Saturday, October 21, 2017

Reading

Reading is perhaps one of the most enjoyable leisure activities. What makes reading so unique is that it has the ability to evoke emotions, feelings, thrills and fears, laughter and sadness, pain and pleasure apart from allowing the reader to vividly visualize, leisurely contemplate and at times act decisively. It is breathing for the mind because it keeps our mind active, vibrant and alive to possibilities.

To get the best out of reading and to cultivate the art and enjoy the experience focus on the following:

Variety in reading – If you can bring yourself to read a variety of genres, styles, topics, authors and have different reasons for reading you will never tire of reading. Reading the newspaper is perhaps one of the most common reading activity indulged in by the overwhelming majority. This is because in a dynamically changing world, each one of us wants to know what is going on. The newspaper also offers variety in terms of current affairs, sports, leisure, and politics being major areas covered. However a visit to the library or a book shops opens up a enormous possibilities to explore and there is limitless variety in reading material.

Purposeful reading – If there is focus on why you want to read you will ensure that you read just what you want to read without feeling that you have wasted your time. Students largely have focus on their reading because the objective is appear for exams and score well. This enables them to cope with the reading that they may not necessarily like but which is unavoidable. Similarly, having focus helps you identify what interests you, the styles of writing and genres that engage you. You may even switch genres which are completely different but it ensures that you are never bored or that the content is monotonous. It also allows you the freedom to stop reading what does not appeal to you without feeling guilty.

Enjoy what you read- While reading as part of learning can at times get exhausting, it is your attitude that will determine how tedious the reading is. Obviously given a choice, you will read just what you fancy and hopefully you enjoy what you read. At times, you pick up a book either because it is a best seller or because it is highly recommended but if you are plodding through it, it is best you switch to what interest. The pleasure of reading comes from how easy it feels to ones senses in terms of style, content, appeal and pleasure it brings to the reader.

Share your learning – By sharing the key concepts or the salient features with others, you actually relive the book and the pleasure it gave you. It is also indicative of how it has impacted you and how eager you are to ensure others too get a pleasure out of it.

Cultivate it as habit – The more you read, greater the pleasure and the learning. Cultivate reading as a habit. It refreshes the mind, enhances your knowledge, gives you stimulus and is a wonderful companion especially when you are alone.

Try these

List out 5 of your favorite books and authors. Identify one reason why each book appeals to you.


What types of books appeal to you? What genres of writing do you like?


Which characters in the books you have read endear themselves to you and why?


Which well known book did not appeal to you? Can you identify the reasons you did not like the book?


Name one incident from any of your reading that you still recall vividly or with nostalgia


Thursday, March 18, 2010

Sadhguru's Explanation to Spiritual Scandals

''மக்களை நல்வழிப்படுத்துவதாக வெளியில் காட்டிக்கொண்டு, அந்தரங்க லீலைகளில் ஆன்மிகக் குருமார்கள் ஈடுபடுவது சகஜமாகிவிட்டதே? அவர்களை நம்பி மக்கள் அலை மோதுவதும், அவர்களுடைய அசிங்கமான சுயரூபம் தெரிந்து மனம் குலைந்துபோவதும், ஆன்மிகத்தின் பேரிலேயே சந்தேகம்கொள்ளவைக்கிறதே?''

''ஆன்மிகப் பாதையில் நம்பிக்கை என்பது மிக மிக அவசியமானது. ஏனென்றால், ஆன்மிகப் பயணத்தில் முன்னேற வேண்டுமானால், அது முழுமையான நம்பிக்கை இருந்தால் மட்டுமே இயலும்.

ஆன்மிகத்தைப் பரப்ப நினைப்பவர்களின் வாழ்க்கைமுறை தூய்மையானதாக, சந்தே கத்துக்கு இடமற்றதாக, பூரண அர்ப்பணிப்புகொண்டதாக இருக்க வேண்டும்.

ஒரு காலத்தில், ஆன்மிகத்தில் இருப்பவர்களைப் பார்த்தாலே ஒருவித போற்றுதலும், மரியாதையும் மக்களிடத்தில் தோன்றியது. இன்றைக்கோ, ஆன்மிகப் பணியில் இருப்பவர்களைப்பற்றித் துப்பறிந்து ஆராய வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. ஆன்மிகத்தின் பெயரால் மக்களைச் சென்று அடைபவர்கள் சிலரின் பொறுப்பற்ற செயல்களால்தான் இந்தத் துரதிர்ஷ்டமான சூழல் உருவாகிவிட்டது.


மத போதகர்கள் எதிர்ப்பு இல்லாத குழந்தைகளைத் தங்கள் விருப்பப்படி வக்கிரமான விஷயங்களுக்குப் பயன்படுத்துவது உலகெங்கும் காணப்படுகிறது. மதத் தலைவர்கள் தங்கள் சுயலாபத்துக்காகப் பெண்களையும், ஆண்களையும் உடல்ரீதியாகவோ, பொருள்ரீதியாகவோ பயன்படுத்திக்கொள்வதும் மிக சகஜமாகிவிட்டது.

ஆன்மிகத் தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டு இதுபோன்ற கேவலமான நடவடிக்கைகளில் ஈடுபடுகிற சிலரால், ஆன்மிக வளர்ச்சி என்பதே எட்டாக் கனவாகி விடும் அபாயம் இருக்கிறது.

வேறெங்கும் காண முடியாத அளவில், நம் தேசத்தில்தான் மனிதனின் உளவளர்ச்சி பற்றிய சிந்தனையும் விழிப்பு உணர்வும் மேலோங்கி இருந்தன. ஆன்மிக வளர்ச்சியின் ஆழத்தையும் வீச்சையும் முழுமையாக உலகுக்கு வழங்கவல்ல கலாசாரம் இதுபோல் உலகின் வேறு எந்தப் பகுதியிலும் நீங்கள் காண இயலாது.

யோக பாரம்பரியம் 'ஸ்வேதகேது' என்ற மாணவனைப்பற்றி மிகப் பெருமையுடன் குறிப்பிடுகிறது.

ஸ்வேதகேது தன்னுடைய 12-வது வயதில் ஒரு குருவிடம் அனுப்பப்பட்டான். வேதங்கள், உபநிஷத்துகள், பிரம்ம சூத்திரங்கள் முதலியவற்றை அவன் முழுமையாகக் கற்றுக்கொண்டான். வாழ்வின் அனைத்து அம்சங்களையும் கையாளப்போதுமானவற்றை அவன் கற்றுக்கொண்டதாகச் சொல்லி, குரு வழியனுப்பிவைத்தார்.

ஸ்வேதகேது வீடு திரும்பினான். அவனைப் பார்த்ததும், 'இப்படி முட்டாளாகத் திரும்பி வந்திருக்கிறாயே?' என்று அவனுடைய தந்தை முகம் சுழித்தார். ஸ்வேதகேது அதிர்ந்தான். 'இல்லை, அப்பா. கற்கக்கூடியது அனைத்தையும் கற்றுவிட்டதாக குரு சொன்னாரே.'

'சொல்லித் தரக்கூடியது எல்லாவற்றையும் நீ கற்றறிந்துவிட்டாய். மறுக்கவில்லை. ஆனால், உனக்குள் இருக்கும் ஞானத்தின் மூலத்தை நீ அறியவில்லை என்பது உன் நடையைப் பார்த்தாலே புலப்படுகிறது' என்றார் அவன் தந்தை.

ஸ்வேதகேது கோபம்கொள்ளவில்லை. குருவிடம் திரும்பப் போனான். தந்தை சொன்னதைச் சொன்னான்.

'ஓ, அதை அறிய வேண்டுமா? ஆசிரமத்தில் இருக்கும் இந்த 400 மாடுகளைக் காட்டுக்குள் ஓட்டிப் போ. அவை பெருகி ஆயிரமானதும், திரும்பி வா. அதுவரை வேறு எதைப்பற்றியும் கவலைப்படாதே' என்றார் குரு.

'என்னது... முற்றும் படித்தவனை மாடு மேய்க்கச் சொல்கிறீர்களா?' என்று ஸ்வேதகேது ஆத்திரப்படவில்லை. குருவின் சொல்லைத் தட்டாமல், அங்கிருந்த மாடுகளைக் காட்டுக்குள் ஓட்டிப்போனான்.

மாடுகளைப் பராமரிப்பதைத் தவிர வேறு எதிலும் அவன் சிந்தனை போகாமல் இருக்கச் சில மாதங்கள் ஆயின. பசித்தால் சாப்பிடுவான். மற்ற நேரம் அமைதியாக அமர்ந்து இருப்பான். ஒரு கட்டத்தில், மாடுகள், அவற்றின் பராமரிப்பு இவைபற்றிய சிந்தனைகளும் அற்றுப்போயின. பசுவுடன் இருந்தால் பசுபோல் இருந்தான். மரத்தின் அருகில் இருந்தால், மரத்துடன் ஐக்கியமானவனாக உணர்ந்தான்.

அவன் கற்றறிந்த வேதங்கள், உபநிஷத்துகள், பிரம்ம சூத்திரங்கள் எல்லாவற்றையும் மனம் மறந்தது. மொழி, எண்ணிக்கை எல்லாவற்றையும் கடந்த நிலையில் அவன் வாழ்ந்து வந்தான். பசுக்களுடன் புழங்கிப் புழங்கி அவற்றின் மொழிகூட அவனுக்குப் பழக்கமாகிவிட்டது. அவனுடைய கண்கள்கூட உருமாறி பசுக்களின் கண்களைப்போல் ஆகிவிட்டன.

சில ஆண்டுகள் ஆயின. ஒரு பசு அவன் முன் வந்து நின்றது.

'ஸ்வேதகேது, உன் குருவிடம் நீ திரும்பிப் போகும் நேரம் வந்துவிட்டது' என்றது.

ஸ்வேதகேது அப்போதும் எதுவும்சொல்ல வில்லை. மாடுகளுடன் அவை போனதிசையில் நடந்தான். அவை ஆசிரமத்தில் போய் நின்றன. அங்கு இருந்த சீடர்கள் ஆவலுடன் மாடுகளை எண்ணினர்.

'குருவே, எண்ணிக்கை சரியாக ஆயிரத்தை எட்டிவிட்டது' என்றனர்.

'இல்லை. ஆயிரத்தொன்று' என்று திருத்தினார் குரு. 'ஸ்வேதகேதுவும் இப்போது பசுக்களுடன் ஒன்றி ஒரு பசு போல் ஆகிவிட்டான். அவனுடைய அடையாளங்களைத் தொலைத்துவிட்டு, உயிரின் இருப்பாக முழுமையாக மாறிவிட்டான். இதுதான் ஞானத்தின் உன்னத நிலை' என்று நெகிழ்ந்தார் குரு.

படிப்பு அறிவில் மிகத் தேர்ந்தவனாக இருந்த ஓர் அறிஞன்கூடத் தன் குரு சொன்னதற்காக, மாடுகளை மேய்க்கப் போனான். அது அவனை இன்னமும் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் சென்றது என்பதற்காக சொல்லப்படும் நிகழ்வு இது.

ஆன்மிகத்தின் அடிப்படையே முழுமையான நம்பிக்கையும் அர்ப்பணிப்பும்தான். அப்படிப்பட்ட பாரம்பரியத்தில் வந்தவர்கள் நாம். நல்வாய்ப்பும் ஆழ்ந்த ஞானமும்கொண்ட இந்தத் தேசத்தில் சில பொறுப்பற்ற மனிதர்களின் தவறான நடவடிக்கைகளால் மக்களின் நம்பிக்கை குலைந்து சிதறிவிடுகிறது.

அதே சமயம், ஏதோ ஒன்றிரண்டு பேர் தவறான முன்னுதாரணங்களாகத் திகழ்வதைக் கண்டு, மொத்த ஆன்மிகத்தையும் சந்தேகப்பட வேண்டிய அவசியம்இல்லை. ஆன்மிகத்தின் பெயரால் செயல்படுகிற எந்த மனிதரையும், எந்தக் குழுவையும் தனிப்பட்ட முறையில் சீர்தூக்கிப் பார்த்து, அந்த நபர் மீதும், அந்தக் குழுவின் மீதும் நம்பிக்கைவைக்கலாமா, கூடாதா என்பதை முடிவு செய் வதே சரி.

ஒரு கூடை நிறைய மாம்பழங்கள் இருக்கையில், அதில் ஒன்று அழுகி இருந்தால், கூடையையே உதாசீனம் செய்யத் தேவை இல்லை. அழுகிய பழம் மற்ற பழங்களைப் பாதித்துவிடுவதற்கு முன்பாக, அதை உடனே அகற்றி வீசினால்போதும்.

இந்தப் பூமியில், வெகு மகத்தான அம்சங்களைச் சமூகத்துக்கு வழங்கிய ஆன்மிகத் தலைவர்கள் இருந்தார்கள்; இருக்கிறார்கள். சில தவறான நபர்களால், அவர்களுடைய அற்புதமான பணிகள் விரயமாகிவிடக் கூடாது.

எந்தத் துறையைச் சார்ந்திருந்தாலும், மனிதன் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியம். மருத்துவத் துறையிலும் ஆன்மிகப் பாதையிலும் இருப்பவர்கள் இன்னமும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால், மக்கள் மருத்துவரிடம் தங்கள் உயிரையும், ஆன் மிகத் தலைவர்களிடம் தங்கள் நம்பிக்கையையும் முழுமையாக ஒப்படைக்கிறார்கள்.

மக்களின் நம்பிக்கையையும் பக்தியையும் பூரணமாக அனுபவிக்கும் ஆன்மிகத் தலைவர்கள், வாழ்க்கையில் மிகத் தூய்மையானவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆன்மிகரீதியில் முன்னேற்றம் கொண்டுவர வேண்டுமானால், மக்கள் அவர்கள் மீது வைத்த நம்பிக்கையை எந்தக் காரணம்கொண்டும் தவறாகப் பயன்படுத்த முனையாத நேர்மை தேவை.

ஆன்மிக வளர்ச்சிக்கு மூடத்தனமான பக்தியோ, குருட்டுத்தனமான நம்பிக்கையோ அவசியம் இல்லை. மாறா அன்பும் நீண்ட கால அர்ப்பணிப்பும் மட்டுமே ஆன்மிக வளர்ச்சிக்கு அடிப்படை. இது குறித்து நான் மிகத் தீவிரமான கவனத்துடன் இருக்கிறேன்.

ஆன்மிகம் என்பது அருவருப்பான ஆபாசங்களுக்கு அடித்தளமாகிவிடாமல்; அன்பு, கருணை, ஆனந்தம், பரவசம் இவற்றைப் பரப்ப வேண்டும் என்பதே என் விருப்பம்!''

-சரிசெய்வோம்...

சத்குருவின் 'ஜென்'னல்!

ஜென் குருவிடம் பெண் சீடர் ஒரு புத்தகத்தின் பக்கத்தைத் திறந்துகாட்டினாள். ''பல வருடங்களாகப் படித்தும் நிர்வாணா குறித்த இந்தச் சூத்திரங்கள் எனக்குப் புரியவில்லை. அவற்றுக்கு விளக்கம் அளிப்பீர்களா?''

குரு சொன்னார்: ''எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. சூத்திரத்தைப் படி. உதவ முடிகிறதா என்று பார்க்கிறேன்.''

பெண் சீடர் அதிர்ந்தாள். ''எழுதப் படிக்கத் தெரியாதவரால் அர்த்தத்தை எப்படி விளங்கிக்கொள்ள முடியும்? இதை அறியாமல், நீங்கள் சொல்வதைக் கேட்க ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து கூடுகிறார்களே!'' என்றாள் அவள்.

குரு நிலவைச் சுட்டிக்காட்டினார். ''இந்த விரல் இல்லைஎன்றாலும் அந்த நிலவை நீ பார்க்க முடியும் அல்லவா?''

சத்குருவின் விளக்கம்:

நிர்வாணா என்பதும் முக்தி என்பதும் எல்லாவற்றையும் கடந்துவிட்ட ஒன்றுமற்ற நிலை.

ஏதோ ஒன்று இருக்கிறது என்றால், அதை விளக்கப் படிப்பு தேவைப்படலாம். எது இல்லாததோ, எது படைத்தலைத் தாண்டி இருக்கிற தன்மையோ, அந்த ஒன்றுமற்ற தன்மையைப் புரிந்துகொள்ள, பெரிய படிப்பு எதற்கு? கண்களை மூடி அமைதியாக இருந்தாலே புரிந்துகொள்ளக் கூடியது அது. அதற்கு எழுத்தும் படிப்பும் வேண்டாம். உயிர்பற்றிய உணர்வு போதும்.

சூத்திரம் என்று சில வார்த்தை அமைப்புகளில் சிக்கி விட்டால், வெளியே வர முடியாமல் போகலாம். எழுதியதைப் படித்து மனதில் நூறு அர்த்தங்கள் பண்ணிக்கொள்ளலாம். ஆனால், அதில் எதுவும் சரியாக இருக்கும் என்ற உத்தரவாதம் கிடையாது.

உயிரையும், அதன் மூலத்தையும் புரிந்துகொண்டவருக்கு எழுத்தும், படிப்பும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற உணர்வே வருவது இல்லை. எழுதப் படிக்கத் தெரியாத போதும், அந்த குரு உயிரின் மூலத்துடன் தொடர்பு வைத்திருப்பதால்தான், ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து உட்கார்ந்து அவர் சொல்வதைக் கேட்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் அடிப்படையாக உள்ளது எதுவோ, அதை அவர் புரிந்துகொண்டுவிட்டபின், எழுதப் படிக்கத் தெரிந்தாலும் ஒன்றுதான், தெரியாவிட்டாலும் ஒன்றுதான்!

Monday, October 5, 2009

annapoorani Slokam

காசி ஸ்ரீ அன்னபூரணி ஸ்துதி!

இந்த உலகத்தில் எதையும் செய்து விடலாம். ஆனால், வயலில் இறங்கி வேலை செய்வது...? பெரிய காரியம்தான்! மழையை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும்... போட்ட விதை நன்றாக முளைக்குமா? விவசாயிகளுக்கு மடுமல்ல... நமக்கும்தான் கவலை! மழை இருந்தால்தானே சாப்பாடு!

மழை பொழிவது, தெய்வத்தின் கையில் இருக்கிறது. அந்த தெய்வத்தை நாம் 'அன்னபூரணி' என்கிறோம். அன்னபூரணி விக்கிரகத்தை அரிசி பரப்பிய சிறு தட்டு ஒன்றில் வைத்து, ''தாயே! அம்மா, எங்கள் இல்லத்தில் உணவுக்கு பிரச்னை வராமல் அருள்புரி'' என்கிறோம்.

இதையே, ஆதிசங்கரர், ''கருணையின் வடிவாக இருக்கும் அன்னபூரணியே! பிச்சை இடு'' என்கிறார். இந்த உணவுப் பிச்சையை அவள் மட்டுமே தர முடியும். சிவனாருக்கே படியளந்தவள் ஆயிற்றே அவள்!

தீபாவளி அன்று, காசியில் அன்னபூரணியை லட்டு சப்பரத்தில் தரிசிக்கலாம். அன்று ஸ்பெஷலாக லட்டு பிரசாதம் தரப்படுகிறது.

அன்னபூரணியே கருணை கடாட்சம் அருள்வாய் என்று, இந்த தீபாவளியில், ஆதிசங்கரர் அருளிய அன்னபூரணி துதி சொல்லி, நல்ல மழை பெய்து, உணவுப் பொருள்கள் நன்கு விளைந்து, யாருக்கும் உணவுக்குக் கஷ்டம் வரக்கூடாது என்று, பொதுநலப் பிரார்த்தனையை முன்வைப்போம்.

தைத்ரீய உபநிஷதத்தின் ஆனந்தவல்லி சொல்கிறது... 'அன்னம் பஹுகுர்வீத:' அதாவது, 'அன்னத்தை மிகுதியாக உண்டாக்குங்கள்' என்று! இதுவே நம் தீபாவளி பிரார்த்தனை.

நித்ய ஆனந்தகரீ வர அபய கரீ ஸெளந்தர்ய ரத்னாகரீ
நிர்தூதாகில கோர பாபநிகரீ ப்ரத்யக்ஷ மாஹேச்வரீ |
ப்ராலேயாசல வம்ச பாவனகரீ காசீ புராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ || (1)

(ஆனந்தம் தருபவள்; அபய, வரத கரங்கள் கொண்டவள்; அழகுக் கடல்; நம் பாவத் தொகுப்புகளை நாசம் செய்பவள்; மஹேஸ்வரீ; ஹிமவான் வம்சத்தை தூய்மையாக்குபவள்; காசி நாயகி; பக்தர்களுக்கு கிருபை புரிபவளான அன்னபூரணித் தாயே... எங்களுக்கு பிட்சை இடு)

நானா ரத்ன விசித்ர பூஷணகரீ ஹேமாம்பராடம்பரீ
முக்தா ஹார விலம்பமான விலஸத் வக்ஷே£ஜ கும்பாந்தரீ |
காச்மீரா கருவாஸிதா ருசிகரீ காசீ புராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ || (2)

(விசித்ர ரத்னாபரணம் அணிபவள்; பீதாம்பரத்தாலும், முத்து மாலையாலும் அலங்கரிக்கப் பட்டவள்; காஷ்மீர அகில் தூபம் சூழ, நறுமணம் நிரம்பப் பெற்றவள்; அழகை ஏற்படுத்தும் தாயே... பிட்சை இடு)

யோக ஆனந்தகரீ ரிபு க்ஷயகரீ தர்மைக நிஷ்டாகரீ
சந்த்ர அர்க அனலபா ஸமான லஹரீ த்ரைலோக்ய ரக்ஷ£கரீ |
ஸர்வ ஐச்வர்யகரீ தப: பலகரீ காசீ புராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ || (3)

(யோகானந்தம் தருபவள்; தர்மம் ஒன்றிலேயே சிந்தையை இருக்க வைப்பவள்; சந்திரன், சூரியன், அக்னிக்கு சமமான ஒளி பொருந்தியவள்; மூவுலகையும் காப்பவள்; அனைத்து விதமான செல்வங்களையும் தருபவள்; தவத்துக்கான பலத்தை அளிக்கும் தாயே... பிட்சை இடு! )

கைலாஸ அசல கந்தராலய கரீ கௌரீ ஹ்யுமா சங்கரீ
கௌமாரீ நிகமார்த்த கோசர கரீ ஹ்யோங்கார பீஜ அக்ஷரீ |
மோக்ஷ த்வார கவாடபாடனகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹி க்ருபா வலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ || (4)

(கயிலாச மலை குகையை வீடாகக் கொண்டவள்; பொன் நிறமுள்ளவள்; உமாதேவி; சங்கரன் துணைவி; இளமை பொருந்தியவள்; வேதப் பொருளை அறியச் செய்பவள்; ஓங்காரத்தை பீஜாட்சரமாகக் கொண்டவள்; மோட்ச வாசலை திறக்கும் தாயே... பிட்சை இடு!)

த்ருச்யா த்ருச்ய விபூதி வாஹன கரீ ப்ரம்மாண்ட பாண்டோ தரீ
லீலா நாடக ஸ¨த்ர கேல னகரீ விக்ஞான தீபாங்குரீ |
ஸ்ரீவிச்வேச மன: ப்ரஸாதனகரீ காசீ புராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹி க்ருபா வலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ || (5)

(இக-பர சுகம் பெறக் காரணமாக இருப்பவள்; பிரமாண்டத்தை வயிற்றில் தாங்கியவள்; உலகியல் நாடகத்தை நடத்தும் சூத்ரதாரி; அனுபவ ஞான விளக்கின் சுடராக ஒளிர்பவள்; பரமசிவன் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துபவளான தாயே... பிட்சை இடு!)

ஆதி க்ஷ£ந்த ஸமஸ்த வர்ணன கரீ சம்போஸ்த்ரி பாவா கரீ
காச்மீரா த்ரிபுரேச்வரீ த்ரி நயனீ விச்வேச்வரீ சர்வரீ |
ஸ்வர்க த்வார கவாடபாடனகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹி க்ருபா வலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ || (6)

(எல்லா எழுத்துகளுக்கும் காரணமானவள்; முத்தொழில் களின் தோற்றத்துக்கும் இருப்பிடமானவள்; குங்குமம் தரித்தவள்; திரிபுரம் எரித்த சிவனாரின் நாயகி; முக்கண் முதல்வனின் பத்தினி; லோகேஸ்வரி; சுவர்க்கலோக வாசல் கதவைத் திறக்கும் தாயே... பிட்சை இடு!)

உர்வீ ஸர்வ ஜனேச்வரீ ஜயகரீ மாதா க்ருபாஸாகரீ
வேணி நீல ஸமான குந்தலதரீ நித்ய அன்ன தானேச்வரீ |
ஸாக்ஷ£ன் மோக்ஷ கரீ ஸதா சுபகரீ காசீ புராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹி க்ருபா வலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ || (7)

(பூமி ரூபமாக இருப்பவள்; சர்வ ஜன ஈஸ்வரி; வெற்றி தருபவள்; கருணைக் கடல்; அழகிய பின்னலுடன் கருத்த கேசம் கொண்டவள்; அன்னதான நாயகி; மோட்சமும் மங்கலமும் அருளும் தாயே... பிட்சை இடு!)

தேவீ ஸர்வ விசித்ர ரத்ன ரசிதாதாக்ஷ£யணி ஸூந்தரீ
வாமா ஸ்வாது பயோதரா ப்ரியகரீ ஸெளபாக்ய மாஹேச்வரீ |
பக்தாபீஷ்டகரீ ஸதா ஸூபகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹி க்ருபா வலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ || (8)

(விசித்ர ரத்னங்களால் பிரகாசிப்பவள்; தாட்சாயணி; அழகானவள்; ஈசனுக்கு பிரியமானதையே செய்பவள்; சௌபாக்கியத்துடன் கூடிய மகேசனின் பத்தினி; சுபமானதையே செய்யும் தாயே... பிட்சை இடு!)

சந்த்ர அர்க அனல கோடி கோடி ஸத்ருசீ சந்த்ராம்சு பிம்பாதரீ
சந்த்ர அர்க அக்னி சமான குண்டலதரீ சந்த்ர அர்க வர்ணேச்வரீ |
மாலா புஸ்தக பாச அங்குசதரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹி க்ருபா வலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ || (9)

(கோடி சந்திர, சூரிய, அக்னிக்கு ஒப்பானவள்; சந்திர கலை போன்ற அழகிய கோவைப் பழ வதனம் கொண்டவள்; சந்திரன், சூரியன், அக்னிக்கு ஒப்பான பிரகாசமுள்ள குண்டலம் அணிந்து, மாலை, புஸ்தகம், பாசம், அங்குசம் ஆகியவை தரித்த தாயே... பிட்சை இடு)

க்ஷத்ர த்ராணகரீ மஹா பயகரீ மாதா க்ருபா ஸாகரீ
ஸர்வ ஆனந்தகரீ ஸதா சிவகரீவிச்வேச்வரீ ஸ்ரீதரீ |
தக்ஷ£ க்ரந்தகரீ நிரா மயகரீ காசீ புராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹி க்ருபா வலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (10)

(சத்திரியர் போல் காப்பவள்; பயத்தைப் போக்குபவள்; எல்லோருக்கும் மகிழ்ச்சியையே தருபவள்; எப்போதும் மங்கலமே தருபவள்; உலகநாதனின் பத்தினி; நோய் களைப் போக்குபவளான தாயே... பிட்சை இடு)

அன்ன பூர்ணே ஸதா பூர்ணே சங்கர ப்ராண வல்லபே |
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷ£ம் தேஹீ ச பார்வதி ||

(அன்னம் நிறைந்தவளே! பூரணமாக இருப்பவளே! சங்கரனின் பிராண நாயகியே! மாதா பார்வதியே! ஞான வைராக்கியம் ஏற்பட பிட்சை இடு!)

மாதா ச பார்வதீ தேவீ பிதா தேவோ மஹேச்வர: |
பாந்தவா: சிவபக்தாச் ச ஸ்வ தேசோ புவன த்ரயம் ||

(எனக்குத் தாய்- பார்வதி! தந்தை- மகேஸ்வரன்! சொந்தங்கள்- சிவபக்தர்கள்! என் தேசம்- மூவுலகமே!)

Thursday, August 13, 2009

Rajini 60

அபூர்வம் என்றால் ரஜினி. மயக்கத்தில் மந்திரன், இயக்கத்தில் எந்திரன், சுண்டும் ஸ்டைலில் சூப்பர் மேன். 60 வயது அபூர்வ ராகத்தின் ஆச்சர்ய கீதங்கள் இதோ..!

'எவன் ஒருவனும் உன்னை விரும்பிவிட்டால், அதை அடைவதில் இருந்து அவனை உலகின் எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியாது' விவேகானந்தரின் இந்தப் பொன்மொழிதான் ரஜினி வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கிறது!

உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானுக்கு அடுத்ததாக இப்போதும் ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்குவது நம்ம சூப்பர் ஸ்டார்தான்!

தமிழ்ப் படங்கள் ரஷ்ய மொழியில் டப் ஆகின்றன. முதல் படம் 'சந்திரமுகி'!

ரஜினி முன்பு தன் கையில் அணிந்திருந்த காப்பு, இப்போது நெல்லையைச் சேர்ந்த ரஜினி ரசிகர் திருமாறன் என்பவரிடம் இருக்கிறது!

25 தடவைகளுக்கு மேல் ரத்த தானம் செய்துள்ள ரசிகர்களுக்குத் தன் கையெழுத்துப் போட்ட சர்ட்டிஃபிகேட் தருவது ரஜினியின் வழக்கம்!

'தளபதி' காலத்தில் வலது கணுக்காலில் கறுப்புக் கயிறு கட்டியிருப்பார் ரஜினி. பிறகு, இடது கை கட்டை விரலில் தங்க வளையம். இப்போது, ருத்ராட்ச மோதிரம், ரஜினி ஸ்பெஷல்!

'செக்ஸ் என்பது பரமசுகம், ஆனந்தம். வெறுத்து ஒதுக்குற அளவுக்கு இது விஷம் இல்லை. சோஷியல் சர்வீஸ் பண்றவங்களுக்கு இது இடைஞ்சல், அவ்வளவுதான். பெண் இல்லாமல் தூங்கவே முடியாதுன்னு ஒரு நிலைமை இருந்தது. இப்போ அது குறைஞ்சிருக்கு. எதிர்காலத்தில் எப்படி மாறுமோ?'

-1981ம் வருடம் 'சாவி'க்கு ரஜினி கொடுத்த பேட்டியின் சில வரிகள் இவை.

இப்போதும் பேருந்தில் ஏற நேர்ந்தால், நின்றுகொண்டே போவதுதான் ரஜினியின் வழக்கம். அதுவும் கம்பியைப் பிடிக்காமல்தான் நிற்பார். கேட்டால், 'கண்டக்டர் காலப் பழக்கம்' என்பது பதிலாக வரும்!

மத்திய அரசு இந்திய சினிமாவைப் பற்றி ஓர் ஆவணப் படம் தயாரிக்கிறது. தமிழில் ரஜினி, கமல் இருவரையும் தேர்ந்தெடுத்து அவரவர் பற்றிக் கருத்துக் கேட்டது. கமல் சொல்லிவிட்டார். ரஜினி மறுத்துவிட்டார். 'என்னைப்பற்றி நான் சொல்ல முடியாது. என் ரசிகர்களிடம்தான் கேட்க வேண்டும்' என்று சொன்னதால், ரஜினி ரசிகர்கள் சிலர் அந்த ஆவணப் படத்தில் பேசியிருக்கிறார்கள்!

ரஜினி ஃப்ரீயாக இருந்தால், அடையாளத்தை மறைக்கும் அளவுக்குச் சின்னதாக கெட்டப் சேஞ்சுடன் வெளியே கிளம்பிவிடுவார். சமீபத்தில் அப்படிப் போய் வந்த இடம்... திருப்பதி!

மாப்பிள்ளையான பிறகு, தனுஷின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் வெள்ளித் தட்டு, வெள்ளி டம்ளர் பரிசளிப்பது ரஜினியின் வழக்கம்!

திரையுலக வெளிச்சமோ, புகழ் வெளிச்சமோ படாத ரஜினியின் மிக நெருங்கிய நண்பரின் பெயர் காந்தி. அக்கவுன்ட்ஸ் ஜெனரல் ஆபீஸில் வேலை பார்க்கும் காந்திக்குக் கிட்டத்தட்ட தினமும் ஒரு தடவை ரஜினியே போன் செய்து பேசுவார்!

தனுஷ், தன் மாமனார் ரஜினியை இப்போதும் 'சார்' என்றுதான் அழைக்கிறார். ரஜினியும் தனுஷை 'தனுஷ்' என்றே அழைக்கிறார்!

'முள்ளும் மலரும்' பார்த்துவிட்டு இயக்குநர் பாலசந்தர் எழுதிய கடிதத்தை இப்போதும் பொக்கிஷமாகப் பாதுகாக்கிறார் ரஜினி!

'எந்திரன்' படத்தில் ஒரே பாடலில் 100 விதமான ஸ்டைல்களில் தோன்றுகிறார் ரஜினி. ஒவ்வொரு தோற்றத்துக்கும் ஒவ்வொரு உடை என இந்த ஒரு பாடலில் மட்டும் மொத்தம் 100 விதமான உடைகளில் வருகிறார். ரஜினியின் விருப்பத்தின் பேரில் இந்த ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் அமைத்து இருப்பவர் பிரபுதேவா!

ஆன்மிகம் தவிர, உலகத் தலைவர் களின் வரலாறு தொடர்பான புத்தகங் களில் ரஜினிக்கு எக்கச்சக்க ஆர்வம்!

கறுப்பு நிற உடைகளை விரும்பி அணிந்த ரஜினி பிறகு வெள்ளைக்கு மாறினார். இப்போது ஓய்வு நேரங்களில் காவி, கறுப்பு, நீலம் என கலர் வேட்டிகள் அணிகிறார்!

ரஜினி நடித்த ஒரே ஆங்கிலப் படமான Blood stone-ல் ரஜினி பேசும் முதல் டயலாக், 'Your Problem is bloodstone whereas my problem is stomach'

ரஜினியின் ஆன்மிகம் பற்றிய விமர்சனங்கள் வந்தபோது அவர் சொன்னது, 'நான் ஆன்மிகவாதிதான். ஆனால், ஒரு கன்னத்தில் அறைந்தால், இன்னொரு கன்னத்தைக் காட்டும் அளவுக்கு ஆன்மிகத்தில் இன்னும் உயரவில்லை. அந்த மாதிரியான ஆன்மிகவாதியாக ஆவதற்கு எனக்கு விருப்பமும் இல்லை!'

கிருஷ்ணகிரி அருகே உள்ள நாச்சியார்குப்பம்தான் ரஜினியின் பெற்றோரின் பூர்வீக ஊர். அங்கு இப்போது ரஜினியின் பெற்றோர் நினைவாக மண்டபம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை நாச்சியார் குப்பத்துக்கு அடிக்கடி சென்று பார்வையிடுபவர் ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண ராவ் கெய்க்வாட்!

ரஜினிக்கு மட்டன் பிடிக்கும். குறிப்பாக தலைக்கறி!

'பைரவி' படத்தின்போது ரஜினிக்கு முதன்முதலில் 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தைக் கொடுத்து விளம்பரப்படுத்தியவர் கலைப்புலி தாணு!

ரஜினிக்குப் பழக்கமான வாடகை கார் டிரைவர் இருக்கிறார். இரவு நேரங்களில் திடீரென அவருக்கு போன் செய்து வரச் சொல்லி, எங்காவது கையேந்தி பவனில் சாப்பாடு வாங்கி காருக்குள்ளேயே உட்கார்ந்து சாப்பிடுவார்!

ஒரு படத்தின் சூட்டிங் முடியும்போது அந்தப் படத்தில் பணிபுரிந்த உதவி இயக்குநர்களுக்கு ஒரு தொகையைப் பரிசாகத் தருவது ரஜினியின் பழக்கம். குறைந்தது 50 ஆயிரம் ரூபாய்!

ரஜினிக்குத் தெரிந்த மொழிகள் தமிழ், ஆங்கிலம், கன்னடம், மராத்தி, மலையாளம், ஹிந்தி, தெலுங்கு!

ரஜினியின் 'பில்லா' ரீ-மேக்கைத் தொடர்ந்து 'அன்புக்கு நான் அடிமை ரீ-மேக் ஆகிறது. விரைவில் அறிவிப்பு வரும்!

மார்ல்பரோ சிகரெட்டை விரும்பிப் புகைக்கும் ரஜினி, இப்போது வில்சுக்கு மாறிவிட்டார். முன்பெல்லாம் செயின் ஸ்மோக்கராக இருந்தவர் இப்போது டென்ஷன் பொழுதுகளைத் தவிர மற்ற நேரங்களில் புகைப்பது இல்லை!

ரஜினியை வைத்து அதிகப் படங்கள் இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். ரஜினி நடித்து முத்துராமன் இயக்கிய 25 படங்களில் 7 படங்கள் ஏவி.எம். தயாரிப்பு!

பொங்கல், தீபாவளி என அனைத்து விசேஷங்களிலும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தன்னுடன் இருக்க வேண்டும் என்பது ரஜினியின் சென்டிமென்ட். அவர் வரத் தாமதமானால், 'இன்னும் வரலையா?' என்று போன் செய்துவிடுவார்!

இமயமலை மட்டும் இல்லாமல், எந்த ஆன்மிக ஸ்பாட்டுக்குச் சென்றாலும் அங்கிருந்து ருத்ராட்சம் வாங்கி வந்து சேர்த்துவைப்பது ரஜினியின் பழக்கம். இப்படிச் சேர்த்த ருத்ராட்சங்கள் வீட்டில் எக்கச்சக்கமாகக் குவிந்துகிடக்கின்றன!

ரஜினி வீட்டில் இருக்கும் நேரங்களில் அவரது அறையில் 'ஓம்' என்னும் பிரணவ மந்திரம் ஒலித்துக்கொண்டே இருக்கும்!

ராகவேந்திரா கல்யாண மண்டபத்தின் தொலைபேசிக்கு இன்னொரு இணைப்பு உண்டு. ரஜினி மண்டபத்தில் இருக்கும்போது ரசிகர்கள் யாராவது போன் பண்ணினால், அந்த இன்னொரு இணைப்பு வழியாக எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டு இருப்பார். அந்த ரசிகருடன் பேச வேண்டும் என்று விரும்பினால் அவரே லைனில் வருவார்!

ரஜினி ஒரு பாத்ரூம் பாடகர். குஷி மூடில் இருந்தால் அப்போதைய ஹிட் பாடல்களை முணுமுணுக்க ஆரம்பித்துவிடுவார். அப்படி ஒரு பாடல் மனதுக்குப் பிடித்துவிட்டால், சம்பந்தப்பட்ட இசை அமைப்பாளர், பாடகருக்கு சர்ப்ரைஸாகப் போன் போட்டுப் பாராட்டுவது ரஜினி ஸ்டைல்!

50 கோடி ரூபாய் செலவில் ரஜினி, திருவள்ளுவராக நடிக்கும் படத்தைத் தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்றது. என்ன காரணமோ தெரியவில்லை, அது அப்படியே டிராப் ஆகிவிட்டது!

ரஜினியின் போயஸ் தோட்டத்து வீட்டின் பெயர் 'பிருந்தாவன்'. இது ரஜினியே ஆசையாக வைத்த பெயர்!

ரஜினியின் அனைத்துச் சந்திப்புகளையும் சுப்பையா என்பவர்தான் நிர்வகிக்கிறார். ரஜினியின் நம்பிக்கைக்கு உரிய ஊழியர் இவர்தான்!

பழமொழிகள், குட்டிக் கதைகள், பொன்மொழிகள் இவற்றுக்காகவே தனியாகப் பல நூறு புத்தகங்களை வாங்கிவைத்திருக்கிறார். அவற்றை மேடையில் பேசும்போது பயன்படுத்துவார்!

அடிக்கடி நண்பர்களின் வீடுகளுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடிப்பது ரஜினியின் பழக்கம். வாசலில் தலையில் மப்ளர் கட்டிக்கொண்டு நின்றபடி மலர்ந்து சிரிப்பார்!

தன்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ள வருபவர்களுடன் குழந்தைகள் இருந்தால், குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டு போஸ் கொடுப்பதுதான் ரஜினியின் பழக்கம்!

யார் தன்னைப் பார்க்க வந்தாலும், வயது குறைந்தவர்களாக இருந்தால்கூட எழுந்து நின்று வரவேற்பது ரஜினியின் வழக்கம். வந்தவர் அமர்ந்த பின்புதான் இவர் அமர்வார்!

'தலைவா, உங்க பிறந்த நாளன்று உங்களைச் சந்திக்க ஆசைப்படுகிறேன்' என்று ரசிகர் ஒருவர் சொன்னதற்கு, ''பிறந்த நாளன்று 'நான் ஏன் பிறந்தேன்?' என்று சிந்திக்க எனக்கு அவகாசம் தேவை. அன்றைய நாளில் என் ஃபேமிலி மெம்பர்ஸ்கூட என்னைத் தனியாக விட்டுவிடுவார்கள். அன்னிக்கு வேண்டாமே ப்ளீஸ்!'' என்று பிறந்த நாள் பற்றிய வித்தியாசமான கோணம் ஒன்றைக் கொடுத்தார் ரஜினி!

ரஜினி எந்த காரில் வருவார் என்று யாராலும் தீர்மானிக்க முடியாது. அம்பாஸடர், குவாலீஸ் என்றுதான் அதிகபட்சம் செல்வார். எந்தக் காரணம்கொண்டும் விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ, பென்ஸ் போன்ற கார்களைப் பயன்படுத்த மாட்டார்!

ரஜினி சூ போடுவதை விரும்புவது இல்லை. சூட்டிங்கின்போதுகூட அவசியப்பட்டால் மட்டுமே சூ அணிவார். மற்றபடி எப்போதும் செருப்பு அணிவதுதான் தலைவரின் சாய்ஸ்!

விமானப் பயணத்தைவிட ரயில் பயணம்தான் ரஜினிக்குப் பிடித்தமானது. 'படையப்பா' வரையிலும் ரயிலில்தான் போய்க்கொண்டு இருந்தார்!

தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு வெகுகாலம் முன்பே ஒரு பெருந்தொகையை ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டுவிட்டார். அந்த வட்டிப் பணத்தில்தான் அந்தக் குடும்பங்களுக்கான விழாச் செலவுகள் நடைபெறும்!

ராகவேந்திரா மண்டபத்தில் வெயில் காலத்தில் மக்களுக்கு இலவசமாக மோரும், ஐஸ் வாட்டரும் வழங்குவார்கள். இதைத் தன் அறையில் அமர்ந்து பார்த்துக்கொண்டு இருப்பார் ரஜினி!

எந்தக் காரணத்தைக் கொண்டும் கேரவனில் ஓய்வெடுக்க மாட்டார். காலையில் வந்தவர், மாலை சூட்டிங் முடியும் வரைக்கும் செட்டுக்கு உள்ளேதான் இருப்பார். மதிய இடைவேளையில் அங்கேயே துண்டை விரித்துப்போட்டு சற்றுக் கண்ணயர்வார்!

டான் - பில்லா, தீவார் - தீ, மர்த் - மாவீரன், திரிசூல் - மிஸ்டர் பாரத், குத்தார் - படிக்காதவன் உள்ளிட்ட அமிதாப் பச்சனின் 10 தமிழ் ரீ-மேக் படங்களில் ரஜினி நடித்திருக்கிறார்!

பாலசந்தர் மீது ரஜினி வைத்திருக்கும் மரியாதை அளவிட முடியாதது. பாலசந்தர் போன் பண்ணினால்கூட எழுந்து நின்றுதான் பேசுவார் ரஜினி!

பெங்களூர் ஃப்ளாட்டில் ரஜினி தனியாகவே இருப்பார். புத்தகங்கள், டி.வி.டி-க்கள் என ரஜினியின் தனிமை தவம் பெரும்பாலும் இங்கேதான்!

ரஜினியின் போயஸ் வீட்டுக்கு அருகே ஒரு காலி மனை கிடந்தது. ஐஸ்வர்யா திருமண வரவேற்பு அங்குதான் நடந்தது. இப்போது அந்த இடத்தில் ஒரு கெஸ்ட் ஹவுஸ் கட்டப்பட்டு இருக்கிறது. விருந்தினர்களை அங்குதான் சந்திக்கிறார்!

யாரிடம் பேசினாலும் யாரையும் குறை சொல்லிப் பேசவே மாட்டார். சமீப காலங்களில் இதை மேலும் தீவிரமாகக் கடைப்பிடிக்கிறார்!

கேளம்பாக்க வீட்டுக்கு ரஜினியைப் பார்க்க யார் சென்றாலும், அவர் அங்கு இருந்தாலும், இல்லை என்றாலும் முதலில் இளநீர் வந்துவிடும்!

'ஃபைன், குட்' இவைதான் ரஜினியின் உதடுகள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தைகள்!

முன்பு எல்லாம் நெருங்கிய நபர்கள் இறந்துபோனால் அவர்களின் துக்கத்துக்குப் போக மாட்டார். நடிகர் ஜெய்சங்கரின் மரணத்துக்குக்கூடப் போகவில்லை. 'அவர்களின் சிரித்த முகம்தான் எனக்கு நினைவில் இருக்க வேண்டும்' என்பதுதான் காரணம். பிற்பாடு இந்த நிலையை மாற்றிக்கொண்டார்!

ரஜினி இதுவரை நடித்ததிலேயே அவருக்கு மிகவும் பிடித்த படம் 'முள்ளும் மலரும்'!

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பிறந்த நாளுக்குப் பிறகு தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தும் திட்டம் ரஜினிக்கு இருக்கிறது. இதற்கான ஆஃப் த ரெக்கார்ட் அழைப்புகள் சென்றுவிட்டன!

சிகரெட் சர்ச்சைகளுக்காக அன்புமணி ரஜினியிடம் பேசியபோது பேச்சு நீண்டு ஜாலியாக, 'புரவிப்பாளையம் என்ற ஊரில் சாமியார் ஒருவரின் சமாதி இருக்கிறது. அங்கு அவசியம் ஒருமுறை போய் வாருங்கள்' என அன்புமணிக்கு ஆலோசனை சொன்னாராம் ரஜினி!

'ஏன் இவ்வளவு சிம்பிளாக இருக்கிறீர்கள்?' என்று மகள்கள் கேட்டால், 'கண்ணா... உங்க அப்பா சூப்பர் ஸ்டார். நீங்க எப்படி வேணும்னாலும் இருக்கலாம். எங்க அப்பா சாதாரண போலீஸ்காரர். நான் இப்படித்தான் இருப்பேன்' என்பார்!

சினிமா நகைச்சுவையில் ரஜினிக்கு இஷ்டமானவர் வடிவேலு. அவ்வப்போது அவருடன் பேசிச் சிரிப்பார். 'உங்ககிட்ட பேசினா, எனக்குப் புதுசா ரீ-சார்ஜ் பண்ணின மாதிரி இருக்கு வேலு' என்பார்!

Tuesday, June 16, 2009

C A jawan in Siachen is an undergraduate; often barely past his Class X or Class XII. He gets just Rs.400 a month additionally as High Altitude Allowance over his civilian counterpart
C EVERYONE loves to crib. About poor public transport, lack of family time, delayed promotions, low income, a lousy film, a poor display by the national cricket team, government policies, paying taxes or about traffic cops. In fact, we have cribs for all seasons and reasons. Resultantly, we become cynical, distressed and fail to see the miracle that is our life.

It’s time to change how we view ourselves; appreciate and count the blessings in our life
Here’s something to help correct our thinking: Siachen is the world’s second longest glacier, travelling 70km in the Karakoram Range in the Himalayas. It literally means the ‘place of wild roses’. Located at a height of 22,000 ft, temperatures here are minus 60 degrees centigrade. The weather is so hostile here that it takes three hours to thaw one’s feet in boiling water placed over a kerosene stove. Water freezes even as it enters your throat.
As you read this, 3,000 Indian soldiers, most of them young jawans, patrol the Saltoro Ridge on the glacier. Below them, on the other side of the ridge, an equal number of Pakistani soldiers are on duty. Siachen is the world’s highest battlefield. Since 1984, India and Pakistan have been locked in a confrontation on this uninhabitable terrain for reasons completely illogical from a civilian perspective
History testifies that during Partition, Sia- chen came with India, but a questionable case of cartographic aggression several years later, saw Pakistan staking claim over this piece of land. It is a war that nobody wants. To give you an estimate of what it takes to fight this war, know that it costs the Indian government Rs 500 for every chappati it reaches to our troops in Siachen. Besides, in these 25 years, more lives have been lost due to the weather than due to gunfire.

So, why is Siachen relevant to our discussion today? For the following reasons:
1.A jawan in Siachen is an undergraduate; often barely past his Class X or Class XII

2.It is quite possible therefore he may not even know where Siachen is located on the map till he is actually posted there
(Chances are that even you didn’t know till now where exactly is Siachen located; despite your education and your higher IQ!)
3.He responded to a call of duty and to fulfill his pledge as an army man in accepting to go to Siachen.
4.It is believed that most soldiers on a Siachen posting write to their families saying they will be lucky if they came backwith enemy number 1 being the weather.

5.A jawan posted in Siachen gets just Rs 400 a month additionally as High Altitude Allowance over his civilian counterpart; which means, say, this jawan was posted in Chennai and he got Rs 1000 a month, he will get just Rs 1400 a month if posted in Siachen!!!
6.At the end of every vigil/shift, the soldier comes back to a makeshift tent to thaw his feet, and prepare for the next shift…it is a continuous ordeal to stay alert and alive! Imagine, being paid a mere, forgettable Rs 400 additionally a month for doing a seemingly thankless job in such hostile weather conditions?
Why do you think, this young soldier, stakes his life to do this kind of work?

The answers are simple. He does this because it is his duty and it involves national honour. He also does this so that you and I can sleep well tonight, and perhaps crib about so many more inane things.

Dear Reader, life is a gift. Do not waste it cribbing about things that you haven’t got or that are beyond your control
Count your blessings. You are educated. Use your intellect to benefit others than squandering it in criticism and cynicism. And each time you get the urge to crib, think twice.

Think of that unknown jawan in Siachen and remember that someone, somewhere was, is and will continue to be more challenged than you and me

- Indian Express dt. 16thJune 2009