?

பதில்: கீழ்குணமுடையவனிடம் உதவி கோருதல்.

கேள்வி: எது உண்மையான வாழ்வு?

பதில்: குற்றமற்ற வாழ்க்கை.

கேள்வி: ஜடப்பொருளின் தன்மை எது?

பதில்: படித்துவிட்டு, அதைப் பயிற்சி செய்யாமல் இருத்தல்.

கேள்வி: விழிப்புடன் இருப்பவன் யார்?

பதில்: விவேகம் உடையவன்.

கேள்வி: மனிதர்களுக்குத் தூக்கம் என்பது எது?

பதில்: மடமை, மூடத்தனம்.

கேள்வி: தாமரை இலைமேல் நீர்போல் நிலையற்றது எது?

பதில்: இளமை, செல்வம், ஆயுள் ஆகிய மூன்றும்.

கேள்வி: சந்திரனின் நிழல் போல் குளிர்ந்து இருப்பவர் யார்?

பதில்: சாதுக்கள்.

கேள்வி: நரகம் என்பது எது?

பதில்: அடிமைத்தனம்.

கேள்வி: எது உண்மையான சுகத்தைத் தரவல்லது?

பதில்: எல்லாவிதமான தொடர்புகளையும் துண்டித்துக் கொள்ளுதல்.

கேள்வி: எது ஸத்யம், உண்மை?

பதில்: உயிர்களிடத்து அன்பு.

கேள்வி: உலகில் உயிரினங்களுக்கு மிகப் பிரியமானது எது?

பதில்: அவ்வவற்றின் உயிரே.

கேள்வி: துன்பத்தை விளைவிக்கக் கூடியது எது?

பதில்: சினம் (கோபம்).

கேள்வி: இன்பத்தைத் தரவல்லது எது?

பதில்: சான்றோர் நட்பு.

கேள்வி: எல்லா துன்பங்களையும் போக்க வல்லவன் யார்?

பதில்: அனைத்தையும் துறந்தவன்.

கேள்வி: விலைமதிக்க முடியாதது எது?

பதில்: காலத்தாற் செய்த உதவி.

கேள்வி: இறக்கும்வரை ஓயாமல் துன்பம் தரவல்லது எது?

பதில்: நாம் செய்துவிட்டு மறைத்து வைத்திருக்கும் பாவச் செயல்.

கேள்வி: எந்தச் செயல்களில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்?

பதில்: கல்வி கற்பதிலும், மருந்து உண்பதிலும், தானம் கொடுப்பதிலும்.

கேள்வி: எவற்றில் நாம் கவனம் செலுத்தாமல் இருக்க வேண்டும்?

பதில்: தீயவர், அயல் பெண்கள், பிறர் சொத்து ஆகியவற்றில்.

கேள்வி: இரவும் பகலும் நாம் சிந்திக்க வேண்டியது எதை?

பதில்: உலகின் நிலையற்ற தன்மையை.

கேள்வி: நாம் அன்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டியவை எவை?

பதில்: ஏழை எளியவர்களிடம் கருணை, சாதுக்களின் நட்பு.

கேள்வி: யார் யாருடைய ஆத்மாக்களை இறக்குந் தருணத்திலும் தூய்மைப்படுத்த முடியாது?

பதில்: மூடன், சந்தேகப் பிராணி, நிம்மதியற்றவன், செய்நன்றி கொன்றவன் ஆகியோருடைய ஆத்மாக்களை.

கேள்வி: சாது என்பவன் யார்?

பதில்: நன்னடத்தை உடையவன்.

கேள்வி: எவனைத் தாழ்ந்தவன் என்கிறோம்?

பதில்: கெட்ட நடத்தை கொண்டவனை.

கேள்வி: இவ்வுலகை வென்றவன் யார்?

பதில்: சத்யமும் பொறுமையும் கொண்டவன்.

கேள்வி: தேவர்களும் வணங்கும் தகுதி பெற்றவன் யார்?

பதில்: கருணை உள்ளம் படைத்தவன்.

கேள்வி: மனிதனுக்கு எதனால் உண்மையான விழிப்பு உண்டாகும்?

பதில்: ஸம்ஸாரமாகிய பெரிய காட்டைப் பார்த்த பிறகு.

கேள்வி: உயிரினங்களை எவன் எளிதாகத் தன் வசப்படுத்த முடியும்?

பதில்: உண்மை பேசுபவனாகவும், அன்பும், நல்லடக்கமும் உடையவனாகவும் இருப்பவன்
.
கேள்வி: எவ்வழியை நாம் பின்பற்ற வேண்டும்?

பதில்: இம்மை_மறுமை இரண்டிலும் நீடித்த சுகத்தை அளிக்கும் நேர்மை வழியை.

கேள்வி: குருடன் யார்?

பதில்: தகாத செயல்களில் ஈடுபடுபவன்.

கேள்வி: செவிடன் யார்?

பதில்: நல்லவற்றைக் கேளாதவன்.

கேள்வி: ஊமை யார்?

பதில்: தக்க தருணத்தில் இனிமையாகப் பேசத் தெரியாதவன்.

கேள்வி: தானம் என்பது எது?

பதில்: பெற்றுக்கொள்பவன் கேளாமலும், பிரதிபலன் எதிர்பாராமலும் கொடுப்பது.

கேள்வி: உண்மையான நண்பன் யார்?

பதில்: பாவச் செயல்களிலிருந்து நம்மை விலக்குபவன்.

கேள்வி: மனிதனுக்கு அணிகலன் யாது?

பதில்: அவனுடைய குணம்.

கேள்வி: சொல்லுக்கு அணி செய்வது எது?

பதில்: வாய்மை.

கேள்வி: மின்னல் ஒளிபோல் தோன்றி கணத்தில் மறைவது எது?

பதில்: தீயோர் நட்பு.

கேள்வி: குலத்தையும் குணத்தையும் காப்பவர் யார்?

பதில்: சாதுக்களே.

கேள்வி: இவ்வுலகில் சிந்தாமணியைப்போல் கிடைத்தற்கரியது எது?

பதில்: ஞானிகள் நான்கு பொருட்களைச் சிந்தாமணி போன்றவை என்பர்.

கேள்வி: அவை யாவை?

பதில்: அன்புடன் அளிக்கப்பட்ட தானம், ஆணவம் இல்லாத அறிவு, அமைதி பொருந்திய வீரம், தியாக உள்ளம் படைத்தோர் செல்வம்.

கேள்வி: வருந்தத்தக்க குணம் எது?

பதில்: செல்வம் இருந்தும் கொடுக்க மனம் இல்லாமை.

கேள்வி: சிறந்த குணம் எது?

பதில்: வள்ளல் தன்மை.

கேள்வி: நல்ல புலவர்களால் எவன் மதிக்கப்படுவான்?

பதில்: இயற்கையாகவே தன்னடக்கம் உடையவன்.

கேள்வி: குலத்தின் பெருமையை உயர்த்துபவன் யார்?

பதில்: எல்லா நற்குணங்களும் நிறைந்திருந்தும், தன்னடக்கத்துடன் திகழ்பவன்.

கேள்வி: இவ்வுலகம் யாருக்கு வயப்படுகிறது?

பதில்: இனிய, நன்மை பயக்கக்கூடிய சொற்களை உடையவனாய், எப்போதும் அறவழியில் செல்பவனுக்கு.

கேள்வி: நல்ல புலவரின் மனத்தைக் கவர்பவை எவை?

பதில்: நல்ல கவிதையும், அறிவு நிரம்பிய பெண்ணும்.

கேள்வி: விபத்துகள் யாரை நெருங்குவதில்லை?

பதில்: முதியோர் சொற்படி நடக்கும் அறிவாளியை.

கேள்வி: செல்வத்தின் கடவுளான லட்சுமி யாரை விரும்புகிறாள்?

பதில்: சோம்பலின்றி உழைப்பவனையும், நேர்மையான நெறியில் நடப்பவனையும்.

கேள்வி: லட்சுமி யாரை விட்டு திடீரென்று விலகுகிறாள்?

பதில்: குரு, தேவர்கள் ஆகியோரை நிந்திப்பவனையும், சோம்பல் குணம் உள்ளவனையும்.

கேள்வி: நாம் எங்கு வசிக்க வேண்டும்?

பதில்: சாதுக்கள் மத்தியில் அல்லது காசியில்.

கேள்வி: எந்த இடங்களை நாம் விலக்க வேண்டும்?

பதில்: கஞ்சர்கள் வாழும் இடத்தையும், பேராசை கொண்ட அரசனின் நாட்டையும்.

கேள்வி: துன்பத்திலிருந்து ஒருவனைக் காப்பாற்றக் கூடியவை எவை?

பதில்: கடமையுணர்ச்சி கொண்ட மனைவியும், தைரியமும்.

கேள்வி: பரிதாபத்துக்கு உரியவன் யார்?

பதில்: வசதி இருந்தும் பிறருக்குக் கொடுக்க மனம் இல்லாதவன்.

கேள்வி: ஒருவன் அற்பனாக ஆவதற்குக் காரணம் என்ன?

பதில்: தகுதி அற்றவர்களிடம் யாசிப்பதுதான்.

கேள்வி: ராமபிரானைவிட சூரன் யார்?

பதில்: காமனுடைய அம்புக்கு இலக்கு ஆகாதவன்.

கேள்வி: இரவும் பகலும் நம் சிந்தனைக்கு உரியது எது?

பதில்: இறைவனின் திருவடி.

கேள்வி: கண்கள் இருந்தும் குருடர்கள் யார்?

பதில்: நாஸ்திகர்கள்.

கேள்வி: எவனை நாம் முடவன் என்று கூறலாம்?

பதில்: முதுமையில் தீர்த்த யாத்திரை செல்பவனை.

கேள்வி: எந்தத் தீர்த்தத்தை முக்கியமானதாகக் கருதலாம்?

பதில்: மனத்து அழுக்கை நீக்கி அதைத் தூய்மைப்படுத்துவதே சிறந்த தீர்த்தம்.

கேள்வி: மக்கள் எப்போதும் நினைக்க வேண்டியது எதை?

பதில்: விஷ்ணுவின் நாமாவை.

கேள்வி: புத்திசாலியான ஒருவன் எவற்றைச் சொல்லக்கூடாது?

பதில்: பிறர் குற்றங்களையும் பொய்யையும்.

கேள்வி: மனிதர்கள் தேடிப் பெறவேண்டியவை யாவை?

பதில்: கல்வி, பணம், வலிமை, புகழ், புண்ணியம்.

கேள்வி: மனிதனின் நல்ல குணங்கள் யாவற்றையும் அழிக்க வல்லது எது?

பதில்: பேராசை.

கேள்வி: நமது பலமான பகை எது?

பதில்: காமம், ஆசை.

கேள்வி: எந்த அரச சபையை நாம் விலக்க வேண்டும்?

பதில்: அனுபவமும் முதிர்ந்த வயதுமுடைய அமைச்சர்கள் இல்லாத சபையை.

கேள்வி: இவ்வுலகில் மனிதன் எந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்?

பதில்: அரசாங்க ஊழியத்தில்.

கேள்வி: உயிரைக்காட்டிலும் அதிகமாக விரும்பத்தக்கவை எவை?

பதில்: குலதர்மமும், சாதுக்களின் சகவாசமும்.

கேள்வி: கவனமாக காப்பாற்றப்பட வேண்டியவை யாவை?

பதில்: புகழ், பதிவிரதையான மனைவி, சுய புத்தி.

கேள்வி: கற்பகத் தரு போன்றது எது?

பதில்: நல்ல மாணவனுக்குக் கற்பிக்கப்படுகிற கல்வி.

கேள்வி: அழியாத ஆலமரம் போன்றது எது?

பதில்: முறைப்படி, பாத்திரம் அறிந்து, அளிக்கப்பட்ட உதவி.

கேள்வி: அனைவருக்கும் ஆயுதம் போன்றது எது?

பதில்: யுக்தி, சமயோசித புத்தி.

கேள்வி: தாய் எனக் கருதத்தக்கது எது?

பதில்: பசு.

கேள்வி: மனிதனுக்கு வலிமை எது?

பதில்: தைரியம்.

கேள்வி: மரணம் என்பது எது?

பதில்: கவனக்குறைவு.

கேள்வி: விஷம் எங்கு உள்ளது?

பதில்: தீயவர்களிடத்தில்.

கேள்வி: தீண்டத்தகாதது அல்லது தவிர்க்க வேண்டியது எது?

பதில்: கடன்.

கேள்வி: மனிதன் எப்பாடுபட்டேனும் பெற வேண்டியது எது?

பதில்: ஹரிபக்தி.

கேள்வி: மகாபாதகச் செயல் எது?

பதில்: மற்றவர்களைத் துன்புறுத்துதல்.

கேள்வி: எவன் கடவுளுக்குப் பிரியமானவன்?

பதில்: தானும் கோபப்படாமல், பிறருக்கும் கோபம் ஊட்டாமல் இருப்பவன்.

கேள்வி: காரிய சித்தி எதனால் உண்டாகும்?

பதில்: தவத்தினால்.

கேள்வி: புத்தி எவரிடத்தில் உள்ளது?

பதில்: அறவோர் இடத்தில்.

கேள்வி: புத்தி எப்படிக் கிடைக்கும்?

பதில்: முதியோர்களை உபசரித்துப் பணிவிடை செய்வதால்.

கேள்வி: முதியவர் யார்?

பதில்: தர்மத்தின் தத்துவத்தை முற்றிலும் உணர்ந்தவர்கள்.

கேள்வி: மரணத்தைக் காட்டிலும் துயரம் தருவது எது?

பதில்: கெட்ட பெயர்.

கேள்வி: எவன் சுகமாக வாழ்கிறான்?

பதில்: செல்வம் உடையவன்.

கேள்வி: செல்வம் என்பது யாது?

பதில்: எது நமக்குப் பிரியமானதோ, அதுவே நமக்குச் செல்வம்.

கேள்வி: உலகில் எல்லா இன்ப, சுகங்களுக்கும் காரணம் எது?

பதில்: புண்ணியச் செயல்கள்.

கேள்வி: துன்பத்துக்குக் காரணம் எது?

பதில்: பாவச் செயல்கள்.

கேள்வி: எல்லாவிதச் செல்வங்களும் யாருக்குக் கிடைக்கும்?

பதில்: பக்தியுடன் பகவான் சங்கரனை பூஜிப்பவருக்கு.

கேள்வி: எவன் மேன்மேலும் வளர்ச்சியுறுகிறான்?

பதில்: அடக்கம் உடையவன்.

கேள்வி: எவன் வளர்ச்சி குன்றி வருந்துகிறான்?

பதில்: திமிர் அல்லது அகங்காரம் கொண்டவன்.

கேள்வி: எவன் நம்பத் தகாதவன்?

பதில்: அடிக்கடி பொய் பேசுகிறவன்.

கேள்வி: எந்த சூழ்நிலையில் பொய் பேசுவது பாவச் செயல் ஆகாது?

பதில்: தர்மத்தைக் காக்கச் சொல்லப்படும் பொய்.

கேள்வி: எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட தர்மம் எது?

பதில்: அவரவர் குலத்தில் தோன்றிய முன்னோர்களும் ஆசார சீலர்களும் கடைப்பிடித்த தர்மமே.

கேள்வி: சாதுக்களுக்கு பலம் எது?

பதில்: தெய்வம்.

கேள்வி: சாது என்பவன் யார்?

பதில்: எதிலும் எப்போதும் திருப்தியோடு உள்ளவன்.

கேள்வி: தெய்வம் என்பது யாது?

பதில்: ஒருவனால் செய்யப்பட்ட நல்ல செயல்கள்.

கேள்வி: ஸுக்ருதி என்பவன் யார்?

பதில்: நல்லவர்களால் போற்றப்படுபவன்.

கேள்வி: இல்லறத்தில் உள்ளவனுக்கு உண்மை நண்பன் யார்?

பதில்: அவனுடைய மனைவி.

கேள்வி: இல்லறத்தான் யார்?

பதில்: யாகங்கள் செய்கிறவன்.

கேள்வி: யாகங்கள் யாவை?

பதில்: வேதங்களில் சொல்லப்பட்டவையும் மனித சமூகத்துக்கு நன்மை அளிப்பவையுமான செயல்கள்.

கேள்வி: யாருடைய செயல்கள் பயனுள்ளவை?

பதில்: நல்ல அனுஷ்டானங்களை உடையவனும், வேதத்தில் கூறப்பட்டபடி நடப்பவனும்.

கேள்வி: அவனுக்கு பிரமாணம், வழிகாட்டி எது?

பதில்: வேதமே ஆகும்.

கேள்வி: அனைவராலும் தாழ்த்தப்படுபவன் யார்?

பதில்: வேதநெறிப்படி செயல் ஆற்றாதவன்.

கேள்வி: எவன் உண்மையிலேயே பாக்யசாலி?

பதில்: முற்றும் துறந்தவன்.

கேள்வி: எவன் மதிக்கத்தக்கவன்?

பதில்: புலமையும் சாதுத் தன்மையும் ஒருங்கே கொண்டவன்.

கேள்வி: எவனுக்கு நாம் பணிவிடை செய்யலாம்?

பதில்: தானம் கொடுக்கும் தாராளமனம் படைத்தவனுக்கு.

கேள்வி: கொடைக்குணம் படைத்தவன் என்பவன் யார்?

பதில்: உதவி நாடி வருபவனை திருப்திபடுத்துகிறவன்.

கேள்வி: உடலைப் பெற்றவர்களுக்குச் சிறந்த பாக்கியம் எது?

பதில்: உடல் நலம்.

கேள்வி: உழைப்பின் பலனை முழுமையாகப் பெறுபவன் யார்?

பதில்: பயிர்த் தொழில் செய்பவன்.

கேள்வி: யாரை பாவங்கள் அணுகுவதில்லை?

பதில்: ஜபம் செய்கிறவனை.

கேள்வி: முழுமையான மனிதன் என்று யாரைச் சொல்லலாம்?

பதில்: மக்கட் பேறு பெற்றவனை.

கேள்வி: செயற்கரிய செயல் எது?

பதில்: மனத்தை அடக்கி நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது.

கேள்வி: பிரும்மசரியம் உடையவன் என்று யாரைக் கூறமுடியும்?

பதில்: தன்னுடைய வீரியத்தை வீணாக்காமல் கட்டுப்படுத்தி தியானத்தின் மூலம் அதை நல்ல முறையில் பயன்படுத்துபவனை.

கேள்வி: பரதேவதை என்று யாரைக் கூறலாம்?

பதில்: சத், சித், ஆனந்தம் என்பவற்றில் சித்சக்தியை.

கேள்வி: உலகுக்குத் தலைவன் யார்?

பதில்: சூரியன்.

கேள்வி: அனைவருக்கும் வாழ்வைக் கொடுப்பது எது?

பதில்: மழை.

கேள்வி: சூரன் என்று யாரைக் கூறலாம்?

பதில்: பயந்தவனைக் காப்பவனை அல்லது பயத்திலிருந்து மற்றவர்களைக் காப்பவனை.

கேள்வி: நம்மைக் காப்பவர் யார்?

பதில்: நம்முடைய குரு.

கேள்வி: ஜகத்குரு என்று யாரைக் கூறலாம்?

பதில்: பரமசிவனை.

கேள்வி: ஞானம் யாரிடமிருந்து கிடைக்கும்?

பதில்: பரமசிவனிடமிருந்து.

கேள்வி: எவ்வாறு நாம் மோட்சத்தைப் பெறலாம்?

பதில்: முகுந்தனிடம் பக்தி செய்வதன் மூலம்.

கேள்வி: முகுந்தன் என்பவன் யார்?

பதில்: உலக மாயை அல்லது அவித்யையில் இருந்து நம்மை விடுவிக்கிறவன்.

கேள்வி: அவித்யை என்பது யாது?

பதில்: ஆத்மாவைப் பற்றிய அறிவு அல்லது நினைப்பு இல்லாமை.

கேள்வி: யாருக்குத் துயரம் வராது?

பதில்: கோபம் கொள்ளாதவனுக்கு.

கேள்வி: சுகம் என்பது எது?

பதில்: மன நிறைவு.

கேள்வி: அரசன் என்பவன் யார்?

பதில்: மக்களை மகிழ்விப்பவன்.

கேள்வி: யாரை நாய்க்கு ஒப்பிடலாம்?

பதில்: நீசர்களை அண்டி, அவர்களுக்குச் சேவகம் செய்பவனை.

கேள்வி: மாயாவி என்பவன் யார்?

பதில்: பரமேஸ்வரன்.

கேள்வி: இந்திரஜாலம் போல் தோற்றம் அளிப்பது எது?

பதில்: இந்தப் பிரபஞ்சம்.

கேள்வி: கனவுத் தோற்றத்துக்கு நிகரானது எது?

பதில்: விழித்திருக்கும்போது நடைபெறும் நிகழ்ச்சிகள்.

கேள்வி: ஸத்யமானது, உண்மையானது எது?

பதில்: பிரும்மம்.

கேள்வி: பொய்யான தோற்றம் எது?

பதில்: உண்மை அறிவால் போக்கக் கூடிய தவறான எண்ணம்.

கேள்வி: பயனற்றது எது?

பதில்: முயலுக்குக் கொம்பு உண்டா என்பது போன்ற வீண் சர்ச்சைகள்.

கேள்வி: விவரித்துச் சொல்ல முடியாதது எது?

பதில்: மாயை (பொய்த் தோற்றம்).

கேள்வி: நாமாக நினைத்துக் கொண்டிருப்பது எது?

பதில்: ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு என்ற எண்ணம்.

கேள்வி: பாரமார்த்திகம் அல்லது முற்றும் உண்மையானது எது?

பதில்: அத்வைதம், ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்ற அறிவு.

கேள்வி: அறியாமை எப்போது உண்டாயிற்று?

பதில்: அது அனாதியாய் உள்ளது; தோன்றிய காலம் தெரியாது.

கேள்வி: உடலைக் காப்பது எது?

பதில்: அவரவர் செய்த நல்வினை, தீவினைகள். நாம் ஜென்ம ஜென்மாந்திரத்தில் செய்த பாவச் செயல்தான் அன்னத்தையும் கொடுத்து
ஆயுளையும் வளர்க்கச் செய்கிறது.

கேள்வி: வழிபாட்டுக்கு உரியவர் யார்?

பதில்: காயத்ரி மந்திரம், சூரியன், அக்னி மூன்றிலும் அடங்கியுள்ள பரமேச்வரனே.

கேள்வி: காயத்ரி, சூரியன், அக்னி ஆகியவற்றில் அடங்கி நிற்பது எது?

பதில்: பெற்ற தாய்.

கேள்வி: நம் பூஜைக்குரியவர் யார்?

பதில்: தந்தை.

கேள்வி: எல்லா தெய்வங்களையும் உள்ளடக்கி இருப்பவன் யார்?

பதில்: கல்வியும் கர்மானுஷ்டானங்களும் நிறைந்தவர்கள்.

கேள்வி: குல நாசத்துக்குக் காரணம் யாது?

பதில்: சாதுக்கள் மனம் வருந்தும்படி செய்யும் செயல்.

கேள்வி: யாருடைய சொற்கள் பொய்க்காதவை?

பதில்: சத்யம், மௌனவிரதம், சாந்தி ஆகியவற்றை விரதமாக மேற்கொண்டவர்களின் சொற்கள்.

கேள்வி: பிறவிக்குக் காரணம் யாது?

பதில்: சிற்றின்பத்தில் ஏற்படும் பற்று.

கேள்வி: நமது மேல் பிறப்பு என்பது எது?

பதில்: பிள்ளையாகப் பிறத்தல்.

கேள்வி: தவிர்க்க முடியாதது எது?

பதில்: மரணம்.

கேள்வி: எப்படிக் காலடி எடுத்து வைக்க வேண்டும்?

பதில்: நன்றாகப் பார்த்து, கவனித்து, சுத்தமான இடமென்று தெரிந்து கொண்டு.

கேள்வி: அன்னதானம் பெறத் தகுந்தவன் யார்?

பதில்: நல்ல பசியோடு இருப்பவன்.

கேள்வி: உலகில் யாரை நாம் பூஜிக்க வேண்டும்?

பதில்: பகவானின் அவதாரங்களை; அவதார வடிவங்களில் உள்ள மூர்த்தங்களை.

கேள்வி: பகவான் யார்?

பதில்: சங்கரனாகவும், நாராயணனாகவும் உள்ள பரம்பொருள்.

கேள்வி: பகவானிடத்தில் செலுத்தும் பக்திக்குப் பயன் என்ன?

பதில்: மாறாத, கலப்பற்ற ஆனந்தம்.

கேள்வி: மோட்சம் என்பது என்ன?

பதில்: அவித்யை நீங்குதல்.

கேள்வி: எல்லா வேதங்களுக்கும் உற்பத்தி இடம் எது?

பதில்: ஓம் என்னும் பிரணவம்.

இந்த ப்ரச்னோத்ர ரத்ன மாலிகாவை யார் மனப்பாடம் செய்து, அதன்படி நடக்கிறார்களோ, அவர்கள் சாதுக்களிடையே சிறந்து விளங்கி, ரத்னங்கள் போல் உலகில் திகழ்வார்கள்.

Wednesday, May 21, 2008

Write up about Comodo in "Times of India"

Publication: Times Of India Bangalore; Date:2008 May 21; Section:Times Business; Page Number 21
A green signal to shop or bank online



Shivani Mody & Debojyoti Ghosh | TNN



Bangalore: In the brick and mortar world, shoppers can easily look for clues regarding the trustworthiness of a store or restaurant. But in the online world, it is much harder to know for sure whether a site is trustworthy.
A trust mark posted on the site will help users ensure safety of their personal information and credit card details while carrying out transactions online. Nowadays rather than focusing on consumer awareness, organizations are looking to take up the onus to ensure safety for consumers, by adopting easy visual validation solutions on sites.
One such technique is when a user accesses a website, the address bar in the browser will turn green, signalling that customers have reached a legitimate site. And if the website is a phishing site, the bar will become red in colour. The browsers will also display other visual cues, such as a lock icon next to the address and a new field validating the site, by giving the name of the organization owing the site as well as the certifying authority.
Across the US and Europe, financial institutions such as the Bank of America, HSBC, Charles Schwab and Bank of Ceylon are already using these trusted certificates. Such solutions will be made available in India within a month for an average cost of Rs 1 lakh.
“We are talking to large banks and Central and state governments on the adoption of this concept, an extended validation (EV) SSL (secure sockets layer, a commonly used protocol for managing the security of something in transmission on the internet) certificates. In some cases we are already in the process of applying to tenders issued by some nationalised banks for enhanced online security solutions,’’ says Shekhar Kirani, vice-president, VeriSign India.
Another company, Comodo, one of the major certification authority for ensuring identity assurance on the website, also provides a green bar EV SSL certificate. Customers in India can buy these solutions online, paying $359 for a one-year certificate.
Some of Comodos’ certificates come free with an EV TrustLogo, which is a triangular red logo placed in the right-hand corner at the bottom of the site. This further enhances the customer confidence in conducting transactions on that site, providing real-time identity assurance.
Any additional security layer will help increase the number of online shoppers. A market researcher that surveyed 70% of online shoppers found that at least once they had abandoned a site due to security concerns.
Also 90% of these potential shoppers said they would have completed transactions if they had seen an easily recognisable trust mark. Yes literally a green signal.

Monday, March 31, 2008

Thought for the Month

The Magic of Solitude
By: Brian Tracy

The greatest men and women of all ages have practiced solitude regularly. They learned how to use silence to still their minds and tap into their superconscious powers for answers to their questions.

In this newsletter, you learn how you can apply this wonderful technique immediately to improve the quality of your inner and outer life.

The Magic of Solitude
Your feelings, your emotions, are the access point to your inner powers of mind. The most important part in the process of getting in touch with your feelings is to begin to practice solitude on a regular basis. Solitude is the most powerful activity in which you can engage. Men and women who practice it correctly and on a regular basis never fail to be amazed at the difference it makes in their lives.

Most people have never practiced solitude. Most people have never sat down quietly by themselves for any period of time in their entire lives. Most people are so busy being busy, doing something-even watching television-that it's highly unusual for them to simply sit, deliberately, and do nothing. But as Catherine Ponder points out, "Men and women begin to become great when they begin to take time quietly by themselves, when they begin to practice solitude." And here's the method you can use.

To get the full benefit of your periods of solitude, you must sit quietly for at least 30 to 60 minutes at a time. If you haven't done it before, it will take the first 25 minutes or so for you to stop fidgeting and moving around. You'll almost have to hold yourself physically in your seat. You'll have an almost irresistible desire to get up and do something. But you must persist.

Solitude requires that you sit quietly, perfectly still, back and head erect, eyes open, without cigarettes, candy, writing materials, music or any interruptions whatsoever for at least 30 minutes. An hour is better.

Become completely relaxed, and breathe deeply. Just let your mind flow. Don't deliberately try to think about anything. The harder you "don't try," the more powerfully it works. After 20 or 25 minutes, you'll begin to feel deeply relaxed. You'll begin to experience a flow of energy coming into your mind and body.

You'll have a tremendous sense of well-being. At this point, you'll be ready to get the full benefit of these moments of contemplation.

 


The River of Ideas
The incredible thing about solitude is that if it is done correctly, it works just about 100 percent of the time. While you're sitting there, a stream, a river, of ideas will flow through your mind. You'll think about countless subjects in an uncontrolled stream of consciousness. Your job is just to relax and listen to your inner voice.

At a certain stage during your period of solitude, the answers to the most pressing difficulties facing you will emerge quietly and clearly, like a boat putting gently to the side of a lake. The answer that you seek will come to you so clearly and it will feel so perfect that you'll experience a deep sense of gratitude and contentment.

Trusting Yourself
When you emerge from this period of quiet, you must do exactly what has come to you. It may involve dealing with a human situation. It may involve starting something or quitting something. Whatever it is, when you follow the guidance that you received in solitude, it will turn out to be exactly the right thing to do. Everything will be OK. And it will usually work out far better than you could have imagined. Just try it and see.

You must learn to trust yourself. You must develop the habit of listening to yourself and then acting on the guidance you receive.

Action Exercises
Here are three steps you can take immediately to put these ideas into action.

First, select a specific time and place to sit quietly and practice one full hour of solitude. Don't put it off.

Second, take small periods of silence and solitude during the day, especially when you feel overwhelmed with problems or responsibilities.

Third, take action immediately on the ideas and insights you receive while in solitude. One good idea can save you months and years of hard work. The key is trust.

Thursday, March 27, 2008

An appeal for Temple Renovation

An Appeal


It has been ordained by Lord Sri Ram to have a Sannidhi constructed for Him within the premises of Sri Varadaraja Swami temple at Miralur, Chidambaram Taluk, Cuddalore District.

Miralur is a small village on the banks of Vellar River, a branch of Kollidam River. It is 10 km from Chidambaram, a famous temple town of Sri Nataraja and Sri Govindaraja Swami, en route to Vriddhachalam. It is 6 km from Bhuvanagiri and is in between Bhuvanagiri and Cross Road, near Sethiathoppu. Sri Raghavendraswami was born at Bhuvanagiri and a temple is constructed there for him. Miralur is nearer to Valayamadevi and Srimushnam. Agriculture is the main occupation of the village people.

Miralur village is blessed with 4 temples, Sri Varadaraja Swami Temple, Sri Agastheeswara Swami temple, Sri Mariamman Koil and Sri Theniamman Koil on the outskirt of the village. Sri Varadaraja Swami temple is said to be more than 500 years old.

The presiding deity is Sri Varadharaja Swami and His consorts Sri Sri Devi and Sri Bhudevi. A separate sannidhi for Thayar Mahalakshmi and Sri Garudan are also there. Sri Srinivasa Perumal with His Proyoga Chakra removes the difficulties of the devotees and blesses them with Happiness, Peace and Prosperity. One must have darshan at the temple to enjoy the bliss and the beauty of the Deities, which is not possible to be described through words.

People in and around the village worshi Mariamman Koil in the months of Adi and Thai with prayers to protect them and their wards from epidemic ailments.

The temple is managed by a family of hereditary trustee. Samprokshanam for the temple was conducted last in September 1997 after a gap of 60 years, mainly due to the efforts of the present trustee, Shri K.Venkatesam Pillai who took over after the demise of his father, Sri S. Kuppuswami Pillai. Sri Venkatesam Pillai, who hails from this village, is a retired official from Annamalai University.

A request has been made with Sri Subbiah Sthapathi, Asthana Sthapathi of Sri Sankara Mutt, Kanchipuram to have the idols prepared according to Agama Shastras and he has assured to provide the Vigrahas before 20th May 2008.

It is proposed to have the Samprokshnam during the last week of May 2008 or first week of June 2008. The exact date of Samprokshanam would be communicated after finalising with the Vedic Scholars.

Devotees are requested to participate in the Samprokshnam and receive the Blessings of Sri Ram.

Ambition (Long Range Plan):

i. Collect donations from the willing donors for Samprokshanam and utilise the amount judiciously
ii. Invest the surplus funds after the Samprokshnam in some mutual funds/fixed deposits
iii. Ensure daily pooja and celebration of yearly festivals without any omission including Sranavanam, Janma Natchathiram of Sri Ramar Punarvasu etc. At present Thirumanjanam is performed every Sravanam every month.
iv.Encourage the children/students to learn rabhandam/Thevaram/Thiruvasagam etc.
v. Educate the people about the health awareness especially the ill effects of drinking habits and arrange for the treatment of alcholic addicts.
vi. Involve all the people in the village to work together for common cause and take care of the destitute.


Contact Address:
V.Raghavan
V.Sethumathavan
V.Seshadri
V.Vasudevan
Plot 82 Third Street
Ashtalakshmi Nagar
Valasaravakkam,
Chennai 600087
Tel: 044 24765367
9445102706
email – nalini.seshadri@gmail.com

Thursday, March 13, 2008

Be An Optimist at All TimesBy: Brian TracyEveryone wants to be physically healthy. You want to be mentally healthy as well. The true measure of "mental fitness" is how optimistic you are about yourself and your life.In this newsletter, you learn how to control your thinking in very specific ways so that you feel terrific about yourself and your situation, no matter what happens.Control Your Reactions and ResponsesThere are three basic differences in the reactions of optimists and pessimists. The first difference is that the optimist sees a setback as temporary, while the pessimist sees it as permanent. The optimist sees an unfortunate event, such as an order that falls through or a sales call that fails, as a temporary event, something that is limited in time and that has no real impact on the future. The pessimist, on the other hand, sees negative events as permanent, as part of life and destiny.Isolate the IncidentThe second difference between the optimist and the pessimist is that the optimist sees difficulties as specific, while the pessimist sees them as pervasive. This means that when things go wrong for the optimist, he looks at the event as an isolated incident largely disconnected from other things that are going on in his life.
See Setbacks as Temporary EventsFor example, if something you were counting on failed to materialize and you interpreted it to yourself as being an unfortunate event, but something that happens in the course of life and business, you would be reacting like an optimist. The pessimist, on the other hand, sees disappointments as being pervasive. That is, to him they are indications of a problem or shortcoming that pervades every area of life.Don't Take Failure PersonallyThe third difference between optimists and pessimists is that optimists see events as external, while pessimists interpret events as personal. When things go wrong, the optimist will tend to see the setback as resulting from external factors over which one has little control.If the optimist is cut off in traffic, for example, instead of getting angry or upset, he will simply downgrade the importance of the event by saying something like, "Oh, well, I guess that person is just having a bad day."The pessimist on the other hand, has a tendency to take everything personally. If the pessimist is cut off in traffic, he will react as though the other driver has deliberately acted to upset and frustrate him.Remain Calm and ObjectiveThe hallmark of the fully mature, fully functioning, self-actualizing personality is the ability to be objective and unemotional when caught up in the inevitable storms of daily life. The superior person has the ability to continue talking to himself in a positive and optimistic way, keeping his mind calm, clear and completely under control. The mature personality is more relaxed and aware and capable of interpreting events more realistically and less emotionally than is the immature personality. As a result, the mature person exerts a far greater sense of control and influence over his environment, and is far less likely to be angry, upset, or distracted.Take the Long ViewLook upon the inevitable setbacks that you face as being temporary, specific and external. View the negative situation as a single event that is not connected to other potential events and that is caused largely by external factors over which you can have little control. Simply refuse to see the event as being in any way permanent, pervasive or indicative of personal incompetence of inability.Resolve to think like an optimist, no matter what happens. You may not be able to control events but you can control the way you react to them.Action ExercisesNow, here are three actions you can take immediately to put these ideas into action.First, remind yourself continually that setbacks are only temporary, they will soon be past and nothing is as serious as you think it is.Second, look upon each problem as a specific event, not connected to other events and not indicative of a pattern of any kind. Deal with it and get on with your life.Third, recognize that when things go wrong, they are usually caused by a variety of external events. Say to yourself, "What can't be cured must be endured," and then get back to thinking about your goals.
Develop amazing self-confidence and be unstoppable in everything you do!Think of all the things you could do if you enjoyed super levels of self-confidence... your career would be booming, offers would be flying your way, everyone would want to be with you. You would have more opportunities to find that "special someone."

http://www.flickr.com/photos/sowri