Monday, October 5, 2009

annapoorani Slokam

காசி ஸ்ரீ அன்னபூரணி ஸ்துதி!

இந்த உலகத்தில் எதையும் செய்து விடலாம். ஆனால், வயலில் இறங்கி வேலை செய்வது...? பெரிய காரியம்தான்! மழையை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும்... போட்ட விதை நன்றாக முளைக்குமா? விவசாயிகளுக்கு மடுமல்ல... நமக்கும்தான் கவலை! மழை இருந்தால்தானே சாப்பாடு!

மழை பொழிவது, தெய்வத்தின் கையில் இருக்கிறது. அந்த தெய்வத்தை நாம் 'அன்னபூரணி' என்கிறோம். அன்னபூரணி விக்கிரகத்தை அரிசி பரப்பிய சிறு தட்டு ஒன்றில் வைத்து, ''தாயே! அம்மா, எங்கள் இல்லத்தில் உணவுக்கு பிரச்னை வராமல் அருள்புரி'' என்கிறோம்.

இதையே, ஆதிசங்கரர், ''கருணையின் வடிவாக இருக்கும் அன்னபூரணியே! பிச்சை இடு'' என்கிறார். இந்த உணவுப் பிச்சையை அவள் மட்டுமே தர முடியும். சிவனாருக்கே படியளந்தவள் ஆயிற்றே அவள்!

தீபாவளி அன்று, காசியில் அன்னபூரணியை லட்டு சப்பரத்தில் தரிசிக்கலாம். அன்று ஸ்பெஷலாக லட்டு பிரசாதம் தரப்படுகிறது.

அன்னபூரணியே கருணை கடாட்சம் அருள்வாய் என்று, இந்த தீபாவளியில், ஆதிசங்கரர் அருளிய அன்னபூரணி துதி சொல்லி, நல்ல மழை பெய்து, உணவுப் பொருள்கள் நன்கு விளைந்து, யாருக்கும் உணவுக்குக் கஷ்டம் வரக்கூடாது என்று, பொதுநலப் பிரார்த்தனையை முன்வைப்போம்.

தைத்ரீய உபநிஷதத்தின் ஆனந்தவல்லி சொல்கிறது... 'அன்னம் பஹுகுர்வீத:' அதாவது, 'அன்னத்தை மிகுதியாக உண்டாக்குங்கள்' என்று! இதுவே நம் தீபாவளி பிரார்த்தனை.

நித்ய ஆனந்தகரீ வர அபய கரீ ஸெளந்தர்ய ரத்னாகரீ
நிர்தூதாகில கோர பாபநிகரீ ப்ரத்யக்ஷ மாஹேச்வரீ |
ப்ராலேயாசல வம்ச பாவனகரீ காசீ புராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ || (1)

(ஆனந்தம் தருபவள்; அபய, வரத கரங்கள் கொண்டவள்; அழகுக் கடல்; நம் பாவத் தொகுப்புகளை நாசம் செய்பவள்; மஹேஸ்வரீ; ஹிமவான் வம்சத்தை தூய்மையாக்குபவள்; காசி நாயகி; பக்தர்களுக்கு கிருபை புரிபவளான அன்னபூரணித் தாயே... எங்களுக்கு பிட்சை இடு)

நானா ரத்ன விசித்ர பூஷணகரீ ஹேமாம்பராடம்பரீ
முக்தா ஹார விலம்பமான விலஸத் வக்ஷே£ஜ கும்பாந்தரீ |
காச்மீரா கருவாஸிதா ருசிகரீ காசீ புராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ || (2)

(விசித்ர ரத்னாபரணம் அணிபவள்; பீதாம்பரத்தாலும், முத்து மாலையாலும் அலங்கரிக்கப் பட்டவள்; காஷ்மீர அகில் தூபம் சூழ, நறுமணம் நிரம்பப் பெற்றவள்; அழகை ஏற்படுத்தும் தாயே... பிட்சை இடு)

யோக ஆனந்தகரீ ரிபு க்ஷயகரீ தர்மைக நிஷ்டாகரீ
சந்த்ர அர்க அனலபா ஸமான லஹரீ த்ரைலோக்ய ரக்ஷ£கரீ |
ஸர்வ ஐச்வர்யகரீ தப: பலகரீ காசீ புராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ || (3)

(யோகானந்தம் தருபவள்; தர்மம் ஒன்றிலேயே சிந்தையை இருக்க வைப்பவள்; சந்திரன், சூரியன், அக்னிக்கு சமமான ஒளி பொருந்தியவள்; மூவுலகையும் காப்பவள்; அனைத்து விதமான செல்வங்களையும் தருபவள்; தவத்துக்கான பலத்தை அளிக்கும் தாயே... பிட்சை இடு! )

கைலாஸ அசல கந்தராலய கரீ கௌரீ ஹ்யுமா சங்கரீ
கௌமாரீ நிகமார்த்த கோசர கரீ ஹ்யோங்கார பீஜ அக்ஷரீ |
மோக்ஷ த்வார கவாடபாடனகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹி க்ருபா வலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ || (4)

(கயிலாச மலை குகையை வீடாகக் கொண்டவள்; பொன் நிறமுள்ளவள்; உமாதேவி; சங்கரன் துணைவி; இளமை பொருந்தியவள்; வேதப் பொருளை அறியச் செய்பவள்; ஓங்காரத்தை பீஜாட்சரமாகக் கொண்டவள்; மோட்ச வாசலை திறக்கும் தாயே... பிட்சை இடு!)

த்ருச்யா த்ருச்ய விபூதி வாஹன கரீ ப்ரம்மாண்ட பாண்டோ தரீ
லீலா நாடக ஸ¨த்ர கேல னகரீ விக்ஞான தீபாங்குரீ |
ஸ்ரீவிச்வேச மன: ப்ரஸாதனகரீ காசீ புராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹி க்ருபா வலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ || (5)

(இக-பர சுகம் பெறக் காரணமாக இருப்பவள்; பிரமாண்டத்தை வயிற்றில் தாங்கியவள்; உலகியல் நாடகத்தை நடத்தும் சூத்ரதாரி; அனுபவ ஞான விளக்கின் சுடராக ஒளிர்பவள்; பரமசிவன் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துபவளான தாயே... பிட்சை இடு!)

ஆதி க்ஷ£ந்த ஸமஸ்த வர்ணன கரீ சம்போஸ்த்ரி பாவா கரீ
காச்மீரா த்ரிபுரேச்வரீ த்ரி நயனீ விச்வேச்வரீ சர்வரீ |
ஸ்வர்க த்வார கவாடபாடனகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹி க்ருபா வலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ || (6)

(எல்லா எழுத்துகளுக்கும் காரணமானவள்; முத்தொழில் களின் தோற்றத்துக்கும் இருப்பிடமானவள்; குங்குமம் தரித்தவள்; திரிபுரம் எரித்த சிவனாரின் நாயகி; முக்கண் முதல்வனின் பத்தினி; லோகேஸ்வரி; சுவர்க்கலோக வாசல் கதவைத் திறக்கும் தாயே... பிட்சை இடு!)

உர்வீ ஸர்வ ஜனேச்வரீ ஜயகரீ மாதா க்ருபாஸாகரீ
வேணி நீல ஸமான குந்தலதரீ நித்ய அன்ன தானேச்வரீ |
ஸாக்ஷ£ன் மோக்ஷ கரீ ஸதா சுபகரீ காசீ புராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹி க்ருபா வலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ || (7)

(பூமி ரூபமாக இருப்பவள்; சர்வ ஜன ஈஸ்வரி; வெற்றி தருபவள்; கருணைக் கடல்; அழகிய பின்னலுடன் கருத்த கேசம் கொண்டவள்; அன்னதான நாயகி; மோட்சமும் மங்கலமும் அருளும் தாயே... பிட்சை இடு!)

தேவீ ஸர்வ விசித்ர ரத்ன ரசிதாதாக்ஷ£யணி ஸூந்தரீ
வாமா ஸ்வாது பயோதரா ப்ரியகரீ ஸெளபாக்ய மாஹேச்வரீ |
பக்தாபீஷ்டகரீ ஸதா ஸூபகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹி க்ருபா வலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ || (8)

(விசித்ர ரத்னங்களால் பிரகாசிப்பவள்; தாட்சாயணி; அழகானவள்; ஈசனுக்கு பிரியமானதையே செய்பவள்; சௌபாக்கியத்துடன் கூடிய மகேசனின் பத்தினி; சுபமானதையே செய்யும் தாயே... பிட்சை இடு!)

சந்த்ர அர்க அனல கோடி கோடி ஸத்ருசீ சந்த்ராம்சு பிம்பாதரீ
சந்த்ர அர்க அக்னி சமான குண்டலதரீ சந்த்ர அர்க வர்ணேச்வரீ |
மாலா புஸ்தக பாச அங்குசதரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹி க்ருபா வலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ || (9)

(கோடி சந்திர, சூரிய, அக்னிக்கு ஒப்பானவள்; சந்திர கலை போன்ற அழகிய கோவைப் பழ வதனம் கொண்டவள்; சந்திரன், சூரியன், அக்னிக்கு ஒப்பான பிரகாசமுள்ள குண்டலம் அணிந்து, மாலை, புஸ்தகம், பாசம், அங்குசம் ஆகியவை தரித்த தாயே... பிட்சை இடு)

க்ஷத்ர த்ராணகரீ மஹா பயகரீ மாதா க்ருபா ஸாகரீ
ஸர்வ ஆனந்தகரீ ஸதா சிவகரீவிச்வேச்வரீ ஸ்ரீதரீ |
தக்ஷ£ க்ரந்தகரீ நிரா மயகரீ காசீ புராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹி க்ருபா வலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (10)

(சத்திரியர் போல் காப்பவள்; பயத்தைப் போக்குபவள்; எல்லோருக்கும் மகிழ்ச்சியையே தருபவள்; எப்போதும் மங்கலமே தருபவள்; உலகநாதனின் பத்தினி; நோய் களைப் போக்குபவளான தாயே... பிட்சை இடு)

அன்ன பூர்ணே ஸதா பூர்ணே சங்கர ப்ராண வல்லபே |
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷ£ம் தேஹீ ச பார்வதி ||

(அன்னம் நிறைந்தவளே! பூரணமாக இருப்பவளே! சங்கரனின் பிராண நாயகியே! மாதா பார்வதியே! ஞான வைராக்கியம் ஏற்பட பிட்சை இடு!)

மாதா ச பார்வதீ தேவீ பிதா தேவோ மஹேச்வர: |
பாந்தவா: சிவபக்தாச் ச ஸ்வ தேசோ புவன த்ரயம் ||

(எனக்குத் தாய்- பார்வதி! தந்தை- மகேஸ்வரன்! சொந்தங்கள்- சிவபக்தர்கள்! என் தேசம்- மூவுலகமே!)

Thursday, August 13, 2009

Rajini 60

அபூர்வம் என்றால் ரஜினி. மயக்கத்தில் மந்திரன், இயக்கத்தில் எந்திரன், சுண்டும் ஸ்டைலில் சூப்பர் மேன். 60 வயது அபூர்வ ராகத்தின் ஆச்சர்ய கீதங்கள் இதோ..!

'எவன் ஒருவனும் உன்னை விரும்பிவிட்டால், அதை அடைவதில் இருந்து அவனை உலகின் எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியாது' விவேகானந்தரின் இந்தப் பொன்மொழிதான் ரஜினி வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கிறது!

உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானுக்கு அடுத்ததாக இப்போதும் ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்குவது நம்ம சூப்பர் ஸ்டார்தான்!

தமிழ்ப் படங்கள் ரஷ்ய மொழியில் டப் ஆகின்றன. முதல் படம் 'சந்திரமுகி'!

ரஜினி முன்பு தன் கையில் அணிந்திருந்த காப்பு, இப்போது நெல்லையைச் சேர்ந்த ரஜினி ரசிகர் திருமாறன் என்பவரிடம் இருக்கிறது!

25 தடவைகளுக்கு மேல் ரத்த தானம் செய்துள்ள ரசிகர்களுக்குத் தன் கையெழுத்துப் போட்ட சர்ட்டிஃபிகேட் தருவது ரஜினியின் வழக்கம்!

'தளபதி' காலத்தில் வலது கணுக்காலில் கறுப்புக் கயிறு கட்டியிருப்பார் ரஜினி. பிறகு, இடது கை கட்டை விரலில் தங்க வளையம். இப்போது, ருத்ராட்ச மோதிரம், ரஜினி ஸ்பெஷல்!

'செக்ஸ் என்பது பரமசுகம், ஆனந்தம். வெறுத்து ஒதுக்குற அளவுக்கு இது விஷம் இல்லை. சோஷியல் சர்வீஸ் பண்றவங்களுக்கு இது இடைஞ்சல், அவ்வளவுதான். பெண் இல்லாமல் தூங்கவே முடியாதுன்னு ஒரு நிலைமை இருந்தது. இப்போ அது குறைஞ்சிருக்கு. எதிர்காலத்தில் எப்படி மாறுமோ?'

-1981ம் வருடம் 'சாவி'க்கு ரஜினி கொடுத்த பேட்டியின் சில வரிகள் இவை.

இப்போதும் பேருந்தில் ஏற நேர்ந்தால், நின்றுகொண்டே போவதுதான் ரஜினியின் வழக்கம். அதுவும் கம்பியைப் பிடிக்காமல்தான் நிற்பார். கேட்டால், 'கண்டக்டர் காலப் பழக்கம்' என்பது பதிலாக வரும்!

மத்திய அரசு இந்திய சினிமாவைப் பற்றி ஓர் ஆவணப் படம் தயாரிக்கிறது. தமிழில் ரஜினி, கமல் இருவரையும் தேர்ந்தெடுத்து அவரவர் பற்றிக் கருத்துக் கேட்டது. கமல் சொல்லிவிட்டார். ரஜினி மறுத்துவிட்டார். 'என்னைப்பற்றி நான் சொல்ல முடியாது. என் ரசிகர்களிடம்தான் கேட்க வேண்டும்' என்று சொன்னதால், ரஜினி ரசிகர்கள் சிலர் அந்த ஆவணப் படத்தில் பேசியிருக்கிறார்கள்!

ரஜினி ஃப்ரீயாக இருந்தால், அடையாளத்தை மறைக்கும் அளவுக்குச் சின்னதாக கெட்டப் சேஞ்சுடன் வெளியே கிளம்பிவிடுவார். சமீபத்தில் அப்படிப் போய் வந்த இடம்... திருப்பதி!

மாப்பிள்ளையான பிறகு, தனுஷின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் வெள்ளித் தட்டு, வெள்ளி டம்ளர் பரிசளிப்பது ரஜினியின் வழக்கம்!

திரையுலக வெளிச்சமோ, புகழ் வெளிச்சமோ படாத ரஜினியின் மிக நெருங்கிய நண்பரின் பெயர் காந்தி. அக்கவுன்ட்ஸ் ஜெனரல் ஆபீஸில் வேலை பார்க்கும் காந்திக்குக் கிட்டத்தட்ட தினமும் ஒரு தடவை ரஜினியே போன் செய்து பேசுவார்!

தனுஷ், தன் மாமனார் ரஜினியை இப்போதும் 'சார்' என்றுதான் அழைக்கிறார். ரஜினியும் தனுஷை 'தனுஷ்' என்றே அழைக்கிறார்!

'முள்ளும் மலரும்' பார்த்துவிட்டு இயக்குநர் பாலசந்தர் எழுதிய கடிதத்தை இப்போதும் பொக்கிஷமாகப் பாதுகாக்கிறார் ரஜினி!

'எந்திரன்' படத்தில் ஒரே பாடலில் 100 விதமான ஸ்டைல்களில் தோன்றுகிறார் ரஜினி. ஒவ்வொரு தோற்றத்துக்கும் ஒவ்வொரு உடை என இந்த ஒரு பாடலில் மட்டும் மொத்தம் 100 விதமான உடைகளில் வருகிறார். ரஜினியின் விருப்பத்தின் பேரில் இந்த ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் அமைத்து இருப்பவர் பிரபுதேவா!

ஆன்மிகம் தவிர, உலகத் தலைவர் களின் வரலாறு தொடர்பான புத்தகங் களில் ரஜினிக்கு எக்கச்சக்க ஆர்வம்!

கறுப்பு நிற உடைகளை விரும்பி அணிந்த ரஜினி பிறகு வெள்ளைக்கு மாறினார். இப்போது ஓய்வு நேரங்களில் காவி, கறுப்பு, நீலம் என கலர் வேட்டிகள் அணிகிறார்!

ரஜினி நடித்த ஒரே ஆங்கிலப் படமான Blood stone-ல் ரஜினி பேசும் முதல் டயலாக், 'Your Problem is bloodstone whereas my problem is stomach'

ரஜினியின் ஆன்மிகம் பற்றிய விமர்சனங்கள் வந்தபோது அவர் சொன்னது, 'நான் ஆன்மிகவாதிதான். ஆனால், ஒரு கன்னத்தில் அறைந்தால், இன்னொரு கன்னத்தைக் காட்டும் அளவுக்கு ஆன்மிகத்தில் இன்னும் உயரவில்லை. அந்த மாதிரியான ஆன்மிகவாதியாக ஆவதற்கு எனக்கு விருப்பமும் இல்லை!'

கிருஷ்ணகிரி அருகே உள்ள நாச்சியார்குப்பம்தான் ரஜினியின் பெற்றோரின் பூர்வீக ஊர். அங்கு இப்போது ரஜினியின் பெற்றோர் நினைவாக மண்டபம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை நாச்சியார் குப்பத்துக்கு அடிக்கடி சென்று பார்வையிடுபவர் ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண ராவ் கெய்க்வாட்!

ரஜினிக்கு மட்டன் பிடிக்கும். குறிப்பாக தலைக்கறி!

'பைரவி' படத்தின்போது ரஜினிக்கு முதன்முதலில் 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தைக் கொடுத்து விளம்பரப்படுத்தியவர் கலைப்புலி தாணு!

ரஜினிக்குப் பழக்கமான வாடகை கார் டிரைவர் இருக்கிறார். இரவு நேரங்களில் திடீரென அவருக்கு போன் செய்து வரச் சொல்லி, எங்காவது கையேந்தி பவனில் சாப்பாடு வாங்கி காருக்குள்ளேயே உட்கார்ந்து சாப்பிடுவார்!

ஒரு படத்தின் சூட்டிங் முடியும்போது அந்தப் படத்தில் பணிபுரிந்த உதவி இயக்குநர்களுக்கு ஒரு தொகையைப் பரிசாகத் தருவது ரஜினியின் பழக்கம். குறைந்தது 50 ஆயிரம் ரூபாய்!

ரஜினிக்குத் தெரிந்த மொழிகள் தமிழ், ஆங்கிலம், கன்னடம், மராத்தி, மலையாளம், ஹிந்தி, தெலுங்கு!

ரஜினியின் 'பில்லா' ரீ-மேக்கைத் தொடர்ந்து 'அன்புக்கு நான் அடிமை ரீ-மேக் ஆகிறது. விரைவில் அறிவிப்பு வரும்!

மார்ல்பரோ சிகரெட்டை விரும்பிப் புகைக்கும் ரஜினி, இப்போது வில்சுக்கு மாறிவிட்டார். முன்பெல்லாம் செயின் ஸ்மோக்கராக இருந்தவர் இப்போது டென்ஷன் பொழுதுகளைத் தவிர மற்ற நேரங்களில் புகைப்பது இல்லை!

ரஜினியை வைத்து அதிகப் படங்கள் இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். ரஜினி நடித்து முத்துராமன் இயக்கிய 25 படங்களில் 7 படங்கள் ஏவி.எம். தயாரிப்பு!

பொங்கல், தீபாவளி என அனைத்து விசேஷங்களிலும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தன்னுடன் இருக்க வேண்டும் என்பது ரஜினியின் சென்டிமென்ட். அவர் வரத் தாமதமானால், 'இன்னும் வரலையா?' என்று போன் செய்துவிடுவார்!

இமயமலை மட்டும் இல்லாமல், எந்த ஆன்மிக ஸ்பாட்டுக்குச் சென்றாலும் அங்கிருந்து ருத்ராட்சம் வாங்கி வந்து சேர்த்துவைப்பது ரஜினியின் பழக்கம். இப்படிச் சேர்த்த ருத்ராட்சங்கள் வீட்டில் எக்கச்சக்கமாகக் குவிந்துகிடக்கின்றன!

ரஜினி வீட்டில் இருக்கும் நேரங்களில் அவரது அறையில் 'ஓம்' என்னும் பிரணவ மந்திரம் ஒலித்துக்கொண்டே இருக்கும்!

ராகவேந்திரா கல்யாண மண்டபத்தின் தொலைபேசிக்கு இன்னொரு இணைப்பு உண்டு. ரஜினி மண்டபத்தில் இருக்கும்போது ரசிகர்கள் யாராவது போன் பண்ணினால், அந்த இன்னொரு இணைப்பு வழியாக எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டு இருப்பார். அந்த ரசிகருடன் பேச வேண்டும் என்று விரும்பினால் அவரே லைனில் வருவார்!

ரஜினி ஒரு பாத்ரூம் பாடகர். குஷி மூடில் இருந்தால் அப்போதைய ஹிட் பாடல்களை முணுமுணுக்க ஆரம்பித்துவிடுவார். அப்படி ஒரு பாடல் மனதுக்குப் பிடித்துவிட்டால், சம்பந்தப்பட்ட இசை அமைப்பாளர், பாடகருக்கு சர்ப்ரைஸாகப் போன் போட்டுப் பாராட்டுவது ரஜினி ஸ்டைல்!

50 கோடி ரூபாய் செலவில் ரஜினி, திருவள்ளுவராக நடிக்கும் படத்தைத் தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்றது. என்ன காரணமோ தெரியவில்லை, அது அப்படியே டிராப் ஆகிவிட்டது!

ரஜினியின் போயஸ் தோட்டத்து வீட்டின் பெயர் 'பிருந்தாவன்'. இது ரஜினியே ஆசையாக வைத்த பெயர்!

ரஜினியின் அனைத்துச் சந்திப்புகளையும் சுப்பையா என்பவர்தான் நிர்வகிக்கிறார். ரஜினியின் நம்பிக்கைக்கு உரிய ஊழியர் இவர்தான்!

பழமொழிகள், குட்டிக் கதைகள், பொன்மொழிகள் இவற்றுக்காகவே தனியாகப் பல நூறு புத்தகங்களை வாங்கிவைத்திருக்கிறார். அவற்றை மேடையில் பேசும்போது பயன்படுத்துவார்!

அடிக்கடி நண்பர்களின் வீடுகளுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடிப்பது ரஜினியின் பழக்கம். வாசலில் தலையில் மப்ளர் கட்டிக்கொண்டு நின்றபடி மலர்ந்து சிரிப்பார்!

தன்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ள வருபவர்களுடன் குழந்தைகள் இருந்தால், குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டு போஸ் கொடுப்பதுதான் ரஜினியின் பழக்கம்!

யார் தன்னைப் பார்க்க வந்தாலும், வயது குறைந்தவர்களாக இருந்தால்கூட எழுந்து நின்று வரவேற்பது ரஜினியின் வழக்கம். வந்தவர் அமர்ந்த பின்புதான் இவர் அமர்வார்!

'தலைவா, உங்க பிறந்த நாளன்று உங்களைச் சந்திக்க ஆசைப்படுகிறேன்' என்று ரசிகர் ஒருவர் சொன்னதற்கு, ''பிறந்த நாளன்று 'நான் ஏன் பிறந்தேன்?' என்று சிந்திக்க எனக்கு அவகாசம் தேவை. அன்றைய நாளில் என் ஃபேமிலி மெம்பர்ஸ்கூட என்னைத் தனியாக விட்டுவிடுவார்கள். அன்னிக்கு வேண்டாமே ப்ளீஸ்!'' என்று பிறந்த நாள் பற்றிய வித்தியாசமான கோணம் ஒன்றைக் கொடுத்தார் ரஜினி!

ரஜினி எந்த காரில் வருவார் என்று யாராலும் தீர்மானிக்க முடியாது. அம்பாஸடர், குவாலீஸ் என்றுதான் அதிகபட்சம் செல்வார். எந்தக் காரணம்கொண்டும் விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ, பென்ஸ் போன்ற கார்களைப் பயன்படுத்த மாட்டார்!

ரஜினி சூ போடுவதை விரும்புவது இல்லை. சூட்டிங்கின்போதுகூட அவசியப்பட்டால் மட்டுமே சூ அணிவார். மற்றபடி எப்போதும் செருப்பு அணிவதுதான் தலைவரின் சாய்ஸ்!

விமானப் பயணத்தைவிட ரயில் பயணம்தான் ரஜினிக்குப் பிடித்தமானது. 'படையப்பா' வரையிலும் ரயிலில்தான் போய்க்கொண்டு இருந்தார்!

தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு வெகுகாலம் முன்பே ஒரு பெருந்தொகையை ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டுவிட்டார். அந்த வட்டிப் பணத்தில்தான் அந்தக் குடும்பங்களுக்கான விழாச் செலவுகள் நடைபெறும்!

ராகவேந்திரா மண்டபத்தில் வெயில் காலத்தில் மக்களுக்கு இலவசமாக மோரும், ஐஸ் வாட்டரும் வழங்குவார்கள். இதைத் தன் அறையில் அமர்ந்து பார்த்துக்கொண்டு இருப்பார் ரஜினி!

எந்தக் காரணத்தைக் கொண்டும் கேரவனில் ஓய்வெடுக்க மாட்டார். காலையில் வந்தவர், மாலை சூட்டிங் முடியும் வரைக்கும் செட்டுக்கு உள்ளேதான் இருப்பார். மதிய இடைவேளையில் அங்கேயே துண்டை விரித்துப்போட்டு சற்றுக் கண்ணயர்வார்!

டான் - பில்லா, தீவார் - தீ, மர்த் - மாவீரன், திரிசூல் - மிஸ்டர் பாரத், குத்தார் - படிக்காதவன் உள்ளிட்ட அமிதாப் பச்சனின் 10 தமிழ் ரீ-மேக் படங்களில் ரஜினி நடித்திருக்கிறார்!

பாலசந்தர் மீது ரஜினி வைத்திருக்கும் மரியாதை அளவிட முடியாதது. பாலசந்தர் போன் பண்ணினால்கூட எழுந்து நின்றுதான் பேசுவார் ரஜினி!

பெங்களூர் ஃப்ளாட்டில் ரஜினி தனியாகவே இருப்பார். புத்தகங்கள், டி.வி.டி-க்கள் என ரஜினியின் தனிமை தவம் பெரும்பாலும் இங்கேதான்!

ரஜினியின் போயஸ் வீட்டுக்கு அருகே ஒரு காலி மனை கிடந்தது. ஐஸ்வர்யா திருமண வரவேற்பு அங்குதான் நடந்தது. இப்போது அந்த இடத்தில் ஒரு கெஸ்ட் ஹவுஸ் கட்டப்பட்டு இருக்கிறது. விருந்தினர்களை அங்குதான் சந்திக்கிறார்!

யாரிடம் பேசினாலும் யாரையும் குறை சொல்லிப் பேசவே மாட்டார். சமீப காலங்களில் இதை மேலும் தீவிரமாகக் கடைப்பிடிக்கிறார்!

கேளம்பாக்க வீட்டுக்கு ரஜினியைப் பார்க்க யார் சென்றாலும், அவர் அங்கு இருந்தாலும், இல்லை என்றாலும் முதலில் இளநீர் வந்துவிடும்!

'ஃபைன், குட்' இவைதான் ரஜினியின் உதடுகள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தைகள்!

முன்பு எல்லாம் நெருங்கிய நபர்கள் இறந்துபோனால் அவர்களின் துக்கத்துக்குப் போக மாட்டார். நடிகர் ஜெய்சங்கரின் மரணத்துக்குக்கூடப் போகவில்லை. 'அவர்களின் சிரித்த முகம்தான் எனக்கு நினைவில் இருக்க வேண்டும்' என்பதுதான் காரணம். பிற்பாடு இந்த நிலையை மாற்றிக்கொண்டார்!

ரஜினி இதுவரை நடித்ததிலேயே அவருக்கு மிகவும் பிடித்த படம் 'முள்ளும் மலரும்'!

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பிறந்த நாளுக்குப் பிறகு தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தும் திட்டம் ரஜினிக்கு இருக்கிறது. இதற்கான ஆஃப் த ரெக்கார்ட் அழைப்புகள் சென்றுவிட்டன!

சிகரெட் சர்ச்சைகளுக்காக அன்புமணி ரஜினியிடம் பேசியபோது பேச்சு நீண்டு ஜாலியாக, 'புரவிப்பாளையம் என்ற ஊரில் சாமியார் ஒருவரின் சமாதி இருக்கிறது. அங்கு அவசியம் ஒருமுறை போய் வாருங்கள்' என அன்புமணிக்கு ஆலோசனை சொன்னாராம் ரஜினி!

'ஏன் இவ்வளவு சிம்பிளாக இருக்கிறீர்கள்?' என்று மகள்கள் கேட்டால், 'கண்ணா... உங்க அப்பா சூப்பர் ஸ்டார். நீங்க எப்படி வேணும்னாலும் இருக்கலாம். எங்க அப்பா சாதாரண போலீஸ்காரர். நான் இப்படித்தான் இருப்பேன்' என்பார்!

சினிமா நகைச்சுவையில் ரஜினிக்கு இஷ்டமானவர் வடிவேலு. அவ்வப்போது அவருடன் பேசிச் சிரிப்பார். 'உங்ககிட்ட பேசினா, எனக்குப் புதுசா ரீ-சார்ஜ் பண்ணின மாதிரி இருக்கு வேலு' என்பார்!

Tuesday, June 16, 2009

C A jawan in Siachen is an undergraduate; often barely past his Class X or Class XII. He gets just Rs.400 a month additionally as High Altitude Allowance over his civilian counterpart
C EVERYONE loves to crib. About poor public transport, lack of family time, delayed promotions, low income, a lousy film, a poor display by the national cricket team, government policies, paying taxes or about traffic cops. In fact, we have cribs for all seasons and reasons. Resultantly, we become cynical, distressed and fail to see the miracle that is our life.

It’s time to change how we view ourselves; appreciate and count the blessings in our life
Here’s something to help correct our thinking: Siachen is the world’s second longest glacier, travelling 70km in the Karakoram Range in the Himalayas. It literally means the ‘place of wild roses’. Located at a height of 22,000 ft, temperatures here are minus 60 degrees centigrade. The weather is so hostile here that it takes three hours to thaw one’s feet in boiling water placed over a kerosene stove. Water freezes even as it enters your throat.
As you read this, 3,000 Indian soldiers, most of them young jawans, patrol the Saltoro Ridge on the glacier. Below them, on the other side of the ridge, an equal number of Pakistani soldiers are on duty. Siachen is the world’s highest battlefield. Since 1984, India and Pakistan have been locked in a confrontation on this uninhabitable terrain for reasons completely illogical from a civilian perspective
History testifies that during Partition, Sia- chen came with India, but a questionable case of cartographic aggression several years later, saw Pakistan staking claim over this piece of land. It is a war that nobody wants. To give you an estimate of what it takes to fight this war, know that it costs the Indian government Rs 500 for every chappati it reaches to our troops in Siachen. Besides, in these 25 years, more lives have been lost due to the weather than due to gunfire.

So, why is Siachen relevant to our discussion today? For the following reasons:
1.A jawan in Siachen is an undergraduate; often barely past his Class X or Class XII

2.It is quite possible therefore he may not even know where Siachen is located on the map till he is actually posted there
(Chances are that even you didn’t know till now where exactly is Siachen located; despite your education and your higher IQ!)
3.He responded to a call of duty and to fulfill his pledge as an army man in accepting to go to Siachen.
4.It is believed that most soldiers on a Siachen posting write to their families saying they will be lucky if they came backwith enemy number 1 being the weather.

5.A jawan posted in Siachen gets just Rs 400 a month additionally as High Altitude Allowance over his civilian counterpart; which means, say, this jawan was posted in Chennai and he got Rs 1000 a month, he will get just Rs 1400 a month if posted in Siachen!!!
6.At the end of every vigil/shift, the soldier comes back to a makeshift tent to thaw his feet, and prepare for the next shift…it is a continuous ordeal to stay alert and alive! Imagine, being paid a mere, forgettable Rs 400 additionally a month for doing a seemingly thankless job in such hostile weather conditions?
Why do you think, this young soldier, stakes his life to do this kind of work?

The answers are simple. He does this because it is his duty and it involves national honour. He also does this so that you and I can sleep well tonight, and perhaps crib about so many more inane things.

Dear Reader, life is a gift. Do not waste it cribbing about things that you haven’t got or that are beyond your control
Count your blessings. You are educated. Use your intellect to benefit others than squandering it in criticism and cynicism. And each time you get the urge to crib, think twice.

Think of that unknown jawan in Siachen and remember that someone, somewhere was, is and will continue to be more challenged than you and me

- Indian Express dt. 16thJune 2009

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Think twice before you crib!

Think twice before you crib!

read more...

Tuesday, June 2, 2009

Why Jealous

What is jealousy and why does it hurt so much?



Jealousy is comparison. And we have been taught to compare, we have been conditioned to compare, always compare. Somebody else has a better house, somebody else has a more beautiful body, somebody else has more money, somebody else has a more charismatic personality. Compare, go on comparing yourself with everybody else you pass by, and great jealousy will be the outcome; it is the by-product of the conditioning for comparison.

Otherwise, if you drop comparing, jealousy disappears. Then you simply know you are you, and you are nobody else, and there is no need. It is good that you don’t compare yourself with trees, otherwise you will start feeling very jealous: why are you not green? And why has existence been so hard on you — and no flowers? It is better that you don’t compare with birds, with rivers, with mountains; otherwise you will suffer. You only compare with human beings, because you have been conditioned to compare only with human beings; you don’t compare with peacocks and with parrots. Otherwise, your jealousy would be more and more: you would be so burdened by jealousy that you would not be able to live at all.

Comparison is a very foolish attitude, because each person is unique and incomparable. Once this understanding settles in you, jealousy disappears. Each is unique and incomparable. You are just yourself: nobody has ever been like you, and nobody will ever be like you. And you need not be like anybody else, either.

Existence creates only originals; it does not believe in carbon copies.

A bunch of chickens were in the yard when a football flew over the fence and landed in their midst. A rooster waddled over, studied it, then said, “I’m not complaining, girls, but look at the work they are turning out next door.”

Next door great things are happening: the grass is greener, the roses are rosier. Everybody seems to be so happy — except yourself. You are continuously comparing. And the same is the case with the others, they are comparing too. Maybe they think the grass in your lawn is greener — it always looks greener from the distance — that you have a more beautiful wife.... You are tired, you cannot believe why you allowed yourself to be trapped by this woman, you don’t know how to get rid of her — and the neighbor may be jealous of you, that you have such a beautiful wife! And you may be jealous of him....

Everybody is jealous of everybody else. And out of jealousy we create such hell, and out of jealousy we become very mean.

An elderly farmer was moodily regarding the ravages of the flood. “Hiram!” yelled a neighbor, “your pigs were all washed down the creek.”
“How about Thompson’s pigs?” asked the farmer.
“They’re gone too.”
“And Larsen’s?”
“Yes.”
“Humph!” ejaculated the farmer, cheering up. “It ain’t as bad as I thought.”

If everybody is in misery, it feels good; if everybody is losing, it feels good. If everybody is happy and succeeding, it tastes very bitter.

But why does the idea of the other enter in your head in the first place? Again let me remind you: because you have not allowed your own juices to flow; you have not allowed your own blissfulness to grow, you have not allowed your own being to bloom. Hence you feel empty inside, and you look at each and everybody’s outside because only the outside can be seen.

You know your inside, and you know the others’ outside: that creates jealousy. They know your outside, and they know their inside: that creates jealousy. Nobody else knows your inside. There you know you are nothing, worthless. And the others on the outside look so smiling. Their smiles may be phony, but how can you know that they are phony? Maybe their hearts are also smiling. You know your smile is phony, because your heart is not smiling at all, it may be crying and weeping.

You know your interiority, and only you know it, nobody else. And you know everybody’s exterior, and their exterior people have made beautiful. Exteriors are showpieces and they are very deceptive.

There is an ancient Sufi story:

A man was very much burdened by his suffering. He used to pray every day to God, “Why me? Everybody seems to be so happy, why am only I in such suffering?” One day, out of great desperation, he prayed to God, “You can give me anybody else’s suffering and I am ready to accept it. But take mine, I cannot bear it any more.”

That night he had a beautiful dream ÿ beautiful and very revealing. He had a dream that night that God appeared in the sky and he said to everybody, “Bring all your sufferings into the temple.” Everybody was tired of his suffering — in fact everybody has prayed some time or other, “I am ready to accept anybody else’s suffering, but take mine away; this is too much, it is unbearable.”

So everybody gathered his own sufferings into bags, and they reached the temple, and they were looking very happy; the day has come, their prayer has been heard. And this man also rushed to the temple.

And then God said, “Put your bags by the walls.” All the bags were put by the walls, and then God declared: “Now you can choose. Anybody can take any bag.”

And the most surprising thing was this: that this man who had been praying always, rushed towards his bag before anybody else could choose it! But he was in for a surprise, because everybody rushed to his own bag, and everybody was happy to choose it again. What was the matter? For the first time, everybody had seen others’ miseries, others’ sufferings — their bags were as big, or even bigger!

And the second problem was, one had become accustomed to one’s own sufferings. Now to choose somebody else’s — who knows what kind of sufferings will be inside the bag? Why bother? At least you are familiar with your own sufferings, and you have become accustomed to them, and they are tolerable. For so many years you have tolerated them — why choose the unknown?

And everybody went home happy. Nothing had changed, they were bringing the same suffering back, but everybody was happy and smiling and joyous that he could get his own bag back.

In the morning he prayed to God and he said, “Thank you for the dream; I will never ask again. Whatsoever you have given me is good for me, must be good for me; that’s why you have given it to me.”

Because of jealousy you are in constant suffering; you become mean to others. And because of jealousy you start becoming phony, because you start pretending. You start pretending things that you don’t have, you start pretending things which you can’t have, which are not natural to you. You become more and more artificial. Imitating others, competing with others, what else can you do? If somebody has something and you don’t have it, and you don’t have a natural possibility of having it, the only way is to have some cheap substitute for it.

I hear that Jim and Nancy Smith had a great time in Europe this summer. It’s so great when a couple finally gets a chance to really live it up. They went everywhere and did everything. Paris, Rome... you name it, they saw it and they did it.

But it was so embarrassing coming back home and going through customs. You know how custom officers pry into all your personal belongings. They opened up a bag and took out three wigs, silk underwear, perfume, hair coloring...really embarrassing. And that was just Jim’s bag!

Just look inside your bag and you will find so many artificial, phony, pseudo things — for what? Why can’t you be natural and spontaneous? — because of jealousy.

The jealous man lives in hell. Drop comparing and jealousy disappears, meanness disappears, phoniness disappears. But you can drop it only if you start growing your inner treasures; there is no other way.

Grow up, become a more and more authentic individual. Love yourself and respect yourself the way existence has made you, and then immediately the doors of heaven open for you. They were always open, you had simply not looked at them.

Tuesday, April 28, 2009

Andrew Cohen's Quote of the week

Quote of the Week

Taking Absolute Responsibility

One of the fundamental pillars of the teaching of Evolutionary Enlightenment is the individual's willingness to take absolute responsibility for his or her own self. You don't have to be perfect, because nobody's perfect. Even God is not perfect, in an evolutionary context. When I use the word God, I always speak about he, she, or it as having two faces: the Unmanifest and the Manifest. In the unmanifest realm—beyond time and form—God is inherent perfection, ever unchanging and always free from the process of becoming. But from the perspective of manifestation, in the world of time and form, God is struggling to create a perfect universe—and what a chaotic process it is! The entire creative unfolding is very messy and full of errors. But the good news always is that if you step back far enough and look at the process as a whole, you can see that there is development, and that is what is so deeply positive about it. But the manifest God isn't perfect. Why? Because he or she is still evolving. So obviously we couldn't possibly be perfect. That is the nature of the developmental process. But if you want to be a liberated human being in a developmental context, what matters is that you, in all your imperfection, are willing to take absolute responsibility now for your own self.


Andrew Cohen

Monday, April 27, 2009

உடல்....உயிர்...கடவுள்!

ஆனந்தம்... பரமானந்தம்!

உணவு விடுதிகளிலும் திருமணப் பந்திகளிலும் தங்களது இலையைப் பார்த்துச் சாப்பிடுவதைவிட, அடுத்தவர் இலையைப் பார்த்து சாப்பிடும் வேடிக்கையை, வேடிக்கை பார்த்திருக்கிறேன்! நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதை விட, பிறர் என்ன சாப்பிடுகின்றனர் என அறிவதில்தான் பலருக்கும் ஆர்வம்!

'இனிப்பு சாப்பிடாதீர்கள்... அதிகம் சதை போடும்' என்று குண்டான ஒருவரிடம் சொல்லிப் பாருங்கள். 'இனிப்பு சாப்பிட்டா சதை போடும் என்பதெல்லாம் உண்மையில்லை சார்! என் நண்பர் ஒருத்தர்... எவ்வளவு இனிப்பு சாப்பிடுவார் தெரியுமா? அவரு ஒல்லியாத்தான் இருக்காரு... இனிப்புக்கும் குண்டுக்கும் சம்பந்தமே இல்லை!' என்று அவசர அவசரமாக மறுப்பார். 'இன்னொருவர் சாப்பிடுகிறார். எனவே, நான் சாப்பிட்டால் என்ன?' என்று கேட்பதுதான் நம்மவர்களது வாதம்!

இது, பிழையான அணுகுமுறை. ஒருவருக்கு எது அமுதோ, அது மற்றவருக்கு விஷமாகவும் முடியும். மற்றவருக்கு எது விஷமோ, அது இன்னொருவருக்கு அமுதமாக இருக்கும். இன்னொரு விஷயம்... அளவு மாறினாலும் அமுதம் விஷமா கும்; விஷம் அமுதாகும்!


உடம்பின் சூட்சுமத் தன்மை மனிதருக்கு மனிதர் வேறுபடும். நம் உடம்பின் இயங்கும் தன்மை என்ன என்பதை நாம்தான் கண்டறிய வேண்டும். சிலரது உடல்வாகு, உள்ளே செல்லும் உணவின் தன்மையை அதிகம் உள்வாங்காது.

அப்படியே வெளியே தள்ளி விடும். சிலருக்கு... கொஞ்சம் சாப்பிட்டாலும், அனைத்தும் தோலுக்கு அடியில் சதைத் திரட்சியாக அடுக்கடுக்காக ஒளித்து வைக்கப்படும். பணத்தைச் சுருட்டி சுவிஸ் வங்கியில் ஒளித்து வைப்பது போல, சிலரது உடம்பு சுருட்டி சுருட்டி உடல் வங்கியில் ஒளித்து வைத்துக் கொள்ளும்! சிலரின் உடம்பு, எரித்துப் பொசுக்கி விடும்; சதை விழாது. எனவே, நம் உடலின் இயல்பு என்ன என்பது கண்டறிவதே முதல் வேலை. நமது வேலைப் பளு மற்றும் வேலையின் இயல்பு ஆகியவற்றுக்கு ஏற்ப சாப்பிடுவது இரண்டாவது கடமை.

வயிறு வளர்த்தவர்களை, 'போலீஸ்கார தொந்தி' என கேலி செய்கிறோம். அதிக நேரம் நின்றபடியே வேலை செய்பவர்கள், சாதாரணமாகச் சாப்பிட்டா லும் வயிறு முன் தள்ளிவிடும். அதிக நேரம் உட்கார்ந்தபடி வேலை செய்தாலும் இடுப்பைச் சுற்றி வட்டம், மாவட்டம் என்று சதை தடித்து விடும் வாய்ப்பு உண்டு. எனவே, வேளைக்கு ஏற்ற சாப்பாடு; வேலைக்கு ஏற்ற சாப்பாடு& ஆகிய இரண்டுமே கவனிக்கத் தக்கது.

மூன்றாவதாக... பிடித்ததைச் சாப்பிடுவது. ருசி அதிகமாக இருந்தால், கொஞ்சம் கூடுதலாக சாப்பிடுவதையும் இலவசமாகவோ அல்லது பிறர் செலவில் கிடைக்கிறது எனில், பரிமாறுபவரே பயப்படும்படி சாப்பிடுவதையும் அறவே நிறுத்த வேண்டும். 'அற்றால் அளவறிந் துண்க' எனும் குறள் நெறியை மந்திரமாக ஏற்று செயல்பட வேண்டும்.

காட்டில், மிருகக்காட்சிசாலையில்... பசி இல்லா மல் சாப்பிடும் மிருகம் ஒன்றைக்கூட நீங்கள் பார்க்க

முடியாது. மிருகங்கள், பசி இல்லையெனில் உணவைத் தொடவே தொடாது. பசியே இல்லாமல் சாப்பிடும் அதிசய பிராணி மனிதன் மட்டுமே!

சாப்பிடுவதற்கு முன் ஒரு விஷயம்...

1. இதை அவசியம் சாப்பிட வேண்டுமா?
2. இப்போது சாப்பிட வேண்டுமா?
3. இவ்வளவு சாப்பிட வேண்டுமா?
4. இப்படி & இந்தப் பக்குவத்தில்தான் சாப்பிட வேண்டுமா?

_ இந்த நான்கு கேள்விகளுக்கும் 'ஆம்' என்று பதில் தந்து விட்டு சாப்பிடுபவர்களை மந்தம், மன வருத்தம், மருத்துவம், மயானம் (மரணம்) ஆகிய நான்கும் நெருங்குவதே இல்லை.

சரியான உணவைத்தான் சாப்பிடுகிறோம் என்பதற்கான அளவுகோல் எது? எந்த உணவை

சாப்பிட்ட பிறகும் அதிக வேலை பார்க்கும் ஆர்வத்தையும் சுறுசுறுப்பையும் அடைகிறீர் களோ... அந்த உணவே உங்களுக்கான உணவு! சாப்பிட்ட களைப்பு இன்றி கூடுதலாக பணியாற்ற முடிந்தால், அதுவே சரியான உணவு.

எல்லோருக்கும் ஏற்ற, சரியான... ஒரே உணவு

என்று எதையுமே சொல்ல முடியாது. ஒருவருக்கு

ஒத்துக்கொள்ளும் உணவு, பிறருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். எனவே, தனக்கு உகந்த உணவு என்ன என்பதை அறிந்து கொள்வதே நமது முதல் கடமை! உடனே நீங்கள், 'அச்சச்சோ... சுவையே இல்லாமல் சாப்பிடச் சொல்கிறானே...' என்று தவறாக அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. ருசி என்பது முக்கியம்; மறுப்பதற்கு இல்லை.

ரசிகமணி டி.கே.சி. ஒருமுறை டெல்லி சென்றிருந் தார். அந்தக் காலத்தில் வடக்கே அரிசி கிடைப்பது மிகவும் கடினம். ஆகவே பகலிலும் இரவிலும் சப்பாத்தியே அவருக்குத் தரப்பட்டது. பிறகு அவர் தமிழகம் திரும்பியதும் பத்திரிகை ஆசிரியர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, சப்பாத்தி

குறித்து இப்படி கிண்டலாகச் சொன்னாராம்: ''அதென்னய்யா உணவு... சப்பாத்தி தயாரிக்கவும் ரெண்டு கை தேவை; பிய்த்துத் தின்னவும் ரெண்டு கை தேவை!''

உடனே பத்திரிகை ஆசிரியர், ''அதுக்கு ஒரு சப்ஜி தருவார்களே... உருளைக்கிழங்கு மசாலா... அதைத் தொட்டு சாப்பிட்டால், கஷ்டம் இருந்திருக்காதே'' என்றார்.

உடனே டி.கே.சி., ''உருளைக்கிழங்கு சப்ஜியோட தான் சாப்பிடணும்னா சப்பாத்தி என்ன உசத்தி?

உங்க நியூஸ் பேப்பரையே திங்கலாமே?! சொந்த பலத்தில் சப்பாத்தியால நிக்க முடியுமா? மெத்து மெத்துன்னு பஞ்சு மாதிரி இருக்கிற இட்லிக்குப் பக்கத்துல நெருங்கக்கூட முடியாது சப்பாத்தியால'' என்று பதிலடி கொடுத்தாராம்!

நீண்ட காலம் பழகிவிட்டதாலேயே உணவுப் பழக்கத்தில் நம்மால் மாற்றங்களைக் கொண்டு வர

முடிவதில்லை. ஆனால், ஆரோக்கியம் மற்றும் ஆனந்தம் குறித்து அக்கறை இருந்தால், மாற்றங் களைத் தாராளமாகக் கொண்டு வர முடியும்.

அரபுக் கதை ஒன்று: கண்ணில்லாத ஒருவர் தடியை ஊன்றியபடி, பாலைவனத்தில் பயணம் மேற்கொண்டார். இவர் மீது கருணை கொண்ட ஒருவர், பயணத்தில் உதவியபடி வந்தார்.

அது குளிர்காலம்! பனி மழை பெய்தது. இருவரும் அங்கிருந்த பழைய சத்திரம் ஒன்றில் தங்கினர். அதிகாலையில் பார்வையற்றவர் எழுந்து, தனது கைத்தடியை தேடினார். நாலாபுறமும் துழாவிய போது, வளைந்தும் நெளிந்துமாக வழுவழுப்பான தடி ஒன்று கையில் அகப்பட்டது.

வேலைப்பாடு மிக்க கைத்தடி ஒன்று கிடைத்து விட்டதாக பார்வையற்றவர் மகிழ்ந்தார். உடன் வந்தவர், அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவரை, தடியால் தட்டி எழுப்பினார் பார்வையற்றவர். உறக்கத்தில் இருந்து கண் விழித்தவர், பார்வையற்றவரின் கையில் இருந்ததைக் கண்டு அதிர்ந்தார். அவர் கையில் இருந்தது தடியல்ல... பாம்பு. குளிரில் விறைத்து மரக் கட்டை போல் கிடந்தது அது!

பார்வையற்றவரோ... பாம்பைக் கைத்தடி என நினைத்து, அதை சந்தோஷத்துடன் தடவிக் கொண்டே இருந்தார். உடன் வந்த ஆசாமி பதறிப் போய், ''முதல்ல அந்த சனியனை

தூக்கி எறி. அது தடியல்ல... பாம்பு'' என்று அலறினார். உடனே பார்வையற்ற மனிதர், ''ஏன் இப்படி பொய் சொல்றே? அழகான தடி எனக்குக் கிடைச்சிருச்சுன்னு உனக்குப் பொறாமை. நான் தூக்கி எறிஞ்சதும் நீ எடுத்துக்கலாம்னு நினைக்கறே?'' என்றாராம்.

உடன் வந்த ஆசாமி தலையில் அடித்துக் கொண்டார். ''உளறாதே... இது கொடிய விஷம் கொண்ட பாம்புதான். குளிர்ல விறைச்சுப் போய் வெறும் கட்டை யாகிக் கிடக்குது. கொஞ்ச நேரத்துல உணர்வு வந்ததும் உன்னைக் கடிச்சிரும்'' என்று அவர் சொல்ல... அவரின் நட்பையே முறித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார் பார்வையற்ற ஆசாமி. சிறிது நேரத்தில் விடிந்தது; சூரியன் உதித்தது. வெயில் சூடு பட்டு, உணர்வு திரும்பி இயல்பு நிலைக்கு வந்தது பாம்பு. தம்மை வருடிக் கொடுத்து, ஆனந்தப்பட்ட அந்த பார்வையற் றவரை எமலோகத்துக்கு அனுப்பியது.

இந்தக் கதையின் தத்துவம் என்ன? நமது பழக்கங்

களே பாம்பு. அந்த விழியற்றவர்தான் நாம்! வழிகாட்டி உதவியவர், விழிப்புற்றிருக்கும் ஞானி.

நமது பழக்கங்களை விடச் சொல்கின்றனர் ஞானிகள். தூக்கி எறியுங்கள் என்று அறிவுறுத்து கின்றனர். ஆனால், அதை ஏற்காமல், அவர்களையே எதிரிகளாக

எண்ணுகிறோம்; எமலோகம் போகிறோம். இந்த அசட்டுத்தனம் ஏன்? விழிப்புற்றவர்களின் வழி காட்டுதலை ஏற்கலாமே?

பழம்பெருமை பேசும் பலரும், 'ஒரு வேளை உண்பவன் யோகி; இரு வேளை உண்பவன் போகி; மூன்று வேளை உண்பவன் ரோகி; நான்கு வேளை உண்பவன் துரோகி' என்று வசனம் பேசுவர். ஆனால்,

ஒரே வேளையில் நிறைய்ய சாப்பிடும் நமது உணவு முறையே தவறானது

என்பதே என் வாதம்! உலகில் சர்க்கரை நோயின் தலைமைச் செயலகமாக இந்தியா மாறியிருப்பதற்கு மூல காரணமே இதுதான்! திட உணவு, திரவ உணவு, முளை கட்டிய பயறு முதலான உணவை கொஞ்சமாக, ஆறு வேளைகளாகப் பிரித்துக் கொண்டு சாப்பிடுகிற உணவுத் திட்டம் ஆரோக்கியத்தின் அஸ்திவாரம். போகிற இடத்தில் எல்லாம் கொடுக்கிறார்களே என்று சாப்பிட்டால், ஆபத்துதான்!

உடல் என்பது விலைமதிப்பற்ற கருவி! அது நமது சத்ருவும் அல்ல... மித்ருவும் அல்ல! அது ஒரு ஒழுங்குத் திட்டம். அதை நாசப்படுத்துவது நல்லதல்ல. உடல் மீது இரக்கம் கொள்ளுங்கள்; அதைச் சங்கடப்படுத்தாதீர்கள். பிறரிடம் அன்பு காட்டுவது

எவ்வளவு அவசியமோ, அதுபோன்று நம் மீது நாமே அன்பு காட்டுவதும் அவசியம்!

உணவைக் கொட்டும் குப்பைத்தொட்டி அல்ல உடம்பு; புதைகுழியும் அல்ல; பரமாத்மாவின் புனிதமான இறை இல்லம். எனவே, உடலை நேசியுங்கள்... முடிந்தால் பூசியுங்கள்!

கோடகநல்லூர் ஸ்ரீசுந்தர சுவாமிகள்




கோடகநல்லூர் ஸ்ரீசுந்தர சுவாமிகள்


உடுப்பி ஸ்ரீவிஜயீந்திர தீர்த்த சுவாமிகள், திருவையாறில் தான் சந்தித்த அதிசய நிகழ்வு ஒன்றை, 1940-ஆம் ஆண்டில் விவரித்துள்ளார்...
"கும்பகோணத்தை அடுத்துள்ள சுவாமிமலையில் வசித்த 16 வயது வாலிபன் திடீரென இறந்து விட்டான்.

இவனது திடீர் மரணம், அந்தக் குடும்பத்தில் பெரும் சோகத்தை உருவாக்கி விட்டது. பெற்றவர்களும் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் அழுது புலம்பியபடி இருந்தனர். அப்போது இளம் துறவி ஒருவர், அந்த துக்க வீட்டைக் கடந்து செல்ல நேரிட்டது. துறவியைக் கண்ட துக்க வீட்டார், ஓடிச் சென்று

அவரிடம், வாலிபனது சாவு குறித்து புலம்பினர். இதைக் கேட்ட அந்த துறவி, வாயில் குதப்பிக் கொண்டிருந்த வெற்றிலையின் சாறை, பிணமாகக் கிடந்தவனது கண்களில் துப்பினார். என்னே அதிசயம்?!


செத்துப் போனவன், தூங்கி எழுந்திருப்பது போல் விழித்தெழுந்தான். துக்க வீட்டார் அனைவரும் சந்தோஷத்தில் மிதந்தனர். அந்த துறவியை கடவுளை விட மேலானவராக எண்ணி வணங்கினர்."

- இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் உடுப்பி சுவாமிகள். இறந்த வாலிபனுக்கு உயிர் கொடுத்த அந்தத் துறவி- கோடகநல்லூர் ஸ்ரீசுந்தர சுவாமிகள்.

1831-ஆம் வருடம் டிசம்பர் 3-ஆம் தேதி சனிக்கிழமை அன்று அனுஷ

நட்சத்திரம், ரிஷப லக்னத்தில் அமாவாசை நாளில்... திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் அவதரித்தார் ஸ்ரீசுந்தர

சுவாமிகள். ஸ்ரீவத்ஸ கோத்திரத்தைச் சேர்ந்த யக்ஞேஸ்வர சாஸ்திரிகள்- காமாட்சி அம்மாள் தம்பதியின் 2-வது மகனாகப் பிறந்தார். மூத்தவன்- குப்பாணி சிவம்.

அப்பய்ய தீட்சிதரின் பரம்பரையில் அவதரித்தவர் சுந்தர சுவாமிகள். இவர் பிறந்த ஒண்ணரை ஆண்டிலேயே இவரின் பெற்றோர் இறந்தனர். எனவே, தாய்மாமனான வேங்கடசுப்பய்யர்தான் சுந்தரத்தை வளர்த்து வந்தார். சிறுவர்களான குப்பாணி சிவம் மற்றும் சுந்தரம் இருவரும் கல்வி பயிலுவதற்காக, கங்கைகொண்டானில் இருந்து பத்தமடைக்கு இடம் பெயர்ந்தனர். சுந்தரத்துக்கு ஐந்து வயதில் அட்சர அப்பியாசமும் ஏழு வயதில் உபநயனமும் நடைபெற்றது. பத்தமடையைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ண கனபாடிகளிடம் வேத அத்யயனம் பயின்ற சுந்தரம், கல்வி- கேள்விகளில் சிறந்து விளங்கினான். இவனது திறனைக் கண்டு வியந்த ஊர்க்காரர்கள், 'தெய்வீகப் பிறவியப்பா சுந்தரம்! இப்படியரு புள்ள நம்ம ஊர்ல வளர்றதுக்கு நாமெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும்' என்று பெருமிதம் கொண்டனர்.

சிவ பூஜை செய்வதில் ஈடுபாடு கொண்ட சுந்தரம், தினமும் ஒரு லட்சம் முறை பஞ்சாட்சர மந்திரத்தை ஜபித்து வந்தான். மேலும் யோகம், தவம் ஆகியவற்றிலும் கரை கண்டிருந்தான் சுந்தரம்.

நெல்லை மாவட்டம் அடைச்சாணி எனும் கிராமத்தைச் சேர்ந்த ராமசுப்பய்யரின் மகள் ஜானகிக்கும் சுந்தரத்துக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது சுந்தரத்துக்கு வயது பதினாறு! தன்னுடைய மாப்பிள்ளையின் சிவ பக்தியைக் கண்டு வியந்த ராமசுப்பய்யர், சிவ பூஜைக்கான நியமங்கள் சிலவற்றை அவருக்கு போதித்தார். அத்துடன், நெடுநாளாக தான் பூஜித்து வந்த பாணலிங்கம், ஸ்ரீநடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் ஆகிய விக்கிரகங்களையும் வழங்கினார்.

இந்த நிலையில், அடைச்சாணியில் உள்ள விஸ்வேஸ்வர சாஸ்திரிகள் என்பவரிடம் மந்திர உபதேசம் பெற்ற சுந்தரம், இவரை தமது குருவாக வும் ஏற்றார். இதையடுத்து பத்தமடைக்கு திரும்பிய சுந்தர சுவாமிகள், தன் வாழ்க்கை முறையை மாற்றலானார். கணவரின் எண்ணத்துக்கு தக்கபடி சுவாமிகளின் துணைவியார் ஜானகியும்

தியாகங்கள் சிலவற்றைச் செய்தார். பின்னர், தனது குருவின் ஆணைப்படி துணைவியார் ஜானகிக்கு மந்திரங்கள் உபதேசித்து, அவரை தனது முதல் சீடராக ஏற்றார். துணைவியாரின் விருப்பமும் இதுவே! இதையடுத்து சில ஆண்டுகளில், சுவாமிகளை அறிந்த அன்பர்கள் பலர், இவருக்கு சீடர்களானார்கள்.

ஒருமுறை, தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஆலயங்களை தரிசிக்க யாத்திரை மேற்கொண்டார் சுவாமிகள். பயணத்தின்போது, 'சூத சம்ஹிதை' குறித்து உரை நிகழ்த்தினார் (சிவ பக்தி, சிவ பூஜை, ஆசனங்கள், அஷ்டமா ஸித்தி, அஷ்டமாயோகம் ஆகி யவை குறித்து சூத பவுராணிகர் அருளியதே சூத சம்ஹிதை!); சிவ பஜனை செய்தார்.



புனித பூமியாம் காசிக்குச் சென்று, கங்கையில் நீராடி, காசி விஸ்வநாதர்-விசாலட்சுமி மற்றும் அன்னபூரணியை தரிசிக்க விரும்பிய சுவாமிகள், யாத்திரை புறப் பட்டார். மதுரை, திருச்சி, திருவையாறு, மாயவரம், சீர்காழி, சிதம்பரம், வேதாரண்யம், விருத்தாசலம் முதலான தலங்களை தரிசித்து, அங்கு உள்ள பக்தர்களுக்கு ஆசி வழங்கி, பின்னர் காசியை அடைந்தார்.

கங்கையில் நீராடினார்; ஆலயங்கள் பலவற்றையும் தரிசித்தார்; காசியில் உள்ள யோகிகள் பலரிடமும் உரையாடினார். அப்போது, இறை பலமும் எண்ணற்ற கலைகளும் கைவரப் பெற்ற மகா கணபதி

சுவாமிகளை சந்திக்க நேர்ந்தது. அதுவும் எப்படி?

தொடர்ந்து ஆறு மாத காலம் நீருக்கு அடியிலேயே வசிக்கும் யோகப் பயிற்சியை அறிந்த மகா கணபதி சுவாமிகளை... அவர், கங்கை நதிக்குள் தவம் இருப்பதை அறிந்து, தானும் அங்கு சென்று சந்தித்தாராம் சுந்தர சுவாமிகள்! இருவரும்

பல அரிய தகவல்களை பரிமாறிக் கொண்டனராம்! மணிகர்ணிகா கட்ட படித்துறையில்... இந்த இரண்டு துறவிகளது கல் விக்கிரகங்களை இன்றைக்கும் தரிசிக்கலாம்!

காசியில் இருந்து நெல்லைச் சீமைக்கு திரும்பிய சுந்தர சுவாமிகள் பத்தமடை, கோடகநல்லூர், சுத்தமல்லி, கடையம் முதலான தலங்களுக்குச் சென்றார். தனது குரு, திருச்சமாதி அடைந்த அடைச்சாணிக்கும் சென்று தரிசித்தார். கடையத்தில் சேஷாசல தீட்சிதர் என்ப வரை சந்தித்த பின், வித்வத் சந்நியாசத்தைப் பெற்றார். அப்போது சுவாமிகளுக்கு வயது 21.

சுவாமிகள் ஒருமுறை, சுத்த மல்லியில் தங்கி இருந்தபடி தினமும் சொற்பொழிவாற்றி வந்தார். திரளென குவிந்திருந்த பக்தர்கள் இடையே வடமொழியில் ஸ்லோகங்கள் சொல்லி, அதற்கு அழகிய தமிழில் விளக்கமும் அளித்தார். கட்டுக்குடுமியும் பூணூலுமாய் சுவாமிகள் உபந்யாசித்து வந்தபோது, ஒரு நாள் திடீரென எழுந்து, உள்ளே சென்றார். சில நிமிடங்களில் மீண்டும் திரும்பி வந்தார்.

அவரைக் கண்டு பலரும் அதிசயித்தனர். காரணம்- சுவாமிகளது தலையில் கட்டுக் குடுமியும் இல்லை; திருமேனியில் பூணூலும் இல்லை. சட்டென அனைத்தையும் துறந்து விட்டு வந்தவர், தன் உபந்யாசத்தை தொடர்ந்தார். இதன் பிறகுதான் சுவாமிகளின் துறவு வாழ்க்கை முழுமை அடைந்த தாகக் கருதினர் அவரது சீடர்கள்.



தனது 23-ஆம் வயதில், நெல்லை சங்கர மடத்தில் சில காலம் வசித்த சுவாமிகள், அங்கு எதிர்பார்த்த அமைதி நிலை கிடைக்கப் பெறாததால், நெல்லையை அடுத்த கோடகநல்லூரை அடைந்தார். இங்கு, தாமிரபரணிக் கரையோரத்தில், நெடுநெடுவென வளர்ந்திருக்கும் நாணல் மற்றும் மூங்கில் புதருக்குள் சென்று, எவரும் தன்னை அணுகமுடியாதபடி நிஷ்டையில் ஆழ்ந்திருப்பார். சில தருணங்களில் அப்படியே சமாதி நிலையை எய்தி விடுவாராம் சுவாமிகள். அப்போது சுவாமிகளுக்கு உணவு எடுத்து வரும் சீடர்கள், சுவாமிகளைப் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க இயலாமல், உணவுடன் திரும்பிச் செல்வார்களாம்!

ஆனால், பக்தனின் பசியை பரமன் பொறுப்பாரா? அன்ன ஆகாரம் எதுவும் இன்றி, சுவாமிகள் நிஷ்டையில் இருக்கும்போது, ஆதிசிவனே அந்தணர் வடிவில் அன்னப் பாத்திரத்துடன் தோன்றி பசியாற்றியதுடன், சுந்தர சுவாமிகளுக்கு தரிசனம் தந்தும் அருளியுள்ளாராம்!

கோடகநல்லூரில் உள்ள சங்கர மடத்தில் தங்கி, சொற்பொழிவு ஆற்றி இருக்கிறார். யோகிகளுக்கே உண்டான பரிபக்குவ நிலையை அடைவதற்கு கோடகநல்லூர் வாசம் உதவியதால், பின்னாளில் இவர், கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் ஆனார்.

ஒரு தீபாவளி தினம்! காஞ்சிபுரம் கம்பை நதிக் கரையில் உபந்யாசம் செய்தார் சுந்தர சுவாமிகள். ராமச்சந்திர மேத்தா உள்ளிட்ட அடியார்கள் சிலரும் திரளான பக்தர்களும் அங்கு இருந்தனர். உணவு, சாஸ்திரம் குறித்த விளக்கங்களை தெளிவுற விவரித்த சுவாமிகள், "பரிசுத்தமான ஒவ்வொருவரது வலது உள்ளங்கையிலும் அக்னி பகவான் ஆட்சி செலுத்துகிறார். எனவே நெருப்பின் தாக்கம் உள்ளங்கையில் எப்போதும் குடிகொண்டிருக்கும். ஆகவே, உள்ளங்கையில் படாமல் உணவைச் சாப்பிடுவதே உத்தமம்" என்றார். இதை ராமச்சந்திர மேத்தா கூர்ந்து கேட்டுக் கொண்டார். இந்த நிலையில், காமாட்சியம்மன் ஆலய அர்ச்சகரான சுப்ரமண்ய பட்டர், தெய்வ அலங்காரம் மற்றும் நைவேத்திய தயாரிப்புக்காக புஷ்பங்கள், அரிசி மற்றும் ஒரு கொட்டாங்கச்சியில் நெருப்புத் துண்டுகள் ஆகியவற்றுடன் அங்கு வந்தார். திடீரென மழை பெய்யவே, கொட்டாங்கச்சியில் இருந்த நெருப்புத் துண்டங்கள், மழையில் நனைந்து அணைந்தது. இது, சுவாமிகளது திருவிளையாடல் என்பதை அப்போது எவரும் உணரவில்லை.

சுவாமிகளை வணங்கிய சுப்ரமண்ய பட்டர், பக்தர் எவரையேனும் அனுப்பி, நெருப்புத் துண்டங்கள் கிடைக்க உதவும்படி வேண்டினார். உடனே சுவாமிகளும் அங்கு இருந்த ஆவுடையப்ப பிள்ளை என்பவரை அழைத்து, அடுக்களைக்குச் சென்று நெருப்புத் துண்டங்களை எடுத்து வரும்படி உத்தரவிட்டார். அப்போது ராமச்சந்திர மேத்தா வுக்கு வந்தது ஒரு யோசனை! மெள்ள சுவாமிகளை நெருங்கி... "பூஜைக்கு தேவையான நெருப்பை, தங்களது உள்ளங்கையில் இருந்து எடுத்துத் தர முடியாதா சுவாமி?" என்று பவ்யமாகக் கேட்டார். அங்கு இருந்தவர்கள் அதிர்ந்தனர். 'சுவாமிகளையா சோதிப்பது?' என்று முணுமுணுத்தனர்.



ராமச்சந்திர மேத்தாவைப் பார்த்துப் புன்னகைத்த சுவாமிகள், "தாங்கள் மேலே அணிந்திருக்கும் வஸ்திரத்தைத் தாருங்கள்" என்று வாங்கிக் கொண்டார். வஸ்திரத்தைத் தனது உள்ளங்கையில் பரபரவென தேய்த்தார். அவ்வளவுதான்! தகித்து எழுந்தது நெருப்பு. இதைக் கொண்டு, பூஜைக்குத் தேவையான அக்னி தயார் செய்யப்பட்டது. இதைக் கண்டு விதிர்த்துப் போன மேத்தா, சுவாமிகளின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அவரை ஆசிர்வதித்த சுவாமிகள், "இது இறைவனின் விளையாடலப்பா! கலங்க வேண்டாம்" என்றார்.

சிருங்கேரி ஜகத்குரு மகாசந்நிதானம், ஒருமுறை திருநெல்வேலிக்கு விஜயம் செய்திருந்தார். சுந்தர சுவாமிகளைப் பற்றி அறிந்திருந்ததால், அவரை தான் தங்கியிருந்த இடத்துக்கு அழைத்து அவருடன் பேசி மகிழ்ந்தார் சிருங்கேரி சந்நிதானம். அத்துடன் தன்னைச் சந்திக் கக் கூடி இருந்த மக்கள் இடையே, "சுந்தர சுவாமிகள் ஓர் அவதார புருஷர்" என்று கூறி, அவரது பெருமைகளை விவரித்தார்.

சுந்தர சுவாமிகளது காலத்துக்குப் பிறகு வந்தவர்தான் எனினும் காஞ்சி மகா ஸ்வாமிகள், சுந்தர சுவாமிகள் குறித்து தன் பக்தர்களிடம் விவரித்துள்ளார். அப்போது, "ஆலயத் திருப்பணிகளுக்கு அள்ளிக் கொடுத்து இறைப் பணியில் தங்களை பெரிதும் ஈடுபடுத்திக் கொண்டவர்கள் நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள். இந்த கைங்கர்யத்தைத் தொன்று தொட்டு செய்து வந்தாலும் சமீப காலத்தில் இவர்களை அதிக அளவில் இறைப் பணியில் ஈடுபடச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் சுந்தர சுவாமிகள். இவரது காலத்தில், திருமேனியில் திருநீறும் கழுத் தில் ருத்திராட்சமும் அணியாத நாட்டுக் கோட்டை செட்டியாரைப் பார்ப்பதே அரிது. அந்த அளவுக்கு இவர்களுக்கு சிவபக்தியை புகட்டியவர் சுந்தர சுவாமிகள். இவரது உத்தரவை ஏற்று, சிவாலயங்கள் பலவற்றுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளனர்" என்று கூறியுள்ளாராம் காஞ்சி மகா சுவாமிகள். இந்தத் தகவல், சுந்தர சுவாமிகளது வரலாற்றுத் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.

செட்டி நாட்டுப் பகுதிகளுக்குச் சென்று உபந்யாசம் செய்யும் போது, ஏகமுக ருத்திராட்சத்தின் மகிமையை எடுத்துரைப்பாராம் சுந்தர சுவாமிகள். இதைக் கேட்ட நாட்டுக்கோட்டை செட்டிமார்கள் பலரும், ஏகமுக ருத்திராட்சத்தை அணியத் துவங் கினர். சுவாமிகளை குருவாக ஏற்று வணங்கி வரும் எண்ணற்ற அன்பர்கள், ஏகமுக ருத்திராட்சத்தை அணிந்திருப்பதைக் காணலாம்!

திருவையாறு பகுதியில் உள்ள ஸப்தஸ்தான ஆலயங்களுக்கு (திருவையாறு, திருச்சோற்றுத்துறை, திருநெய்த்தானம், திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பழனம், திருப்பூந்துருத்தி) 1872-ல் கும்பாபிஷேகம் செய்து வைத்தார் சுவாமிகள்.

வைகாசி மாதத்தில் ஒரே நாளில்... ஒரே நேரத்தில்... ஏழு ஆலயங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆச்சரியம்... ஏழு கோயில்களிலும் ஒரே நேரத்தில் அங்கு இருந்தாராம் சுவாமிகள்! இதை அறிந்த அவரின் சீடர்கள் உட்பட எண்ணற்ற பக்தர்களும் மெய்சிலிர்த்தனர்.

இந்தக் கும்பாபிஷேகத்தில் பங்கெடுத்த அந்தணர்கள், மதிய உணவுக்காக அமர்ந்திருந்தனர். அப்போது சமையலில் ஈடுபட்டிருந்த அன்பர் ஒருவர் சுவாமிகளிடம் ஓடிவந்து, "உணவில் சேர்ப்பதற்கும் அந்தணர்களுக்கு பரிமாறுவதற்கும் நெய் இன்னும் வந்தபாடில்லை. என்ன செய்வது?" என்று தவித்தபடி கேட்டார். உடனே சுவாமிகள், "அவ்வளவுதானே...

கோயில் குளத்தில் இருந்து நான்கு குடங்களில் தண்ணீர் எடுத்து வா" என்றார்.

'நெய் கேட்டால் நீரை எடுத்து வரச் சொல்கிறாரே...' என்று அந்த அன்பர் குழம்பியபடி நின்றார். "அட... சீக்கிரம் எடுத்துட்டு வாப்பா. அந்தணர்கள் பசியில இருக்காங்க..." என்று அவரை விரட்டினார் சுவாமிகள். உடனே அன்பரும் நான்கு குடங்களிலும் குளத்து நீரை எடுத்து வந்து, சுவாமிகளுக்கு முன்னே வைத்தார்.

அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை அறியும் ஆவலுடன் அனைவரும் காத்திருந் தனர். கையில் கொஞ்சமாக திருநீறை எடுத்த சுவாமிகள், ஸ்ரீஐயாரப்பரை பிரார்த்தித்து, அந்த திருநீறை நான்கு குடங்களிலும் மெள்ள தூவினார். மறுகணம், குடங்கள் அனைத்திலும் கமகமத்தது நெய் வாசனை. அனைவரும் அதிசயித்துப் போனார்கள். இந்த நெய்தான் அன்றைக்குப் பயன்படுத்தப்பட்டது.

இதையடுத்து சில நிமிடங்களில், நெய்யை எடுத்து வந்து இறக்கினார் வியாபாரி. உடனே அன்பர் ஒருவரை அழைத்த சுவாமிகள், "இதில் நான்கு குட நெய்யை மட்டும் கோயில் குளத்தில் சேர்த்து விடுங்கள். இறைவன் கொடுத்ததை அவருக்கு திருப்பித் தருவதுதான் மரியாதை" என்றார். அதன்படியே, நான்கு குட நெய், குளத்தில் ஊற்றப்பட்டது.

இதே திருவையாறு கும்பாபிஷேகத்தின் போது, இன்னொரு சம்பவமும் நடந்தது. சுந்தர சுவாமிகளை எப்படியேனும் அவமானப்படுத்த வேண்டும் எனும் நோக்கத்துடன் அந்நிய மதத்தைச் சேர்ந்த ஒருவர், அங்கு வந்தார். 'சுவாமிகளுக்கு என் அன்பு காணிக்கை' என்று சொல்லி, பொட்டலம் ஒன்றை சுவாமிகளுக்கு முன்பு வைத்தார்.

மெள்ள புன்னகைத்த சுவாமிகள், தனது திருக்கரத் தால் அந்தப் பொட்டலத்தைத் தொட்டார். பிறகு அந்த ஆசாமியிடம் பொட்டலத்தைப் பிரிக்கும் படி கூறினார். சுவாமிகளுக்கு அவமானம் நேரப் போவதாக மகிழ்ந்த அந்த ஆசாமி, பொட்டலத்தை திறந்தார். அதில்... சுவையான பழ வகைகள் இருந்தது கண்டு அதிர்ந்தார். ஏனெனில், பொட்டலத்தில் வைத்திருந்தது மாமிசமாயிற்றே...!

தை அமாவாசையின் போது (1864-ஆம் ஆண்டு) நெல்லை காந்திமதி அம்மன் கோயிலில் லட்சதீபம் ஏற்றுதல்; பொதிகை மலை தரிசனம்; குறுக்குத் துறை முருகப் பெருமானின் ஆலய விஜயம் உள்ளிட்ட

பணிகளை மேற்கொண்டார் சுவாமிகள். இதையடுத்து புதுக்கோட்டை ஒட்டுத் திண்ணை பரதேசி சுவாமிகளது விருப்பத்துக்கு இணங்க, புதுகைக்குச் சென்றார் சுவாமிகள்.

அப்போதுதான்... அந்தணர் அல்லாதோருக்கும் பெண்களுக்கும் முறைப்படி தீட்சை வழங்கினார். இங்கு தங்கியிருந்த வேளையில்... அரிமளம் சிவராமன் செட்டியார் மற்றும் புதுவயல் அழகப்ப செட்டியார் ஆகிய பக்தர்கள் இருவரும் சுவாமிகளைப் பெரிதும் கவர்ந்தனர்.

இதையடுத்து, பல தலங்களுக் கும் சென்றவர், மீண்டும் புதுக்கோட்டைக்கு வந்தார். அங்கிருந்து ராமேஸ்வரத்துக்கு சென்றபோது, அரிமளம் சிவராமன் செட்டியார் உட்பட பக்தர்கள் பலரும் உடன் சென்றனர். ரெட்டை மாட்டு வண்டிகளில் பயணம் செய்தவர்கள் திருமயத்தை அடைந்தபோது, அந்த அற்புதம் நிகழ்ந்தது.

எதிரே சாலையில் நின்றபடி, 'வண்டியை புதுக்கோட்டைக்குத் திருப்பு' என்று சொல்லி மறைந்தார் சுந்தர சுவாமிகள். வண்டிக்காரனுக்கோ குழப்பம்... 'என்னடா இது? வண்டில அசந்து தூங்கிட்டிருந்த சாமீ, திடீர்னு கீழே இறங்கி புதுக்கோட்டைக்குத் திருப்பச் சொல்றாரு?' என்று! பிறகு வண்டியைத் திருப்பி, மீண்டும் புதுக்கோட்டை நோக்கிச் செலுத்தினான். சிறிது நேரத்தில் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட சுவாமிகள், "இப்ப நாம எங்கேப்பா இருக்கோம்?" என்று கேட்க... "புதுக்கோட்டையை நெருங்கிகிட்டு இருக்கோம் சாமீ" என்று பதில் சொன்னான் வண்டிக்காரன்.

சுவாமிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. "என்னது... புதுக்கோட்டைக்கா...? ராமேஸ்வரம் போகலையா?" என்று கேட்டார். உடனே வண்டிக்காரன், "என்ன சாமீ... நீங்கதானே வண்டிக்கு எதிர்ல நின்னு 'புதுக்கோட்டைக்கே போடா'னு சொன்னீங்க?" என்றான். ஆச்சரியப்பட்ட சுவாமிகள், "வண்டிலேருந்து நான் இறங்கவே இல்லியேப்பா..." என்று உறுதிபட தெரிவித்தார்.

பின்னர், திருமயத்தில் வண்டி எந்த இடத்தில் புதுகைக்கு திரும்பியதோ... அந்த இடத்துக்கு வெகு அருகில் பெரும் புயல் வீசியதாம்! மரங்கள் விழுந்து, வீடுகள் சரிந்து, சாலையில் சென்ற வண்டிகள் அனைத்தும் நிலை தடுமாறி கவிழ்ந்து விட்டன வாம்! ஆடு-மாடுகள் கூட நாசமாகி விட்டதாம்! மறுநாள்... விடிந்ததும் இந்த தகவல் தெரிந்தது. அப்போதுதான், சுவாமிகளது உருவத்தில் வந்து இறைவனே தங்களை காப்பாற்றி உள்ளான் எனும் உண்மையை அறிந்து அனைவரும் சிலிர்த்தனர்.

பின்னர், சுவாமிகளை அரிமளத்துக்கு அழைத்துச் சென்ற சிவராமன் செட்டியார், சிவாலய

கும்பாபிஷேகம் மற்றும் அன்னதான சத்திரம் முதலான பணிகளை செய்து முடித்தார்.

மதுரையில் உள்ள விபூதி மடத்தில் பக்தர்கள் மற்றும் சிஷ்யர்களுடன் சில நாட்கள் தங்கினார் சுவாமிகள். இவரின் சீடரான நாராயணசிவம் என்பவர், தண்ணீரில் அமர்ந்து யோக நிஷ்டை இருப்பதில் தேர்ந்தவர். எனவே, மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் உள்ள பொற்றாமரைக் குளத்துக்கு வந்து, நீரின் மேல் யோக நிஷ்டையில் இருந்தார் நாராயணசிவம். இதைக் கண்ட அன்பர்கள் பலரும், அவரது யோக முறையை வியந்து அதிசயித்தனர். அதுவரை குளத்து நீரில் அமர்ந்தபடி யோகத்தில் இருந்த நாராயணசிவம், திடீரென மெள்ள மெள்ள நீருக்குள் மூழ்கினார். கரையில் நின்றவர்களுக்கு இவரது உடல் தெரியவே இல்லை. அங்கு இருந்த சுவாமிகளின் பக்தரான சுப்ரமண்ய குருக்கள் என்பவர், உடனே காவல்நிலையத்துக்கு ஓடோடிச் சென்று, 'பொற்றாமரைக் குளத்தில் நாராயணசிவம் மூழ்கி விட்டார். எனவே அவரது உடலை மீட்டுத் தாருங்கள்' என்று தெரிவித்தார். இதையடுத்து பொற்றாமரைக் குளத்துக்குள் இறங்கி, தேடும் பணியில் ஈடுபட்டனர் காவல்துறையினர். இரண்டு நாளாகியும் உடல் கிடைக்கவே இல்லை.

மூன்றாம் நாள்! அங்கு வந்தார் சுந்தர சுவாமிகள். "நாராயணசிவத்தின் உடலை எப்படியேனும் மீட்டு,

தென் கரையில் உள்ள விபூதி விநாயகர் அருகே கொண்டு வந்து வைத்து விடுங்கள்' என்று காவல் துறையினரிடம் தெரிவித்தார் சுவாமிகள்.

இறந்த நாராயணசிவத்தை உயிர்ப்பித்து விடும்

எண்ணத்தில் இருக்கிறார் சுவாமிகள் என்பதை புரிந்து கொண்ட போலீசாரும் கோயில் ஊழியர்களும்

சுவாமிகளை கேலி செய்தனர். 'தண்ணீரில் மூழ்கி

இறந்து மூணு நாளாச்சு. உடலையே இன்னும் கண்டுபிடிக்க முடியலை. இவர் உயிர்ப்பிக்கப் போறாராமா?' என்று கிண்டல் செய்தனர். இருப்பினும், 'நடப்பதைத்தான் பார்ப்போமே.' என்று குளத்தில் இறங்கி தேட எத்தனித்தனர். அப்போது, திடீரென நீரில் உடல் மிதந்தது கண்டு அனைவரும் அதிர்ந்து போனார்கள். பின்னர், நாராயணசிவத்தின் உடலை விபூதி விநாயகர் சந்நிதிக்கு அருகே கொண்டு வந்து கிடத்தினர்.

சுவாமிகள், இறைவனை பிரார்த்தித்தபடி, நாராயணசிவத்தின் உடல் முழுவதும் திருநீறை அள்ளி பூசினார்; சடலத்தின் வலது காதில் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதினார்; உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மெள்ள தடவிக் கொடுத்தார். அவ்வளவுதான்... மூன்று நாட்களாக சடலமாகக் கிடந்த நாராயணசிவம், உயிர்த்தெழுந்தார். சுந்தர சுவாமிகளின் திருப்பாதங் களில் விழுந்து வணங் கினார். சுவாமிகளது அற்புதத்தை அறிந்து, அங்கு இருந்தவர்கள் அவரை வணங்கினர்.

இதையடுத்து, மதுரை யில் இருந்து திருச்சி, திருவையாறு, தஞ்சாவூர், கபிஸ்தலம், சென்னை முதலான தலங்களுக்குச் சென்று இறைவனை தரிசித்த சுவாமிகள், பின்னர் கங்கைகொண்டான் ஆனந்தவல்லி சமேத கயிலாசநாதர் ஆலயத்தின் கும்பாபிஷேகத்தை 1873-ஆம் ஆண்டு நடத்திக் கொடுத்தார்.

தன் வாழ்நாளில் 22 கும்பாபிஷேகங்களை நடத்தி வைத்திருக்கிறார் சுவாமிகள். இவர் நடத்திய முதல் கும்பாபிஷேகம் - தான் ஸித்தி அடைந்த அரிமளத்தில் உள்ள ஆலயம்! இறுதியாக நடத்திய கும்பாபிஷேகம், இவர் அவதரித்த கங்கைகொண்டானில் உள்ள ஆலயம்.

தான் சமாதி அடையும் நாள் நெருங்கி விட்டதை தமது சீடர்களிடம் தெரிவித்தார் சுந்தர சுவாமிகள். அதன்படி 1878-ஆம் வருடம் அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி (ஐப்பசி 6) கிருஷ்ண பட்ச தசமி அன்று ஸித்தி அடைந்தார் சுவாமிகள். அரிமளம் சிவராமன் செட்டியாரும் மற்ற சீடர்களும், சுவாமிகளது இறுதி காரியங்களை செய்து முடித்து, சுவாமிகளது சமாதியின் மேல் அவர் பூஜித்து வழிபட்ட பாணலிங்கத்தை பிரதிஷ்டை செய்தனர்.

அரிமளத்தில் உள்ள ஸ்ரீசுந்தர சுவாமிகளின் அதிஷ்டானத்தைத் தரிசிப்போமா?

இந்து சமய அறநிலைய ஆட்சித் துறைக்கு உட்பட்ட பொன்னமராவதி- கொன்னையூர் முத்துமாரி அம்மன் ஆலய நிர்வாகத்தின் கீழ் வருகிறது இந்த அதிஷ்டானம்.

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து தேனிப்பட்டி மற்றும் ஏம்பல் செல்லும் பேருந்துகள் அரிமளம் வழியாகச் செல்லும். தவிர, அரிமளத்துக்கு நகரப் பேருந்து வசதியும் உள்ளது. அரிமளம் மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, சற்றுத் தொலைவு நடந்தால், சுவாமிகளின் அதிஷ்டானத்தை அடையலாம். முகப்பில் ஒரு இரும்பு கேட். உள்ளே நுழைந்தால், நந்தவனம்.

கருவறை, உள்பிராகாரம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், வெளிப் பிராகாரம் என முழுவதும் கருங்கல் திருப்பணியாய் அமைந்து, விஸ்தாரமாகவும் உள்ளது. கருவறையில் சுவாமிகளின் அதிஷ்டானம்! சிலா வடிவில் உள்ள ஆவுடையாரின் மேல் சுவாமிகள் வழிபட்ட பாணலிங்கத்தை தரிசிக்கிறோம். இங்கு விபூதி அபிஷேகம் அடிக்கடி நடைபெறுமாம்! அதிஷ்டானத்தில், ஸ்ரீவிநாயகர், பின்பக்க கோஷ்டத்தில் லிங்கோத்பவர், வெளியே நாகர் ஆகிய சந்நிதிகளும் உண்டு.

தினமும் காலையில் சுமார் எட்டரை மணியளவில் அபிஷேகம் நடைபெறும். தவிர பௌர்ணமி அன்று மாலை 4 மணிக்கும், ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பு மற்றும் தேய்பிறை தசமி ஆகிய நாட்களில் பகல் 11 மணிக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். ஐப்பசி மாதம் தேய்பிறை தசமி அன்று (பூச நட்சத்திரம்) குருபூஜை சிறப்பாக நடைபெறுகிறது. அன்று மாலை சுவாமிகளின் உற்ஸவர் விக்கிரகம் வீதியுலா வரும்.

சுந்தர சுவாமிகள் இங்கு இருந்தபடி உலகமெங்கும் உள்ள பக்தர்களை இன்றைக்கும் காத்து வருகிறார் என்பது நாட்டுக்கோட்டை செட்டியார் இனத்தவர் மட்டுமின்றி ஏனைய பக்தர்களது நம்பிக்கை!

படங்கள்: எஸ். சாய் தர்மராஜ், விபா

தகவல் பலகை


தலம் : அரிமளம்

சிறப்பு : ஸ்ரீசுந்தர சுவாமிகள் அதிஷ்டானம்
எங்கே இருக்கிறது?: புதுக்கோட்டையில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது அரிமளம். அறந்தாங்கி மற்றும் திருமயத்தில் இருந்தும் சுமார் 22 கி.மீ. தொலைவுதான்.

எப்படிப் போவது?: புதுக்கோட்டையில் இருந்து 22, 27, 27ஏ மற்றும் ஜான்ஸி ஆகிய பேருந்துகளும், அறந்தாங்கியில் இருந்து 6, லதா, எஸ்.எம்.ஆர், ரங்கநாதன், பி.எல்.ஏ. ஆகிய பேருந்துகளும், திருமயத்தில் இருந்து 9-ஞி மற்றும் ராஜா ஆகிய பேருந்துகளும் அரிமளம் செல்கின்றன.

நடை திறந்திருக்கும் நேரம் :


காலை 7:30 - 12:00
மாலை 4:00 - 07:00
தொடர்புக்கு: நாகையா, செயல் அலுவலர்
மொபைல்: 94421 14167
கோவிந்தராஜன் (அர்ச்சகர்)
மொபைல்: 99441 02996

-

Thursday, April 9, 2009

Message of Master

''சூழ்நிலைகளால் வேதனைகள் உருவாவதில்லை. அந்தச் சூழ்நிலையைக் கையாளத் தெரியாமல், நீங்கள் செய்யும் குளறுபடிகள்தாம் அதை விபரீதமாக்குகின்றன!''

- சத்குரு ஜக்கி வாசுதேவ்

கடவுளின் குழந்தைகள் என்ற முத்திரை ஏன்?

ஒரு முறை குன்னூரில் தங்கி, ஊட்டியில் மாலை வகுப்பு எடுக்கக் காரில் சென்றுகொண்டு இருந்தேன். மாலை நேரம். எலும்பைத் தொடும் குளிரில், தெருஓரம் மேல் துணியில்லாமல் ஒரு பெண் நடுங்கிக்கொண்டு உட்கார்ந்திருப்பதைக் கவனித்தேன். முப்பது வயதிருக்கலாம். அவள் முகத்தில் இருந்த துன்பமும் வேதனையும் கண்டு வண்டியை நிறுத்தினேன். அவள் சற்று மனநலம் பிசகியவள் என்பதால், குடும்பத்தால் நிராகரிக்கப்பட்டவள் என்று பக்கத்தில் இருந்தவர்கள் சொன்னார்கள். அதைக் கேட்டு என் மனைவி கண் கலங்கினாள்.

அந்தப் பெண்ணைக் குளிரிலிருந்து உடனடியாகப் பாதுகாக்க, நான் அணிந்திருந்த மேல் துணியை எடுத்து, அவள் மீது போர்த்தினேன். அவளிடம் உணவுக்காகக் கொஞ்சம் பணம் கொடுத்தேன்.

இப்படிச் சிலரை மன நலம் குன்றியவர்களாகச் சமூகம் ஒதுக்கிவைப்பதை அவ்வப்போது காண்கிறேன்.

மனதளவிலோ உடலளவிலோ ஒருவரை ஊனமுற்றவர் என்று எப்படித் தீர்மானிக்கிறீர்கள்? இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்த்துத்தானே?

உங்களைவிட அதீத புத்திசாலியாக விளங்குபவரோடு உங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், உங்களுக்கும் புத்தி குறைவுதானே? அதற்காக உங்களையும் புத்தி அளவில் ஊனமானவர் என்று சொல்லலாமா?

அமெரிக்க வகுப்புகளில் பங்குகொண்ட ஒரு பெண்மணிக்கு ஜூலி என்று ஒரு மகள் இருக்கிறாள். ஜூலி குறுகிய தலையும், மிகப் பெருத்த உடலுமாக, குள்ளமான தோற்றத்துடன் இருப்பாள். ஜூலிக்கு 24 வயது. ஆனால், மூளையைப் பொறுத்தவரை எட்டு வயதுச் சிறுமியின் வளர்ச்சிதான்.


'ஜூலி மீது மிகுந்த அன்புகொண்டு இருந்த அவளுடைய பாட்டிதான் அவளை வளர்த்து வந்தாள். மூன்று வருடங்களுக்கு முன்பு அந்தப் பாட்டி இறந்துவிட்டாள். அப்போதிருந்து ஜூலி மிகவும் நிலையற்று இருக்கிறாள். 'ஜூலி உங்கள் வகுப்பில் அமரலாமா?' என்று அவள் அம்மா கேட்டாள். ஜூலியிடம், 'உனக்கு விருப்பமா?' என்று கேட்டேன். அவள் மிக விருப்பம் என்றாள்.

அவளை எந்த விதத்திலும் வித்தியாசப்படுத்தாமல், மற்றவரிடம் நடந்துகொள்வது போலவே நடந்துகொண்டேன். அவளிடம் நான் சற்று இரக்கமற்றவனாக இருப்பதாகக்கூட சிலருக்குத் தோன்றியது. அப்படி அல்ல. தனியான கவனம் கொடுப்பதைவிட, மற்றவரைப் போலவே தானும் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் அவள் ஆசை.

வகுப்பில் நான் சொன்ன பல விஷயங்கள் அவளுக்குப் புரியவில்லை. ஆனால், அசையாமல் என்னைக் கவனித்துக்கொண்டு இருந்தாள். ஒரு கட்டத்தில், என் சக்தி அலைவரிசை அவளை எட்டியது. அவள் உடலில் துள்ளலான அதிர்வுகள் தோன்றின. அதற்குப் பிறகு மேல்நிலை வகுப்பு வரை வந்த தியான அன்பர்களிடம் காணக்கூடிய சக்தி மாற்றம் அவளிடம் காணப்பட்டது. ஒரு சில நாட்கள் கழித்து அவள் என்னிடம் 'என் பாட்டி இல்லாத குறை எனக்கு இப்போது தெரியவில்லை' என்றாள்.

பொதுவான அளவுகோல்களின்படி, மூளை வளர்ச்சியில் அவள் சற்றுப் பின்தங்கியிருந்தாலும், அற்புதமான பெண்.

மனநலத்தில் பின்தங்கியவர் பொதுவாகத் தாமாகத் துன்பப்படுவதில்லை. அவர் உங்களையெல்லாம்விட மிக சந்தோஷமாகத்தான் இருக்கிறார். வெளிச் சூழ்நிலை களால் பாதிப்பில்லாமல் குழந்தைகள் போல் இருப்பது ஒரு வரம். அதை நீங்கள் குறைபாடாக நினைத்து, அவரை ஏளனமாகப் பேசுகிறீர்கள். அவரைப் பார்க்கும் பார்வையில், நடத்தும் விதத்தில், குறைபாடுள்ளவர் என்று நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறீர்கள். இப்படி நீங்கள்தான் அவரை வருத்தப்பட வைக்கிறீர்கள்.

உங்களால் மட்டும் உங்கள் உடலையும் மனதையும் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிகிறதா என்று நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். மனநலம் தவறியவராக உங்களால் கருதப்படுபவருக்கும் உங்களுக்கும் அளவுகோலில் கொஞ்சம் ஏற்றத்தாழ்வு இருக்கிறது. அவ்வளவுதானே?

எனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவருடைய மனைவி கர்ப்பமாயிருந்தபோது, அவரை ஒரு கொடிய விஷத் தேள் கடித்துவிட்டது. விஷம் வயிற்றில் இருக்கும் சிசுவைப் பாதிக்கக்கூடும் என்று டாக்டர் கருதினார். மனைவியிடம் கருக்கலைப்பு செய்யலாம் என்றுகூடச் சொன்னார். ஆனால், ஐந்து மாதக் கர்ப்பத்தைச் சிதைக்க மனைவிக்கு மனமில்லை.

ஆண் குழந்தை பிறந்தது. டாக்டர் பயந்தபடி, குழந்தை மாறுபாடான உடல் கொண்டிருந்தது. அதன் தலை மட்டும்தான் முழுமை அடைந்திருந்தது. கைகள், கால்கள் உருவாகாமலேயே குழந்தை பூமிக்கு வந்துவிட்டது.

டாக்டரின் வீட்டில் நான் தங்க நேர்ந்தபோதெல்லாம், அவர்கள் தங்கள் குழந்தையைப் பார்த்து பெரும் வேதனை கொள்வதைக் கவனித்தேன். மற்றவரைப் போல் இயங்க முடியாத சிறுவனாக இருந்தாலும், பெற்றோரிடம் காணப்பட்ட வேதனை அவனிடம் இருந்ததில்லை. எதையும் பிரித்துப் பார்த்துப் புரிந்துகொள்ளும் தன்மை இல்லாததே அவனுக்குப் பெரிய வசதியாகிவிட்டது. தான் எதையோ இழந்துவிட்டோம் என்ற எண்ணமே அவனுக்குக் கிடையாது. அவன் எப்போதும் சிரித்துக்கொண்டு சந்தோஷமாகத்தான் இருந்தான். என்னைப் பார்த்தால் உருண்டு உருண்டு வருவான். என் மடியில் ஏறி உட்கார்ந்துவிடுவான்.

எந்தவித ஊனமும் இல்லாதவராகத் தங்களை நினைக்கும் பலரிடம் காண முடியாத சந்தோஷத்தை அந்தக் குழந்தையிடம் என்னால் பார்க்க முடிந்தது. அப்படியானால், யார் ஊனமுற்றவர்கள்?

ஒருவேளை, எல்லா மனிதர்களுக்குமே இரண்டு கைகளுமே இல்லாது போயிருந்தாலும், பிழைத்திருப்போம்தானே? அப்புறம் ஏன் ஒற்றைக் கை குறைந்தால், அவரைக் குறைபாடானவர் என்று நினைக்கிறீர்கள்? பறவைகளும் பாம்பும் கைகள் இல்லாமல் வாயை அற்புதமாகப் பயன்படுத்தவில்லையா?

உடல் அளவிலும் மன அளவிலும் ஒரு வித இயலாமை இருந்தால், அப்படிப்பட்டவர்களுக்குச் சில இடங்களில் சில உதவிகள் செய்யப்பட வேண்டியதுதான். அதற்காக ஊனம் என்று முத்திரை குத்துவதா?

பெரிய மூளையை வைத்துக்கொண்டு அதை முழுமையாகப் பயன்படுத்தத் தெரியாதவர்களைவிட, இவர்கள் எந்த விதத்தில் குறைந்துவிட்டார்கள்? முறைப்படுத்தத் தெரியாமல் அதீத திறன் இருந்தால், அதுதான் ஆபத்து. இருக்கும் மூளையைக் கொதிக்க விட்டுக்கொண்டு, எப்போதும் நிம்மதியற்று இருப்பதைவிட மூளையே இல்லாமல் சாதுவாகப் போய்க்கொண்டு இருப்பவர்கள் எவ்வளவோ பரவாயில்லை.

ஒன்று ஊனம் என்பார்கள்; அல்லது, கடவுளின் குழந்தை என்பார்கள். இப்படி ஏதாவது சொல்லி மற்றவர்களிலிருந்து ஒதுக்கிவைத்துவிடுவார்கள். ஊனமுற்றவர் என்று சொல்வது எப்படியோ அப்படித்தான் பிரத்யேகமானவர் என்று சொல்வதும். மாறுபாடான உடலுடனோ, புத்தியுடனோ பிறந்த குழந்தையையும் ஒரு சாதாரண, இயல்பான குழந்தையாகப் பார்க்கும் பக்குவம் சமூகத்தில் வர வேண்டும்.

உண்மையில், உடலிலும் மனதிலும் ஊனம் என்று ஒன்று இல்லவே இல்லை. வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறுவிதமாக இந்தப் பூமிக்கு வருகிறார்கள். வெவ்வேறு திறன்களோடு வளர்கிறார்கள். அவ்வளவுதான்.

பாரபட்சத்தை விடுத்து முழுமையான மனித நேயத்துடன் பழகினால், யாரிடமும் எந்தக் குறைபாடும் தெரியாது. எந்த வருத்தமும் துன்பமும் இருக்காது!

Tuesday, March 10, 2009

தகவல் பலகை
தலம் : மருதாநல்லூர்
சிறப்பு : ஸ்ரீராதாகிருஷ்ண ஸ்வாமி மடம் என்கிற ஸத்குரு ஸ்வாமிகள் மடம்
எங்கே இருக்கிறது?: கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில், சுமார் 6 கி.மீ. தொலைவு. மருதாநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மெயின் சாலையிலேயே சிறிது தொலைவு நடந்தால், கூப்பிடு தூரத்தில் இந்த மடம் அமைந்துள்ளது.
எப்படிப் போவது?: கும்பகோணத்தில் இருந்து நீடாமங்கலம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, வடசேரி ஆகிய ஊர்களுக்குச் செல்லும் புறநகர்ப் பேருந்துகள் மருதாநல்லூர் வழியாகச் செல்லும். தவிர கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் நகரப் பேருந்துகள் எண் 20, 21, 32 ஆகியவை மருதாநல்லூர் வழியாகச் செல்கின்றன.
தரிசன நேரம்: காலை 9- 12:00-மாலை 5- 07:30.
தொடர்புக்கு:
ஸ்ரீகுரு கோதண்டராம ஸ்வாமிகள்
ஸத்குரு பீடாதிபதி
மருதாநல்லூர் அக்ரஹாரம்
மருதாநல்லூர் ஆர்.எம்.எஸ்.
கும்பகோணம் 612 402.
போன் : 0435- 241 4946
மொபைல் : 99408 29095

மருதாநல்லூர் ஸ்ரீஸத்குரு ஸ்வாமிகள்

கலியுகத்தில் இறைநாம ஜபமே, கடவுளின் அருளைப் பெறுவதற்கான சிறந்த வழி. 'நாராயண... நாராயண...' என்று எப்போதும் ஸ்ரீமந் நாராயணனின் திருநாமத்தையே உச்சரித்த ஸ்ரீநாரதரில் ஆரம்பித்து, இந்தப் பூவுலகில் அவதரித்த மகான்கள் பலரும் இறை நாம ஜபத்தின் சிறப்பை வலியுறுத்தியுள் ளனர்; இதனால் நமக்குக் கிடைக்கும் பேறுகளையும் விளக்கியுள்ளனர்.
சுமார் ஐந்நூறு வருட காலத்துக்குள் நாம ஜபத்தின் மகிமையை எண்ணற்ற மகான்கள், நாடெங்கிலும் பரப்பி வந்தனர். தமிழகத்தில் இந்தப் பணியை எந்த படாடோபமும் இன்றி செய்து வந்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்- கோவிந்தபுரம் ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள், மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகள் முதலானோர். ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் ஸ்ரீதர ஐயாவாளும் ஏறத்தாழ சம காலத்தவர்கள். இவர்களுக்குப் பிறகு சுமார் 100 வருடம் கழித்து அவதரித்தவர் மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகள். ஸ்ரீராம நாமம் ஜபிப்பதையே தன் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர். தினமும் ஒரு லட்சத்து எட்டாயிரம் முறை ராம நாமத்தை ஜபித்து வாழ்ந்த ஸத்குரு ஸ்வாமிகள், ஸ்ரீராமபிரானின் பரிபூரண ஆசியைப் பெற்றிருந்தார். இதை, இவரது வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களே மெய்ப்பிக்கின்றன.

திருவிசநல்லூர் கிராமத்தில் கி.பி. 1777-ஆம் ஆண்டில் அவதரித்தவர் மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகள். இவரது இயற்பெயர் வேங்கடராமன். மூன்று வயது வரை ஒரு வார்த்தையைக் கூட உதிர்க்காமல், வாய் பேச முடியாமலேயே இருந்தார். 'முத்தான மழலைப் பேச்சை மகனிடம் இருந்து கேட்க முடியவில்லையே... இப்படி ஊமையாக இருக்கிறானே' என்று ஏங்கித் தவித்துப் போனார் தந்தையான வேங்கட


சுப்ரமண்ய ஐயர். ஈன்றெடுத்த தாயாரோ மருகிப் போனாள். மகனுக்கு பேச்சு வரவேண்டும் என்று வேண்டாத தெய்வம் இல்லை; பார்க்காத மருத்துவம் இல்லை.

இந்த நிலையில், பல சேத்திரங்களுக்கு யாத்திரை சென்று வரும் துறவி ஒருவர், திருவிசநல்லூருக்கு வந்தார்.ஸ்வாமிகளின் பெற்றோர், துறவியை தங்கள் இல்லத்துக்கு அழைத்து வந்து நமஸ்கரித்தனர். அவரிடம் தங்களது குழந்தைக்கு இன்னும் பேச்சு வரவில்லை என்பதைக் கூறி வருந்தினர். குழந்தையான வேங்கடராமனை கூர்ந்து கவனித்த துறவி, புன்னகைத்தார். பின்னர் வேங்கட சுப்ரமண்ய ஐயரைப் பார்த்து, ''இந்தக் குழந்தையா ஊமை? இவன், தெய்வாம்சம் நிரம்பிய திருப்புதல்வன். இவனை மகனாகப் பெற்றது, உங்களின் பாக்கியம். வருந்த வேண்டாம்... விரைவில் திருவாய் மலர்வான்'' என்று ஆசீர்வதித்துச் சென்றார்.

திருவிசநல்லூருக்கு அருகில் உள்ள மணஞ்சேரியில் கோபால ஸ்வாமிகள் எனும் பாகவதர் ஒருவர் வாழ்ந்து வந்தார். எந்நேரமும் ராம நாம ஜபத்திலேயே மூழ்கி இருக்கும் இவரது மகிமையை அறிந்த வேங்கடசுப்ரமண்ய ஐயர், தன் மகனுடன் சென்று பாகவதரைச் சந்தித்தார். குழந்தையின் காதில் 'ராம' நாமத்தை ஓதிய பாகவதர், ''குழந்தாய்... உன் செவியில் நான் இப்போது சொன்ன மந்திரத்தைத் திருப்பிச் சொல்லப்பா'' என்றார்.

என்னே ஆச்சரியம்! அதுவரை பேசாமல் இருந்த வேங்கடராமன், ''ராம... ராம... ராம...'' என்று இறைவனது திருநாமத்தை உதிர்த் தான். பெற்றவர்கள் மகிழ்ந்தனர்.

ஏழு வயதில் ஸத்குரு ஸ்வாமிகளுக்கு உபநயனம் செய்விக்கப்பட்டது. தந்தை யிடம் சாஸ்திரங்களைக் கற்றறிந்தார். ஆன்மிகக் கதைகளையும் அதில் உள்ள தத்துவங்களையும் தாயாரிடம் கற்றார். வித்வான் ஒருவரிடம் சங்கீதம் கற்றார். இப்படி அனைத்திலும் தேர்ந்த ஞானியாக விளங்கினார் ஸத்குரு ஸ்வாமிகள்.

வேங்கட சுப்ரமண்ய ஐயர், அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று சிராத்தம் முதலான காரியங்களைச் செய்து வருவது வழக்கம். ஒரு முறை, மணஞ்சேரி கிராமத்தில் இருந்த ஒருவரது வீட்டில் சிராத்தம் செய்ய ஒப்புக்கொண்டார். ஆனால், சிராத்தத்தை நடத்துவதற்கு அவரால் செல்ல இயலவில்லை. எனவே, ஸத்குரு ஸவாமிகளை அனுப்பி வைத்தார். அதுவரை சிராத் தம் முதலான காரியங்களை செய்து பழக்கம் இல்லையென்றாலும் தந்தை இட்ட பணியை சிரமேற்கொண்டு ஏற்றார் ஸத்குரு ஸ்வாமிகள். சிராத் தம் செய்வதற்குத் தேவையான சமித்து, தர்ப்பை மற்றும் பூணூல் ஆகியவற்றைத் தந்தையார் எடுத்துக் கொடுக்க... அவற்றை எடுத்துக் கொண்டு மணஞ்சேரி கிராமத்துக்குப் புறப்பட்டார் ஸத்குரு ஸ்வாமிகள்.

வழியில் ஸ்வாமிகளுக்கு ஒரு யோசனை. தினமும் ஒரு லட்சத்து எட்டாயிரம் முறை ராம நாமத்தை ஜபித்து வருபவர் ஸ்வாமிகள். இன்று சிராத்தம் செய்யச் சென்றால், ராம நாமம் ஜபம் தடைபடுமோ... என்று கலங் கினார். எனினும் தந்தையாரின் சொல்லை நிறைவேற்றும் பொருட்டு, சிராத்தம் நடத்தி வைக்கப் பயணித்தார். ஆனால், ஸ்ரீராமபிரானது விருப்பம் வேறு மாதிரியாக இருந்தது.

மணஞ்சேரி கிராமத்துக்குள் நுழைந்ததும் அங்கு உள்ள ஆஞ்சநேயர் ஆலயத்தைக் கண்டார் ஸ்வாமிகள். உள்ளே நுழைந்தவர், சமித்து, தர்ப்பை, பூணூல் ஆகியவை அடங்கிய பையை ஒரு மூலையில் வைத்தார். அனுமனை தரிசிக்க சந்நிதிக்குச் சென்றார். அங்கு, ராம தூதனைக் கண்டதும் ஏகாந்த நிலையை அடைந்தார் ஸ்த்குரு ஸ்வாமிகள். தந்தையார் இட்ட பணியை மறந்தார். ஓரிடத்தில் நிஷ்டையில் அமர்ந்து, ஸ்ரீராம நாம ஜபத்தில் மூழ்கினார். அவரின் சிந்தையெல்லாம் ஸ்ரீராமஜெயம்!

சூரியன் மறையத் தொடங்கிய மாலை வேளையில் - ஒரு லட்சத்து எட்டாயிரம் முறை ஜபித்து விட்டதை உணர்ந்த ஸ்வாமிகள், மெள்ள கண் விழித் தார். எதிரே... பலிபீடத்தில் ஒரு ஜோடி வேஷ்டியும், ஐந்து ரூபாயும் இருந்தது. ஏதோ ஒரு சக்தி உத்தரவிட... எழுந்து சென்று பய பக்தியுடன் எடுத்துக் கொண்டு, வெளியே வந்தார். அப்போதுதான் அவருக்கு உறைத்தது... 'பகல் முழுதும் ஆலயத்திலேயே இருந்து விட்டோமே... தந்தையின் வார்த்தையை மீறி விட்டோமே... பித்ரு காரியத்துக்காக ஒருவர் காத்திருக்க அதை அலட்சியம் செய்து விட்டோமே' என்று தவித்தார். காலம் கடந்து சிராத்த வீட்டுக்குச் செல்வது உசிதமாகாது என்று முடிவெடுத்து, வீடு திரும்பினார் ஸ்வாமிகள்.

மணஞ்சேரி ஆஞ்சநேயர் கோயிலில், ராம நாம ஜபம் செய்ததையும், அங்கே பலிபீடத்தில் ஒரு ஜோடி வேஷ்டியும் ஐந்து ரூபாயும் இருந்ததையும் கூறியது மட்டுமின்றி, சிராத்தம் செய்து வைக்கத் தவறியதையும் பயமும் பவ்யமும் கலந்து தந்தையிடம் தெரிவித்தார் ஸ்வாமிகள்.

இதைக் கேட்டதும் முகம் வாடிப் போனார் வேங்கட சுப்ரமண்ய ஐயர். 'சிராத்தத்தை நடத்தி வைக்க வராமல் போனதற்காக, அந்த மணஞ்சேரி அந்தணர் தன்னைக் கடிந்து கொள்வாரே?' என்று கவலைப்பட்டார். அவரிடமே சென்று மன்னிப்பு கேட்டு விட எண்ணியவர், மகனிடம் எதுவும் சொல் லாமல் விறுவிறுவென தெருவில் இறங்கி, ஓட்டமும் நடையுமாக மணஞ்சேரிக்குச் சென்றார்.

இருள் சூழ்ந்த வேளை! மணஞ்சேரியை அடைந்தவர், சிராத்தம் நடத்தி வைப்பதாக தான் வாக்கு கொடுத்திருந்த அந்தணரது வீட்டுக்குள் தயக்கத்துடன் நுழைந்தார். வேங்கட சுப்ரமணிய ஐயரைக் கண்டதும், முகம் மலர ஓடி வந்து வரவேற்றார் அந்தணர்.

'சிராத்தத்துக்குத் தானோ, தன் மகனோ வந்து நடத்தி வைக்கவில்லை. எனினும் எப்படி இவரால் இப்படி புன்னகையுடன் உபசரிக்க முடிகிறது?' என்று வியந்தார் வேங்கட சுப்ரமண்ய ஐயர். பிறகு சிறிது தயக்கத்துடன், ''இன்னிக்குக் காலைல என் மகன் உங்க வீட்டுக்கு வந்து...'' என்று ஆரம்பிப்பதற் குள் இடைமறித்தார் அந்தணர்.

''கொஞ்சம் நிறுத்துங்கோ. முதல்ல நான் சொல் லிடறேன்...'' என்று அவர் கறாராக ஆரம்பிக்க... 'என்ன சொல்லப் போகிறாரோ?' என்று பதறினார் வேங்கட சுப்ரமண்ய ஐயர். ஆனால் அந்த மணஞ்சேரி அந்தணர் கண்களில் நீர் தளும்ப, ''சொன்ன நேரத்துக்குக் காலைல உங்க மகன் இங்கே வந்தான். சிராத்தத்தை திருப்தியா செஞ்சு வெச்சான். ஒரு ஜோடி வேஷ்டியும் ஐந்து ரூபாய் பணமும் தட்சணையா கொடுத்து அனுப்பினேன். ஒரு விஷயம் சொல்றேன், கோவிச்சுக்கக் கூடாது... இது வரை நீங்க சிராத்தம் செஞ்சு வெச்சப்பக் கூட, இப்படியரு திருப்தி ஏற்பட்டதில்லை. இன்னிக்கு, உங்க பையன் பண்ணி வெச்ச சிராத்தத்துல பரம சந்தோஷம்'' என்று கரம் குவித்து அவருக்கு நன்றி தெரிவித்தார். வேங்கட சுப்ரமண்ய ஐயருக்கோ குழப்பம்!

திருவிசநல்லூர் திரும்பியவர், மகனை அழைத் தார். ''மணஞ்சேரிக்குப் போய் நீ சிராத்தம் செஞ்சு வெச்சதா அவரே சொல்றாரே... ஒரு ஜோடி வேஷ்டியும் ஐந்து ரூபாயும் தட்சணையா தந்தாராமே?'' என்றவர், தன் மகனின் முகத்தை ஏறிட்டார்.

அதிர்ந்து போனார் ஸ்வாமிகள். 'என்னது... நான் சிராத்தம் செஞ்சு வெச்சேனா? ஆஞ்சநேயர் கோயில்ல உக்காந்து, ராம நாமத்தை அல்லவா ஜபித்துக் கொண்டிருந்தேன்? அப்படியெனில், என் தந்தை இட்ட பணியை நிறைவேற்ற எனக்கு பதிலாக ஸ்ரீராமனே என் வடிவில் சென்றாரா?' என்று விதிர்விதிர்த்துப் போனார் ஸ்வாமிகள்.

தனது ராம பக்தி தடைபடக் கூடாது என்பதற்காக, ஒருவருக்கு சிராத்தம் செய்து வைத்ததுடன், அதற்கான சம்பாவணையான வேஷ்டி மற்றும் பணத்தையும் தன்னிடமே சேர்த்த தெய்வத்தின் கருணையை எண்ணி உருகினார் ஸ்வாமிகள்.

தனக்கு சேவை செய்யும் பக்தனின் பணியை நிறைவேற்ற, அந்த பரந்தாமனே சென்று சிராத்தம் செய்த அற்புதத்தை அறிந்து ஊரே வியந்தது.

ராமாயண உபந்யாசத்தை எங்கே கேட்க நேர்ந்தாலும், உணர்ச்சி வசப்பட்டு விடுவார் ஸ்வாமிகள். ஸ்ரீராமனுக்கு நேர்ந்த சோகங்களை உபந்யாசகர் உருக்கத்துடன் சொல்லும் போது, தன்னையே மறந்து அழுது விடுவார் ஸ்வாமிகள். பெற்றோர் விருப்பப்படி உரிய பருவத்தில், ஜானகி எனும் நங்கையைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் தந்தையார் இறைவனடி சேர்ந்து விட, தாயார் மற்றும் மனைவியுடன் வாழ்ந்து வந்தார்.

தேசமெங்கும் பாத யாத்திரை செய்து ராம ஜபம், உஞ்சவிருத்தி, பூஜை, உபந்யாசம், பஜனை என்று பாகவத தர்மம் எதையும் விடாமல், அற்புதமாக நடத்தி வந்தார் ஸ்வாமிகள். நாம சங்கீர்த்தனத்தில் இவரது ஈடுபாட்டைக் கண்டு பிரமித்த ஆன்மிக அன்பர்கள், இவருக்கு சீடரானார்கள். யாத்திரையில் இவருடன் பங்கேற்று தொண்டு செய்து மனநிறைவு அடைந்தனர்.

ஒரு முறை, மனைவியுடன் அயோத்திக்குப் பயணித்தார் ஸ்வாமிகள். அப்போது இவரது கனவில் ஸ்ரீபோதேந்திரர் தோன்றி, 'மீண்டும் தென் திசைக்கு போ. அங்கு உன்னால் ஒரு நற்காரியம் நிகழ இருக்கிறது' என்றார். குருநாதர் இட்ட கட்டளைப்படி மறுநாளே வடக்கில் இருந்து தெற்கே புறப்பட்டார்.

தஞ்சை வளநாட்டுக்குத் திரும்பியதும், மருதா நல்லூர் எனும் ஊருக்கு வந்தார். இங்கு வசித்து வந்த வேங்கடராமய்யர் எனும் தனவான், ஸ்வாமி களின் அற்புதங்களை அறிந்து, அவரை அழைத்து உபசரித்தார். தனது இல்லத்திலேயே தங்க வேண்டும் என்று வேண்டினார். ஸ்வாமிகளும் சம்மதித்தார். பின்னர் தாயார் மற்றும் மனைவியுடன் மருதாநல்லூரில் வாழ்ந்து வந்தார் ஸ்வாமிகள். உஞ்சவிருத்தி, நாம ஜபம் என்று நாட்கள் நகர்ந்தன.

ஸத்குரு ஸ்வாமிகளை 'தெற்கே போ' என்று போதேந்திரர் பணித்தார் அல்லவா? எதற்காக ஸ்ரீபோதேந்திரர், இவரை இங்கே அனுப்பினார்?
ஸ்ரீபோதேந்திரர் மகாசமாதிக்குப் பிறகு பக்தர்கள் ஏறக்குறைய அவரை மறந்தே விட்டனர். இவரது அதிஷ்டானம் இருக்கிற திசையைக் கூட மறந்து விட்டனர். தனது அதிஷ்டானத்தைக் கண்டுபிடித்து, நாம ஜபத்தைப் பிராபல்யமாக்கும் வல்லமை ஸத்குரு ஸ்வாமிகளுக்கு மட்டுமே உண்டு என்பதை உணர்ந்த ஸ்ரீபோதேந்திரர், இதற்காகவே ஸ்வாமிகளை தெற்கே அனுப்பி வைத்தார்.

மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமி களின் காலத்தில், கோவிந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபோதேந்திரரின் அதிஷ்டா னத்தை பக்தர்கள் தரிசிக்க முடியாத நிலை! காரணம், அப்போது கரை புரண்டு ஓடிய காவிரியின் வெள்ளம் ஸ்ரீபோதேந்திரரின் அதிஷ்டானத்தை முழுவதுமாக மூழ்கடித்தது. எவருக்கும் அதிஷ்டானம் புலப்பட வில்லை. இந்த நிலையில் தஞ்சை மகாராஜாவின் விருப்பப்படி, காவிரி நதியைச் சற்றே திசை (வடப் பக்கம்) திருப்பி, ஸ்ரீபோதேந்திரரின் அதிஷ்டானத்துக்கு எதிர்காலத்தில் எந்த பாதிப்பும் வராமல் தடுப்பு வேலைகளைத் திறம்படச் செய் தார் ஸத்குரு ஸ்வாமிகள். இதில் மகிழ்ந்த தஞ்சை மகாராஜா, ஸ்ரீஸத்குரு ஸ்வாமிகளை கௌரவித்து மகிழ்ந்தான்.

ஸ்ரீபோதேந்திராளின் அதிஷ்டானத்தை மருதா நல்லூர் ஸ்வாமிகள் கண்டுபிடித்தது குறித்து ஒரு தகவல் சொல்வார்கள். அதாவது, அதிஷ்டானத்தை கண்டறியும் பொருட்டு தினமும், கால்களில் துணியைச் சுற்றிக் கொண்டு சுட்டெரிக்கும் காவிரி மணலில் படுத்து உருள்வாராம் ஸ்வாமிகள். காரணம்- மகானின் அதிஷ்டானம் இருக்கும் இடத் தில் அவரது கால்கள் படக் கூடாதல்லவா?

ஒரு நாள், ''ஸ்ரீபோதேந்திராளின் அதிஷ்டானம் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விட்டேன். இங்குதான் அவரது ஜீவன் உறங்கிக் கொண்டிருக் கிறது'' என்று ஆனந்தக் கூத்தாடினார் ஸ்வாமிகள். அப்போது உடன் இருந்த அரசு அதிகாரிகளும் பக்தர்களும், ''அதெப்படி, இங்குதான் அவரது ஜீவன் உறங்குகிறது என்பதை சர்வ நிச்சயமாகக் கூறுகிறீர்கள்? ஆற்று மணலில் எல்லாப் பகுதிகளும் ஒரே மாதிரிதான் தெரிகிறது எங் களுக்கு?'' என்றனர்.

அதற்கு ஸத்குரு ஸ்வாமிகள் சொன்னார்: ''பக்தர்களே... ஒவ் வொரு பகுதியிலும் படுத்து, செவிமடுத்தபடி உருண்டு வந்தேன். இந்த இடத்தில் மட்டும் 'ராம ராம' எனும் நாமம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறது. எனவே, இங்குதான் அதிஷ்டானம் இருக்கிறது என்பதை கண்டறிந்தேன்''

அடுத்த கணம் அங்கு கூடி இருந்தவர்கள் அனைவரும் அந்த மணற்பரப்பில் விழுந்து, ஸ்ரீபோதேந்திராளை மானசீகமா கத் தொழுதனர். பிறகு, மகாராஜா அனுப்பிய வீரர்களது துணை யுடன் காவிரியைச் சற்றே வடக்கே திசை திருப்பி, ஸ்ரீபோதேந்திரர் அதிஷ்டானம் அமைக்கப் பட்டது.



மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகள் காலத்தில் தஞ்சையை ஆண்டு வந்த மகாராஜா, சத்ரபதி சிவாஜியின் வழி வந்தவர். இறை வழிபாட்டில் தன்னைப் பெரிதும் ஈடுபடுத்திக் கொண்டவர். மருதாநல்லூர் ஸ்வாமிகளின் அபிமான சிஷ்யராக விளங்கினார் மகாராஜா.

ஒரு நாள் ஸ்வாமிகளிடம், ''நீங்கள் செல்லும் இடமெல்லாம் உங்களுக்குப் பின்னே நூற்றுக் கணக்கான பாகவதர்கள் எப்போதும் வந்து கொண்டிருக்கிறார்கள்; ராம நாமம் ஜபித்து வருகின் றனர். இவர்கள் நிரந்தரமாகத் தங்குவதற்கென்று ஒரு கிராமத்தையே உங்களுக்கு மான்யம் செய்து தர விரும்புகிறேன். இந்தக் காணிக்கையைத் தாங்கள் தயை கூர்ந்து ஏற்க வேண்டும்!'' என்றார் மகாராஜா.

ஸத்குரு ஸ்வாமிகளுக்கு மகிழ்ச்சி. ''நாம சங்கீர்த் தனம் என்றென்றும் நிலைக்க வேண்டும் என்று நீர் விரும்புவதே சந்தோஷம்! நீர் தரப் போகிற கிராமத்தை பாகவதர்கள் பெயரிலேயே மான்யம் செய்து கொடுத்து விடு. காலாகாலத்துக்கும் அவர் களது பெயரே அந்தக் கிராமத்துக்கு நிலைக்கட்டும்'' என்றார். உடனே திருவிசலூருக்கு அடுத்து இருக்கும் கிராமம் ஒன்றை, பாகவதர்களின் பெயருக்கு சாசனம் எழுதிக் கொடுத்தார் மகாராஜா. அதுவே 'பாகவதபுரம்' என்று இன்றும் அழைக்கப் படுகிறது.

இதையடுத்து பாகவதபுரம் கிராமத்தில் எண் ணற்ற பாகவதர்கள், குடும்பத்துடன் வசித்து வந்தனர். அவர்களுள் ஒருவர்- கோபால பாகவதர். மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகளின் சிஷ்யர் இவர். அதிகாலை வேளையில் காவிரியில் குளித்து விட்டு, ராம நாம ஜபம் செய்வது இவரது வழக்கம். உஞ்ச விருத்தி எடுத்து, தனது வாழ்வை கழித்தார். பிறகு, தினமும் மருதாநல்லூர் சென்று ஸத்குரு ஸ்வாமி களுக்கு பணிவிடைகள் செய்யும் பேறு பெற்றார்.

கோபால பாகவதர், தோல் சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். தன்னை தரிசிக்க வரும் கோபால பாகவதரை அடிக்கடி கட்டிப்பிடித்து, ஆசி வழங்குவது ஸத்குரு ஸ்வாமிகளின் வழக்கம். அப்போது, கோபால பாகவதர் கூனிக்குறுகி நிற்பார். 'தோல் வியாதியில் உருக்குலைந்த எனது தேகத்தை, தகதகக்கும் பொன்னிற மேனி கொண்ட ஸ்வாமிகள் ஸ்பரிசிப்பதா? அபசாரம்... அபசாரம்' என்று பல முறை தவிர்த்து வந்தார் கோபால பாகவதர்.

ஆனாலும் ஸ்வாமிகள், தன் நிலையில் இருந்து மாறவே இல்லை. ஒரு கட்டத்தில், ஸ்வாமிகளுக்கு அருகே செல்லாமல், சற்று தள்ளி நின்றபடியே அவரை வணங்கி விட்டுத் திரும்பலானார் கோபால பாகவதர். ஸ்வாமிகளின் அருளாலும் ஸ்பரிசத்தாலும் அவரது நோய் பின்னாளில் பெருமளவு குறைந்ததாம்!

உஞ்சவிருத்திக்காக வரும் வேத வித்துக்களான அந்தணர்களுக்கு நிறைந்த மனதுடன் ஒரு பிடி அட்சதை போட்டால், அது நம் இல்லத்தில் பன் மடங்காக பெருகும் என்பது நம்பிக்கை!

ஸ்ரீஸத்குரு ஸ்வாமிகள் அவ்வப்போது உஞ்சவிருத்திக்காக சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கும் செல்வது வழக்கம். ஒரு முறை,
அருகில் உள்ள திப்பிராஜபுரம் எனும் கிராமத்துக்குச் சென்றார். அவருடன் பாகவதர்கள் பலரும் சென்றிருந்தனர்.

அங்கே அக்ரஹாரத்தில் பஜனை சம்பிரதாயப் பாடல்களைப் பாடியபடியே உஞ்சவிருத்தி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு வீட்டுத் திண்ணையில் பாலகணேசன் என்கிற அந்தணன், ஸ்வாமிகள் வரும் திசையில் கால்களை நீட்டி படுத் திருந்தான். பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் பாலகணேசனிடம் வந்து, ''யப்பா... சீக்கிரம் எழுந்திரு... ஸத்குரு ஸ்வாமிகள் உஞ்சவிருத்திக் காக பாகவதர்களுடன் வந்து கொண்டிருக்கிறார். இந்த வேளையில் நீ இப்படி படுத்திருந்தால், ஸ்வாமி களையும் அவருடன் வரும் பாகவதர் களையும் அவமதிப்பது போலாகும்'' என்று படபடத்தார்.

ஆனால், இதை பாலகணேசன் லட்சியம் செய்யவே இல்லை. ''என் வீட்டுத் திண்ணையில் நான் கால் நீட்டிப் படுத்திருக்கிறேன். ஸ்வாமிகள் வந்தாலென்ன... வேறு யார் போனாலென்ன...'' என்று திமிருடன் பதில் சொன்னான். அதே நேரத் தில், ஸ்ரீஸத்குரு ஸ்வாமிகள் அவன் வீட்டு வாசலை அடைந்தார். 'வீட்டுக்குச் சொந்தக்காரனான பிராமணன் தங்களை அவமதிக்கும் வகையில் இப்படிக் கால்களை நீட்டிப் படுத்திருக்கிறானே' என்று ஸ்வாமிகளுடன் வந்திருந்த பாகவதர்கள் வருந்தினர். ஸத்குரு ஸ்வாமிகளும் அவன் மேல் பரிதாபப்பட்டார். அறியாமல் அவன் செய்யும் செயலுக்காக வருந்தினார். இருந்தாலும், இந்தப் பாபம் சும்மா விடுமா?

பாகவதர்கள் தனது வீட்டை கடந்து சென்ற விநாடி முதல் கடும் வயிற்றுவலியால் துடிக்க ஆரம்பித்தான் பாலகணேசன். வலி தாங்க முடியா மல் வீட்டுத் திண்ணையில் அப்படியும் இப்படியும் விழுந்து புரளும் பாலகணேசனை கண்டு, மனம் கலங்கிய அவன் தாயாரும் மனைவியும் செய்வதறியாது திகைத்தனர். அப்போது, எதிர் வீட்டுப் பெரியவர் ஒருவர், ''குரு அபசாரம் செய்து விட்டான் பாலகணேசன். தவிர, பாகவதர்களையும் அவமதித்து விட்டான். இதற்கெல்லாம் பரிகாரமே இல்லை. பாகவதர்களின் திருப்பாதம் பட்ட நீரை பிரசாதமாக அருந்தினால் குணமாவான்'' என்று சொன்னார்.

இதைக் கேட்டு ஆறுதல் அடைந்த பாலகணே சனது மனைவி உடனே மருதாநல்லூரை நோக்கி நடந்தாள். திப்பிராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உஞ்சவிருத்தியை முடித்து விட்டுத் திரும்பி இருந்த ஸத்குரு ஸ்வாமிகளை சந்தித்தவள், அவரின் திருப் பாதங்களில் வீழ்ந்து, கணவனின் செயலுக்காக மன்னிப்பு கேட்டாள்.

பிறகு, பாகவதர்களின் பாதம் பட்ட தீர்த்தத்தை அவளிடம் கொடுத்து அனுப்பினார் ஸ்வாமிகள். சந்தோஷத்துடன் வீடு திரும்பியவள், வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்த கணவனுக்கு அந்த தீர்த்தத்தை அருந்தக் கொடுத்தாள். அதன் ஒரு துளி பாலகணேசனது வாயில் பட்டதுமே அவனது வயிற்று வலி பறந்து போனது. இதன் பின் ஸ்ரீமடத்தின் காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான் பாலகணேசன்.

தாயாரின் மறைவுக்குப் பிறகு, தன் முக்கிய சிஷ்யரான பச்சை கோதண்டராம ஸ்வாமியிடம் விடை பெற்றுக் கொண்டு, மருதாநல்லூரில் இருந்து புறப்பட்டார் ஸ்வாமிகள். அவரது பயண நோக்கத்தை அறியாமல், அவரின் சிஷ்யர்களும் பின்தொடர்ந்தனர்.

கும்பகோணம்- திருவையாறு சாலையில் கணபதி அக்ரஹாரத்துக்கு அருகே உள்ள ஆடுதுறை பெருமாள் கோயிலுக்குச் சென்று, ஸ்வாமி தரிசனம் செய்தார். சிஷ்யர்கள் ஸ்ரீராம நாம ஜபம் செய்து கொண்டிருந்தனர்.

அன்று ஸ்ரீராம நவமிக்கு முந்தைய தினம். வருடம்- 1817.

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஸ்வாமி கள் தன் சிஷ்யர்களைப் பார்த்து, ''பக்தர்களே! மேலே பாருங்கள்... என்னை அழைத்துச் செல்வதற்காக பகவான் மகாவிஷ்ணு, விமானத்துடன் வருகிறார். என் பயணம் சிறக்கும் வகையில், அனைவரும் பகவானின் திவ்ய நாமத்தைச் சொல்லுங்கள்... உரக்கச் சொல்லுங்கள்'' என்று கூறியபடியே பகவான் சொரூபத்துடன் கலந்து விட்டார் ஸ்வாமிகள். அப்போது அவருக்கு 41 வயது!

ஸ்ரீராதாகிருஷ்ண ஸ்வாமி மடம் என அழைக்கப்படும் ஸத்குரு ஸ்வாமிகளின் மடத்தை மருதாநல்லூரில் தரிசிப்போமா?

ஆடுதுறை பெருமாள் கோயிலில், பகவான் சொரூபத் தில் கலந்து விட்டதால், ஸ்ரீஸத்குரு ஸ்வாமிகளுக்கு அதிஷ்டானம் இல்லை. அவர் ஆராதித்த திருமடமே, அவரது நினைவாலயமாகப் போற்றப்படுகிறது.

ஸ்வாமிகளுக்கு ராதாகிருஷ்ணதாசன் எனும் சிஷ்யர் ஒருவர் இருந்தார். இவர் சிறுவனாக இருக்கும் போதே தன்பால் ஏற்று, இறை இன்பத்தை அவனுக்கு போதித்து அருளினார் ஸ்வாமிகள்.

குரு பக்தியின் காரணமாக இந்த மடத்தின் மீது பிரியம் கொண்டு, சில கட்டுமானங்களைத் திறம்படச் செய்தவர் ராதாகிருஷ்ணதாசன். எனவே, இவரது திருப்பெயரைக் கொண்டு இந்த மடம் ஸ்ரீராதாகிருஷ்ண ஸ்வாமி மடம் என்று அழைக்கப்பட்டது.

ஸ்ரீஸத்குரு பீடாதிபதிகளின் பரம்பரை வருமாறு: இதன் ஸ்தாபகர் ஸ்ரீஸத்குரு ஸ்வாமிகள் (1803- 1817). இவருக்குப் பின் 2-வது பீடாதிபதியாகப் பொறுப்பேற்றவர் பச்சை கோதண்டராம ஸ்வாமிகள் என்கிற ஸ்ரீகுரு ஸ்வாமிகள் (1817- 1848). ஸ்வாமிகள் மருதா நல்லூரில் தங்குவதற்கு இடம் மற்றும் வசதிகள் செய்து கொடுத்த வேங்கடராமய்யரின் மகன் இவர்.

இவரை அடுத்து 3-வது பீடாதிபதியாக ஸ்ரீகுரு கல்யாணராம ஸ்வாமிகள் (1848- 1916), 4-வது பீடாதிபதியாக ஸ்ரீகுரு கோதண்டராம ஸ்வாமிகள் (1916- 1917), 5-வது பீடாதிபதியாக ஸ்ரீகுரு கல்யாணராம ஸ்வாமிகள் (1917- 1996) ஆகியோர் நிர்வகித்து வந்துள்ளனர். இந்தப் பரம்பரையில் தற்போது 6-வது பீடாதிபதியாக பொறுப்பேற்று ஸ்ரீமடத்தை நிர்வகித்து வருபவர் ஸ்ரீகுரு கோதண்டராம ஸ்வாமிகள்.

உஞ்சவிருத்திக்குச் செல்லும்போது ஸத்குரு ஸ்வாமிகளுக்கு, அவரது சீடர்கள் வெண்கொற்றக் குடை பிடித்தபடியும் இரு புறமும் வெண்சாமரம் வீசியபடியும் வருவர். இரண்டு சீடர்கள் வெள்ளித் தடி ஏந்தியபடி முன்னே செல்வார்கள். இந்த உஞ்சவிருத்திக் காட்சியே அத்தனை அழகு!

தஞ்சாவூர் மகாராஜா, ராமநாதபுரம் மன்னர், சிவகங்கை ராஜா முதலானோர் இந்த மடத்துக்கு பல உதவிகளைச் செய்துள்ளனர். ஸ்வாமிகள் தன் கைப்பட எழுதிய கிரந்தங்கள் இங்கே பாதுகாப்பாக பூஜையில் வைக்கப்பட்டுள்ளன.

அழகிய வண்ண ஓவியமாக ஸ்வாமிகளின் திருவுருவம் பிரதானமாகக் காணப்படுகிறது. தவிர, அவரது உற்ஸவர் விக்கிரகமும் உண்டு. பஜனை சம்பிரதாயப்படி எல்லா உற்ஸவங்களும் சிறப்பாக நடந்து வருகின்றன. ஸ்வாமிகள், இறைவனுடன் இணைந்த பங்குனி மாதம் சுத்த அஷ்டமி (வளர்பிறை) அன்று வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

தன்னலம் கருதாமல், இறை நாமத்தை ஜபிப்பதையே உயிர் மூச்சாகக் கொண்டு, இறை வனுடன் ஐக்கியமாகி விட்ட மருதாநல்லூர் ஸ்ரீஸத்குரு ஸ்வாமிகளின் திருப்பாதம் பணிவோம்!